Showing posts with label சென்ரியுவாய்த் திருக்குறள். Show all posts
Showing posts with label சென்ரியுவாய்த் திருக்குறள். Show all posts

சென்ரியுவாய்த் திருக்குறள் - 261 to 265

அறத்துப்பால் - துறவறவியல் - தவம்


குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 
அற்றே தவத்திற் குரு.

ஹிஷாலீ சென்ரியு 

தீமை வரவு 
நன்மை செலவு 
தவம் ...!

குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை 
அஃதிலார் மேற்கொள் வது.

ஹிஷாலீ சென்ரியு 

முற்பகல் ஒழுக்கம் 
பிற்பகல் தவம் 
வீண் போகாது ...!

குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் 
மற்றை யவர்கள் தவம்.

ஹிஷாலீ சென்ரியு 

துறவி தவம் 
பிறவி பிணி 
மறவாதீர் ...!

குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் 
எண்ணின் தவத்தான் வரும்.

ஹிஷாலீ சென்ரியு 

கண் எதிரியை விளக்கி
நல் அறிவை காட்டும்  
தவம் ...!

குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் 
ஈண்டு முயலப் படும்.

ஹிஷாலீ சென்ரியு 

தவத்தின் பெருமை
பலன் கிட்டும் 
தெய்வங்கள் ...!


சென்ரியுவாய்த் திருக்குறள் - 256 to 260




குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் 
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.


ஹிஷாலீ சென்ரியு 

அய்யனின் திருப்பணி 
இறைச்சியை 
விடு பணி...!

கறிக்கடை பிணம் 
உயிர்க்கொல்லி பணம் 
மகிழ்ச்சியில் காய்கறிகாரன் ...!

குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் 
புண்ணது உணர்வார்ப் பெறின்.

ஹிஷாலீ சென்ரியு 

புண் இறைச்சி
புழுபோல் தின்றது 
கண்ணிருந்தும் குருடனாய் 

குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் 
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

ஹிஷாலீ சென்ரியு 

காய் உண்டு
கறி உண்ண மாட்டான்  
கருவறை கடன் பெற்றவன் 

குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் 
உயிர்செகுத் துண்ணாமை நன்று.

ஹிஷாலீ சென்ரியு 

வேள்வி அறுத்து 
உயிர் காப்பவன் 
பிரம்மன் ...!

குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 
எல்லா உயிருந் தொழும்.

ஹிஷாலீ சென்ரியு 

பாருயிர்கள் தொழுபவன்  
பாவம் செய்யா 
பைத்தியக்காரன் ...!



சென்ரியுவாய்த் திருக்குறள் - 251-255

குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள்.


ஹிஷாலீ சென்ரியு :

கோலியைத் தின்றவன் 
ஆடுகிறான் கோயிலில்
அருளில்லாமல் 

குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி 
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

ஹிஷாலீ சென்ரியு :

இறைச்சி விற்றப் பணம் 
புரச்சி செய்தது 
பாவத்தின் கண்ணீரில் 

குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம்.

ஹிஷாலீ சென்ரியு :

பேனாவை மறந்த கத்தி...
போட என்றது
இறக்கத்தை...

குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்.

ஹிஷாலீ சென்ரியு :

கொலையில்லா இறக்கம் 
விலையில்லா பாவம் 
போக்கும்...!

குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
அண்ணாத்தல் செய்யாது அளறு.

ஹிஷாலீ சென்ரியு :

கொன்றால் பாவம் 
தின்றால் நரகம் 
என்றது அறம்

சென்ரியுவாய்த் திருக்குறள்-246-250

குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி 
அல்லவை செய்தொழுகு வார்.


ஏகபோக வாழ்க்கையில் 
போலிச் சாமியார் 
இறுதிச் சடங்கு புழல்

குறள் 247:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு 
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

இல்லறம் துறவறம் 
இன்பம் பெற 
கருணைப் பொருள் தேடு 

குறள் 248:
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் 
அற்றார்மற் றாதல் அரிது.

ஏழை பணக்காரன் 
வாழ்க்கை ஏணி 
அருள் இழந்தால் உயிர் தீனி  

குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் 
அருளாதான் செய்யும் அறம்.

