Showing posts with label புதுமை பழமை. Show all posts
Showing posts with label புதுமை பழமை. Show all posts

ஞானியின் இருதயம்

 ஞானியின் இருதயம் வளமான எதிர்காலத்தை குறிக்கும் வலது கையிலும் மூடனின் இருதயம் வளமற்ற எதிர் காலத்தை கணிக்கும் இடது கையிலும் இருக்கும்

ஞானியின் இருதயம்
 வளமான எதிர்காலத்தைக் 
குறிக்கும் வலது கையிலும்

மூடனின் இருதயம்
வளமற்ற எதிர் காலத்தைக் 
கணிக்கும்
இடது கையிலும் இருக்கும்  ..!

புதுமை பழமை,

9 வருடத்திற்கு முன் பேசிய வார்த்தையை தூசி தட்டிப் பார்க்கும் மக்கள் மத்தியில் தெரிகிறது பகைமை 

இது பாகுபலிக்கா இல்லை பாக்கப் பிரிவினைக்கா என்ற ஐயம் தோன்றுகிறது 
ஆம் காவேரி தாண்ணீர் தர மறுக்கும் நேரத்தில் நம் தமிழர்கள் ஊட்டி அருகே ஒரு தடுப்பணை கட்டினால் போதும் தண்ணீர் கேட்டு காவேரியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற பதிவு நேற்று பார்த்தேன்  #யோசியுங்கள் ?
கடந்த 30நாட்களுக்கும் மேல் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் கடன் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர ஒரு புதிய முயற்சி மல்யா கைது ஆனா செய்தி யோசியுங்கள் ? எப்படி எல்லாம் திதை திருப்புகிறார்கள் என்று 
விவசாயி கடனை 7000 இளைஞர்கள் ஆளுக்கு 100 ரூ வீதம் கொடுத்தால் கடனை எளிதில் அடைக்கலாம் என்ற பதிவும் கண்டேன்  சரி தான் ஒரு மாதத்திற்கு data card பயன்படுத்துபவர்கள் அதைRecharge செய்வதை  நிறுத்திவிட்டு அதை இந்த மாதிரி நல்ல விசயத்திற்கு பயன் படுத்தலாம் என்றால் 
ஆட்சி எதற்கு அரசு தான் எதற்கு ?
நாட்டில் நடக்கும் கொடுமைகளை களையாமல் நாற்காலியைப் பிடிக்க சின்னம் சின்னம்மா என்று கூவிக்கொண்டே செல்கிறார்கள் ஏன் 
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள்  70 நாட்கள் மறைவாக வைக்கப்படட போது கூட நாட்டில் அமைதி இருந்தது இப்போது அந்த அமைதி எங்கே ?
ஒரே நாளில் பண முடக்கம் 
ஒரே நாளில் பதவி  ஏற்பு 
ஒரே நாளில் மறைமுக வாக்கெடுப்பு 
ஒரே நாளில் விலை மாற்றம் 
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் 
ஆனால் ஒரே ஒரு நிடம் யோசித்துப் பார்த்தால் போதும் அரசும் சரி மக்களும் சரி மாறிவிட முடியும் 
அந்த மாற்றத்தை ஏன் கொண்டு வர மறுக்கிறது நம் மத்திய அரசு 
மதுவை ஒழிப்போம் என்று குரல் கொடுத்து ஓட்டு வாங்கினோம் அதை மறந்து ஓட்டு போட்டவர்கள் வீட்டு பக்கமே மதுவைதிறக்க முயலுவது சரியா ?
சீமை கருவேலம் மரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது ஏன் ? மீத்தேன் வாயு எடுக்க தடை விதித்தோம் அதை வேறு வழியில் கொண்டு வர துடிக்கிறது நம் அரசு ஆம் எல்லா சீமை கருவேலம் மரங்களை அழித்துவிட்டால் #விறகு #கரிக்கு எங்கே போவோம் அப்போது எளிதில் மீத்தேன் வாயு வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுவோம் ஆதனால் தேவையான இடத்தில் இருப்பதை அளித்துவிட்டு தேவை இல்லாத இடத்தில் இருப்பதை பாதுகாப்போம் இதுவும் நான் ஒரு பதிவில் படித்து அறிந்தது தான் 
ஆகவே  ஒரு பிரச்னையை சமாளிக்க புது புது பிரச்சனை கொண்டு வரும் அரசுக்கு லாபம் தான் என்ன ?
மக்கள் விழித்து விட்டார்கள் இனிமேலும் ஏமாற்ற முடியாது ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒரு நன்மை இருப்பதை கண்டுகொள்கிறார்கள் முடிவில் சாத்தியமே வெல்லும் என்பதை மறந்து விடாதீர்கள் மாற்றம் கொண்டு வாருங்கள் 

ஆகவே மக்களின் நலன் கருதி அரசும் சரி ஆட்சியும் சரி நல்ல முடிவை எடுக்க வேண்டும் 

விவசாயம் காப்போம் !


700x350 farmers

விவசாயம் என்ன ?இது சாயம் போகுமா ? போகாது ஞாயமா பாத்தா விலைக்கு வென போகும் !  சயமெல்லாம் போகாது ...

