Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

கொலுசு - Aug 20

இருளில் ஒளிரும் 
பூனையின் கண்ணில் 
மின்மினி பூச்சி 

ஜன்னல் திறந்ததும் 
இயற்கையுடன் பேசுகிறது 
ஒரு ஹைக்கூ 

 

கொலுசு - பிப்ரவரி 2020 ...!

தவிச்ச வாய்க்கு
தண்ணி இருந்தும்
மீனை தேடும் கொக்கு !
நெருங்கி படம் பிடித்தேன்
சுருங்கிப் போனது
தொட்டாச் சிணுங்கி ...!
 
எந்த ராஜா வீட்டுத் 
தோட்டத்திலும் பூப்பதில்லை
தங்கத்தில் பூ !
 
வீட்டுச் சுவற்றில்
மின்னும் மின்னொளியில்
வறட்டி சின்னம் ...!

கொலுசு - ஜனவரி 2020 ...!

பூட்டிய வீட்டில்
பொம்மைகளுடன்
விளையாடும் சிலந்தி ...!
ஏதோ ஒரு வாசனை
பால் கொடுக்கும்
பூனையின் மீது !

கொலுசு - நவம்பர் '19

பிச்சை பாத்திரத்தில்
பத்தோடு பதினொன்றாக
பூ விற்ற காசு
மடியில் அமர்ந்த பூனை
நொடியில் மலர்ந்தது
தாலாட்டுப் பாடல்
கடைசியாக ஒரு முத்தம்
கை கொடுக்க வில்லை
இறுதி பயணத்தில் தந்தை
முட்டை ஓட்டிலிருந்து
பிரசவிக்கப் போகிறது
ரோஜா மொட்டு

கொலுசு அக்டோபர் - 2019

மழை வெறித்த பின்னும்
மரக்கிளையில் இருந்து
விழுகிறது வானம் ...!
பார்வையின் நீளம்
வானம் வரை
பறவை எல்லாம் சிறிதாக ..!
நிலா வரும் நேரத்தில்
கீச் கீச் என்று ...
ஒலி எழுப்பும் பறவை ..!
பூவை தாண்டி
மனம் வீசுகிறது
மஞ்சள் பூசிய முகம் ...!

கொலுசு செப்டம்பர் - 2019

அதே பத்து விரல்
அலங்கோலமாய்
சிற்பியின் கைரேகை
அதே அத்தி மரம்
தொடர்பு எல்லைக்கு அப்பால்
சிட்டுக்குருவிகள்
ஓயாத அலையில்
ஒளிந்து விளையாடும்
ஒத்த செருப்பு

கொலுசு - ஹைக்கூ Aug - 2019


மழை ஓய்ந்த சப்தம் 
வாசற் கதவைத் திறக்கையில் 
வானில் ரங்கோலி
கரையில் பூ
வழி நெடுகிலும்
உதிர்ந்து திரும்பும் காற்று

கொலுசு - ஜூலை - 2019

நீர் வளையத்தில்
மிதந்து வரும் விளக்கில்
கடவுள் தரிசனம்
மனக் கதவின் வழியாக 
தினமும் போய் வருகிறேன் 
நான் படித்த வகுப்பறைக்குள்
ரகசிய முத்தம்
அசிங்கமாய் புல் வெளி மேல் 
நுரை ததும் பனித்துளி

கொலுசு - ஜூன் 2019

பழைய புல்லாங்குழல்
இன்னும் சில கூடுதலான 
ஓட்டைகள்
ஆசை ஆசையாய்
தொட்டு பார்த்தேன்
ஆசை துறந்த புத்தரை
ஊர் திரும்பும் வியாபாரி
சுருக்குப் பை நிறைய
பட்டணத்துப் பலகாரம்

