சென்ரியுவாய்த் திருக்குறள்-236-240

குறள் 236:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.
ஹிஷாலியின் சென்ரியு 
நேர் வழிப் புகழ் 
ஓர் உயிர் 
பிறப்புக்கு பெருமை 
குறள் 237:
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை 
இகழ்வாரை நோவது எவன். ஹிஷாலியின் சென்ரியு 
புகழ் பட வாழவிட்டாலும் 
இகழ் பட பேசுவோரை 
நோகடிப்பது தவறு 
குறள் 238:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் 
எச்சம் பெறாஅ விடின். ஹிஷாலியின் சென்ரியு 
எஞ்சிய புகழை
சேர்க்க தவரியவனை   
வையகம் பழித்து பேசும்  
குறள் 239:
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா 
யாக்கை பொறுத்த நிலம். ஹிஷாலியின் சென்ரியு 
புகழற்ற உடல் 
விளையற்ற நிலம் 
மழுங்கிய உலகம் 
குறள் 240:
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய 
வாழ்வாரே வாழா தவர். ஹிஷாலியின் சென்ரியு 
பழியில்லா புகழ் 
விலை மதிப்பில்லா 
வாழ்க்கை

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145