புத்தக அறிவு 
போலியானது 
ஞானமில்லா அருளால் 

குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் 
மெலியார்மேல் செல்லு மிடத்து.

வாயற்றவனை வதைத்து 
பாம்பிடம் அஞ்சியது 
தவளை...! 

சென்ரியுவாய்த் திருக்குறள்-241-246

குறள் 241:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள.


பலகோடி செல்வம் 
தெருக்கோடியில் தோற்றது 
அருளற்ற பொருளால்...! 

குறள் 242:
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை.

நல்நெறி தராசில் 
அருள் முள் 
துணை...!

குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல்.

அருள் கொண்ட 
உயிரை பார்த்து 
நரகம் பயந்தது 

குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப 
தன்னுயிர் அஞ்சும் வினை.

தீவினையைக் கண்டு 
கருணை உள்ளம் 
கலங்கியதில்லை 

குறள் 245:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் 
மல்லன்மா ஞாலங் கரி.

அருளுடையார் காற்று 
அகிலத்தின் 
தேன் ஊற்று...!

சென்ரியுவாய்த் திருக்குறள்-236-240

குறள் 236:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.
ஹிஷாலியின் சென்ரியு 
நேர் வழிப் புகழ் 
ஓர் உயிர் 
பிறப்புக்கு பெருமை 
குறள் 237:
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை 
இகழ்வாரை நோவது எவன். ஹிஷாலியின் சென்ரியு 
புகழ் பட வாழவிட்டாலும் 
இகழ் பட பேசுவோரை 
நோகடிப்பது தவறு 
குறள் 238:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் 
எச்சம் பெறாஅ விடின். ஹிஷாலியின் சென்ரியு 
எஞ்சிய புகழை
சேர்க்க தவரியவனை   
வையகம் பழித்து பேசும்  
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம். ஹிஷாலியின் சென்ரியு 
புகழற்ற உடல் 
விளையற்ற நிலம் 
மழுங்கிய உலகம் 
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர். ஹிஷாலியின் சென்ரியு 
பழியில்லா புகழ் 
விலை மதிப்பில்லா 
வாழ்க்கை

சென்ரியுவாய்த் திருக்குறள்-231-235

குறள் 231:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது 
ஊதியம் இல்லை உயிர்க்கு.



கொடைத் தன்மை
குன்றாத புகழ்
மனிதனின் நோக்கம் 

குறள் 232:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று 
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

உண்மையான புகழ் 
வரியவருகும் 
வாரி வழங்குதல் 

குறள் 233:
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் 
பொன்றாது நிற்பதொன் றில்.

மனிதனின் 
அழியா புகழ் 
தான தருமங்கள் 

குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் 
போற்றாது புத்தேள் உலகு.

நெடும்புகழ் ஆற்றினால் 
தேவரை விட 
தெய்வமானவன் 

குறள் 235:
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் 
வித்தகர்க் கல்லால் அரிது.

இறந்தும் இறவா
புகழுடன் வாழ்வதே 
சிறப்பு

சென்ரியுவாய்த் திருக்குறள்-226-230

குறள் 226:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள்வைப் புழி.


கரும்பாய் பசி தீர்த்து
  எறும்பாய் சேமிப்பது 
பிறவி கருவூலம் 

குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் 
தீப்பிணி தீண்டல் அரிது.

காக்கைபோல் 
சேர்கையோடு உண்பவன் 
பசி நோய் அணுகாது 

குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை 
வைத்திழக்கும் வன்க ணவர்.

கொடுக்கும் இன்பம் 
கெடுக்கும் மனம் 
அறியாது 

குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய 
தாமே தமியர் உணல்.

பெருக்கிய பொருளை 
பகிராமல் உண்பது 
பிச்சையை விட கொடியது 

குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
ஈதல் இயையாக் கடை.


ஈயா மன துயரத்தை
வென்றது 
சாதல்...! 



சென்ரியுவாய்த் திருக்குறள்-221-225

குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து.


ஈகையின் இலக்கணம் 
இல்லாதவரை
இருப்பவராக்குவது 

குறள் 222:
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் 

இல்லெனினும் ஈதலே நன்று.