கவிச்சூரியன் இதழ் மே -19

சுதந்திரப் பூமி
அகதிகளாக திரியும் 
வண்ணத்துப்பூச்சிகள்

குருவியின் அலகு வரைகையில் 
பென்சில் முனையில்
கீச்கீச் சத்தம்

மரம் வெட்டும் போது
வியர்வையில் துளிர்க்கிறது
மனிதனின் பிம்பம்

கல்லறைத் தோட்டம் 
புதிதாகப் பூக்கும் 
மெழுகுவர்த்தி பூ

எப்படி குடை பிடித்தாலும்
மௌனமாய் உடைகிறது 
நீர்க் குமிழிகள்

முன் ஜென்ம பகையோ
பறவையின் அலகில்
தவளையின் சத்தம்

என்றோ வந்து போன மழை
பரண் மேல்
துருப்பிடித்த குடைக் கம்பி

கொலுசு - மே 2019

பனியுறைந்த மரக்கிளைகளில்
சிக்கியிருக்கிறது
சிவப்பு நிற பலூன்

பெண்ணினமே இல்லாமல் போகலம் ...!


காமம்
இங்கே கடலைப் போல்
விரிந்து கிடக்கிறது

கட்டி வைத்து உதைப்பதற்கும்
விட்டுக் கொடுத்து பிழைப்பதற்கும்
பட்டுவாட நடத்துகிறது அரசு

கைவசம் எல்லாம் இருந்தும்
வலை வீசி தேட தேவையில்லை
எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும்
ராணுவத்தை போல்
சுட்டுத்தள்ள ஏன் இன்னும் தயக்கம்

இனி பொம்மையில் கூட
பெண்ணினன் இல்லாமல் போகலம்
பொறுத்திருக்காதே பொங்கி எழு
சுனாமியைப் போல்

அன்று பிறக்கும்
ஆனினமே ஒன்றிருந்தால் அது
அன்பான, பண்பான ஒழுக்கமான
இனமென்று !

(வார மலர் ஏப்ரல் 7, 2019)

சாதி ...!

சாதி பார்த்து சுமப்பதில்லை பூமி 
மதம் பார்த்து மூடுவதில்லை மண் 
இனம் பார்த்து வீசுவதில்லை காற்று
மொழி பார்த்து பேசுவதில்லை மழை
நிறம் பார்த்து எரிப்பதில்லை சூரியன்
மனிதா 
நீ 
மட்டும் ஏன்
இத்தனையும் பார்க்க பழகிக்கொண்டாய் !  

(பெண்கள் மலர் எப்ரல் 13, 2019 - தினமலர் இணைப்பு)

படைப்பு வளம் - வசீகரன்

சில ஹைகூக்கள் ஒரு பார்வை: அக்டோபர் - 2018
படைப்பு வளம் - வசீகரன்
தமிழில் ஹைக்கூ படைப்பாளன் பரந்து விரிந்து சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான், அவனது உலகம் பெரியது கவிவடிவம் சிறியதாக இருக்கலாம் தான். காட்சி வடிவம் உலக அளவில் பெரியதாகவே இருக்கிறது.நம் படைப்பாளனுக்கு படைப்பு வறுமை என்பது இல்லவே இல்லை.

காண்பது, கேட்பது, பேசுவது, அறிவது, புரிவது என எல்லாமே அவன் உள்ளத்தில் ஹைக்கூப் பூக்களாகத் துளிர்க்கின்றன, பொருள் சிக்கனம் என்பது அவனிடம் இல்லவே இல்லை. அவனது கற்பனைக்கு வானம் கூட இல்லை எல்லை எனலாம்.

இயற்கை நயம், தத்துவம், வளமை, வறுமை,சோகம், மகிழ்ச்சி, நையாடல் என எல்லாமே ஹைக்கூ. 

படைப்பாளனுக்கு கை கொடுக்கின்றன. எண்ண எண்ண இனிக்குது என்பது போல் 'அட இதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டோம்' என்ற உந்துதலை வாசிப்பவனுக்குள் அழுத்தமாகப் பதிக்கின்றன.

மின்மினிக் கனவுகள் என்றொரு ஹைக்கூ நூல் கைகளுக்குள் வந்தது
2017 ஆம் ஆண்டின் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூலில் 4"00" ஹைக்கூக்கள் குவிந்து கிடக்க்ர்ன்றன. நாம் முன் பத்தியில் சொன்ன மாதிரி அத்தனையையும் ஹைக்கூவாகப் படம் பிடித்திருக்கிறார் நூலாசிரியர்.

நூலாசிரியரின் பெயர் : "ஹிஷாலி"

2011 இல் இருந்து எழுதுகோலை கையில் தூக்கி இருக்கும் இந்தப் பெண்கவிக்கு இதுதான் முதல் நூல் என்பது வியப்பு, அதற்குள் "மித்ரா"   துளிப்பா விருதை எல்லாம் வாங்கி வைத்திருக்கும் புத்திசாலிப் பாவலர் என்றும் சொல்லலாம்.

இந்த நூலுக்குள் நுழைந்து சில ஹைக்கூ மின்மினிகளை பிடித்துக் கொண்டு வந்து பார்க்கலாமா?

மரித்த பின்பு
உயிர்த் தெழுகிறாள்

இது ஒரு ஹைக்கூவின் முதலிரு அடிகள் அட .... என்னவொரு முரணில் மலர்ந்திருக்கிறது வரிகள். இறந்த பின்பு உயிர்த்தெழல் என்றால் இயேசுனாதரா? என்ற கேள்வி எழுகிறதா? பெண்பாலில் அல்லவா இரண்டாம் அடி நிறைவாகி நிற்கிறது,? யார் அவள்?
விழிபிதுங்கிய ஈற்றடியைத் தேடுகிறது 

நீதி தேவதை 

இது தான் அந்த நெத்தியடியான ஈற்றடி. எத்தனை வழக்குகள் ..... வாய்தாக்களால் நீதி இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது.
நீதி கிடைக்கும் போது வாதியின் ஆயூளோ பிரதிவாதியின் ஆயுளோ கூட முடிந்து போயிருக்கலாம் தானே. எனவே காலம் தாழ்த்திக் கிடைத்தாலும் அந்த நீதியும் செத்த நீதிதான் செத்தபின்பு யார்தான் வாழ்த்துவது?

சிந்தனைப் பொறியில் தீப்பற்ற வைக்கும் ஹைக்கூ இது.

கடுமையான குளிர் 
போர்த்திக் கொள்கிறது 

என்ற இரு அடிகளைப் படித்துவிட்டு, மானோ? மயிலோ? குயிலோ? என்று உங்களுக்குள் நீங்களே கேட்டுக் கொண்டால் அது தான் கவிஞரின் வெற்றி. ஆனால் அவரோ வேறு பதில் ஈற்றடியாய் சொல்ல்வார். நம் ஹிஷாலி சொல்கிறார்....

மேகம்

"மேகம் " என்பது தான் அது தரும் ஈற்றடி. என்ன நையாண்டி . மேகத்தின் வரவால்தானே வெப்ப நிலை இறங்கி குளிர் தாளாமல் போர்த்திக் கொள்கிறது என்பது தான் நம் கவிஞரின் மித நயமான மிஞ்சிய கற்பனை . மற்றொரு கவியிலும் மழையை அழகாக்க காட்சிப்படுத்துகிறார் பாருங்கள்.

கிழிந்த வானம்
தைத்துக் கொண்டிருக்கின்றன
மழைத்துளிகள்

என்ன ஓர் இயற்கை எழில் காட்சிப் பதிவு  வானம் கிழிந்தது " என்பது இடி மின்னலை எடுத்துக் காட்டும் ஒரு பழஞ்சொற் பதிவுதான். அந்தக் கிழிசலை தைப்பதாகக் கூறி , மழைத் துளிகளையே நூலாக்க கொண்டுவந்த கவிஞரின் நேர்த்தியான கற்பனைத் திறன் சுவைக்கிறது அல்லவா ? 

நிரம்பிக் கிடக்கும் கவிக்குவியல்களின் நடுவில் பல மின்மினிப் பூச்சிகள் ஒளி வெட்டிக் கொண்டே ஊடுருவிக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

மண் குதிரை / ஏறி இறங்கியது / சிறுவர் மனசு -  எனக் கூறி நம்மையும் சிறுவர் ஆக்குகிறார்.

புதுமனைப் புகுவிழா / நிரம்பி வ்ழிகிறது / வாங்கிய கடன் - எனக் கூறி சொந்த வீடு கட்டும் திண்டாட்டத்தை ஒற்றைச் சொல்லில் முன் நிறுத்துகிறார்.