நல்வழி பொருளைவிட 
வாழ் நாள் வரை 
வாரி வழங்குவதே சிறப்பு 

குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலனுடையான் கண்ணே யுள.


ஏழ்மையிலும் 
ஈகை செய்தால்  
இதயம் நூறாகும் 

குறள் 224:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் 
இன்முகங் காணும் அளவு.

இன்முகத்துடன் 
ஈகை செய்வதே 
வாழ்வில் இன்பம் 

குறள் 225:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்.

தவ வலிமையை 
வென்றது 
பிறர் பசி தீர்ப்பது 



சென்ரியுவாய்த் திருக்குறள்-216-220


குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் 
நயனுடை யான்கண் படின்.

ஊரைக் காக்கும் 
அச்சையக் கனி 
ஈ.ர நெஞ்சம் 


குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.



வலியவருக்கு உதவினால் 
தலைமுறை கிளையும் 
மருந்தாகும்

குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் 
கடனறி காட்சி யவர்.

வறுமையிலும் 
வாரி வழங்கும் கர்ணன் 
கடமை அறிவாளி

குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர 
செய்யாது அமைகலா வாறு.

உதவியால் செயலிழந்தவன்
அஞ்சினால் 
பிறவிப் பேர் வெல்லும் 

குறள் 220:
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் 
விற்றுக்கோள் தக்க துடைத்து.

கொடை விற்று 
கேடு வாங்கினான் 
உதவும் கரத்தால் 

சென்ரியுவாய்த் திருக்குறள்-211-215

குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு 
என்ஆற்றுங் கொல்லோ உலகு.


பருவம் தவறா
மழை போல் 
யாவருக்கும் உதவு 

குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு 
வேளாண்மை செய்தற் பொருட்டு.

ஊனமுற்றோருக்கு 
உதவும் பொருள் 
சிறப்பு 

குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற.

உழைப்பில்ல பெற்றோருக்கு 
உதவுபவன் 
கடவுளின் மனிதன் 

குறள் 214:
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் 
செத்தாருள் வைக்கப் படும்.

உழைக்கும் சக்தியுள்ளவன்
சக்தியில்லா மக்களின் 
ஊன்று கோல் 

குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
பேரறி வாளன் திரு.

தன் நாட்டின் வளர்ச்சிக்கு  
பாடுபடுபவனின் செல்வம் 
ஊருணி போல் ஊரும் 

சென்ரியுவாய்த் திருக்குறள்-206-210

குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால 
தன்னை அடல்வேண்டா தான்.


சுழா துன்பமரிந்தவன் 
பிறர்க்குத் தீமை 
செய்யமாட்டான் 

குறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென்று அடும்.

கொடியபகையில் தப்பித்தவர் 
தீமை பகையால்  
அழிந்தார் 

குறள் 208:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அஇஉறைந் தற்று.

நிழல் போல் 
பின்வருவது   
தீமையின் அணிகலன் 

குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் 
துன்னற்க தீவினைப் பால்.

மண்ணாக்கும் தீமை 
பொன்னாக்கும் 
தன்னை காதலிப்பவன் 

குறள் 210:
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் 
தீவினை செய்யான் எனின்.

வழி தவறிய 
தீவினை 
கேடில்லை 



சென்ரியுவாய்த் திருக்குறள்-201-205


குறள் 201:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் 
தீவினை என்னும் செருக்கு.
தீவினைக்கு  
அஞ்சுபவர் சான்றோர்
அஞ்சாதவர் தீயவர்
குறள் 202:
தீயவை தீய பயத்தலால் தீயவை 
தீயினும் அஞ்சப் படும்.
தீயினும் கொடியது 
பிறர் தீமை 
தன் நன்மை 
குறள் 203:
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய 
செறுவார்க்கும் செய்யா விடல்.
வருத்தும்‌ நட்புக்கு 
தீமை செய்யாமை 
முதல் அறிவு 
குறள் 204:
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
மறந்தும் தீமை 
செய்தால் 
தன்னையே அழித்துவிடும் 
குறள் 205:
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் 
இலனாகும் மற்றும் பெயர்த்து.
வறுமையிலும் 
தீமை செய்யாதவனே 
இன்பத்தின் பணக்காரன் 

mhishavideo - 145