அசையும் விழிகள் நடுவே / அசையாமல் நிற்கிறது / ஒரு கனவு - என்று கூறி தனி ஒரு மனிதனின் கனவுத் தேடல்களில் நுழையும் கனவுகளை காட்சிப்படுத்துகிறார்.

அன்னதானம் / பசியோடு நிற்கிறது / கோவில்மாடு - என்று கூறி உயிர் நேயத்தைப் பதிக்கிறார்.
ஹிஷாலி பலசாலியாக வருவார் என்றே தோன்றுகிறது. பெயரில் நுழைத்திருக்கும் வட உச்சரிப்பு எழுத்துக்கள் தான் அந்நியப்படுத்துகின்றன. 

கவிச்சூரியன் - டிசம்பர் - 2018 -ஜனவரி - 2019

கலாச்சர மோகம் 
முதல் பலி
பூப்படையாதப் பெண்
யாருமற்ற ஏரியில்
இலவசமாக படகோட்டும்
வாத்துக்கூட்டம்
கொழுந்து வெற்றிலை
சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது
புது பெண் முகம்
பறவையின் புலம்பல்
அருகே முனுமுனுக்கும் 
தொட்டால் சிணுங்கி
சீமந்த விழா
முதிர் கன்னியின் கையில்
கல்யாண வளையல்

கவிச்சூரியன் அக்டோபர் -- 2018

வார்த்தைகளை
குறைத்துக் கொண்டேன்
நீள்கிறது மௌனம்!

ஆழ்ந்த உறக்கம்
எனது கனவை உணர்கிறேன்
அன்பு நிறைந்த வண்ணங்களாய்

குளிர்காலக் காலை
டீசல் பிரதிபலிக்கிறது
வானவில் நிறத்தில்!

இரவு நெருங்க நெருங்க
முத்தமிடக் காத்திருக்கிறது
பனித்துளிகள்

சாலையோரம்
குறுக்கு நெடுக்குமாக
கர்ப்பிணி ஆடு

கொலுசு அக்டோபர் - 2018

நீண்ட இரவு
குறுகிய வட்டத்திற்குள்
ஏழையின் கனவு
பனி மூட்டம்
மெல்ல கலைகிறது
வானத்து ஒவியம்.
கல்லறைத் தோட்டம் 
இறந்து கிடக்கிறது 
நேற்று பறித்த பூ

கவிச் சூரியன் - செப்டம்பர் - 2018

பெரிய மலை
மோதி எதிரொலிக்கும்
மாட்டுவண்டி சப்த்தம்

மலை உச்சியை
உரசிக் கொண்டிருந்தன
மேகத் கூட்டங்கள்

காற்றடித்ததும்
மூழ்கியது
கப்பற்கரான் வாழ்வு

காலிப் பானை
நிரம்பி வழியுது
ஏழையின் பசி

ஒடும் மேகம்
மெல்ல பதுங்கும்
மலர்க் கொடி

ஆக்கம் - ஹைக்கூ மின்னிதழ் - சூலை - 2018

இலையின் அரங்கேற்றம்
தழைகீழாக
புழுவின் நடனம்

கோயில் திருவிழா
ஊதி ஊதியே பெருத்தது
பொங்கல்பானை

யாரோ ஒருவரின் வேண்டுதல்
நிறைவேறிய மகிழ்வில்
ஆலையமணி

பிரகாசமாய் எரியும் மெழுகுவர்த்தி
ஊதி அணைத்தபடி
பிறந்த நாள் கொண்டாட்டம்

வாசலில் பிச்சைக்காரி
தாண்டிச் செல்கிறார்கள்
சாமிக்கு பட்டுச்சாத்த

கவிச்சூரியன் மாத மின்னிதழ் - சூலை 2018

குழி விழுந்த கன்னம்
வந்து குவிகிறது
முத்த மழை
பச்சிக்காத கடவுள் முன்
பல வகையான
நெய்வேத்தியம்
கிறுக்கிய வானம்
அறுந்து விழும் சின்ன சின்ன
மழைத்துளிகள்
பால் இரண்டெனப்
பயிலும் திருநங்கை அழுகிறாள்
கழிவறையின் முன்
அடுத்த தலைமுறை
மண்ணை வாரிப் போடுகிறார்
மணல் வியாபாரி

mhishavideo - 145