ஆம் ஏழைகளை வளர விடாமல் இன்று வரையிலும் சாயம் போய் கொண்டிருக்கிறது அரசாங்கம் ,

எந்த தொழில் செய்தலும் வரி ,உரிமை, காப்பீடு என்று இழப்பை சரி செய்துகொள்ள முடியும் அனால் விவசாயத்தில் அவ்வாறு சாத்தியம் இல்லை ஏன் என்றால் இது இயற்கை சம்மந்தப்பட்டது

அதனால் தான் லாபமோ நஷ்டமோ விதைத்தவனையே சாரும் இதனால் தான் அவனால் அந்த இழப்பில் இருந்து மீள முடியாமல் இன்று அவல நிலைக்கு தள்ளப்பட்டு விடடான்

ஒரு வேளை கார்ப்ரேட் காரர்களுக்கு நம் விவசாய பூமியை கொடுத்து விட்டு அவன் சொன்ன ரேட் க்கு அரசி பருப்பு இப்படி வாங்கிக்கொண்டே இருந்தால் சுமார் 5 வருடத்தில் அவன் தான் கோடிஸ்வரன் .

ஆனால் காலம் காலமாக விவசாயம் செய்யும் ஏழைக்கு கடன் தான் "தெருக்கோடி "

இந்த நிலை மாற வேண்டும் என்றால் விவசாயத்தை காப்போம் !

எப்படி நீங்கள் தான் சொல்ல வேண்டும் ?

முதல இருந்து ஆரம்பிப்போம் 
அப்படியே நல்ல படியா விவசாயம் முடிஞ்சி ஒரு % மேல இருந்த அவங்க கடன் தொடரும் ! ஒரு % கீழ இருந்த கடனை தள்ளுபடி செய்யும், வாவ் பின்ன என்ன நாம எல்லோரும் நல்ல சோறு சாப்பிடலாம் !

விதை வாங்குறத்தில் இருந்து அறுவடை காலம் வரை card மூலமே எல்லா செலவையும் கணக்கு பார்த்து கடனை அடைச்சு மிச்ச மீதி எவ்வளவு என்று பார்த்தால் தெரியும் விவசாயின் பொறுமை !

இப்ப மோடியே யோசிப்பாரு தப்பு கணக்கு போட்டுட்டமோனு ?

செமிப்பாக மாறும் செய் கூலி சேதாரம் ...!



1 gm     8 gm
2544     20352
8 x 35 280
Total 712320
15% 106848
vat 1% 7123.2

Total 826291.2
என்னங்க மேல கணக்கு போட்டிருக்கேனா
இந்த காலத்தில் வரதட்சனை என்பது அத்தியாவசமான ஒன்றாகிவிட்டது அதற்கு காரணம் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் தான்.
அதை கொஞ்சம் மாற்றும் முறையில் ஒரு திருமணத்தில் பிறந்த கருத்தை இங்கே தெரிய படுத்த விரும்புகிறேன்
சுமார் 35 பவுன் நகை கேட்டால் அதற்கான மொத்த செலவு சுமார் ரூ 8,25,000/- ஆக்கும்
அதன் விவரம் மேலே சொல்லியிருக்கிறேன்
இதில் செய்கூலி சேதாரம் என்று சுமார் 1,25,000/- சரி நகை வாங்கிவிட்டோம் அடுத்து இந்த நகையை வீட்டில் வைத்தால் திருடன் தொல்லை கழுத்தில் அணிந்தால் வழிப்பறி தொல்லை சரி விடுங்கள் வங்கியில் வைத்தால் மாதா மாதம் வட்டி கட்ட வேண்டும். எவ்வளவு நாளைக்கு அந்த வட்டியை கூட்டி பாருங்கள் உங்களுக்கு புரியும்.
இல்லை எதோ அவசர செலவு என்று வங்கயில் அடமானம் வைக்க போனால் அதற்கும் வட்டி !!
சரி அடமான தொகை பத்தவில்லை என்றால் வெளியில் கடன் வாங்க வேண்டும் பின் அதற்கும் வட்டி கட்ட வேண்டும். இதை சமாளிக்க விற்கப் போனால் அப்போது வாங்கிய தொகையை விட சுமார் (1,25,000/- ) குறைத்து தான் விற்க வேண்டும். அதுவும் போதவில்லை என்றால் கடன் தான் தீர்வு
ஏன் இந்த போராட்டம்
நகைக்கு பதில் பணமாகவே கொடுத்து பாருங்கள் அது உங்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை கூறுகிறேன்
முதலில் அந்த 8,00,000/- யை வங்கியில் FD போடுங்கள் சுமார் ஒரு வருடத்திருக்கு 
(100000 /- க்கு ரூ 800 வீதம் வட்டி தொகை (800x8=6400 x12 = 76,800/-) கிடைக்கும் .

இதில் வருட வட்டி 10,000/- க்கு மேல் போனால் வங்கி வரி 10% (7680) போக உங்களுக்கு எவ்வளவு லாபம் இருக்கிறது இதனால் நாடும் வருமான வரியால் பயன் பெரும்.
இல்லை இருவர் கணக்கிலும் பாதிப்பாதியாக போடுங்கள் இன்னும் வருமான வரி குறையும் வாய்ப்பு உள்ளது.
இந்த இலாபத்தை வைத்துக்கொண்டு உங்களின் சிறு சிறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்
இல்லை என்றால் உங்கள் வருங்கால குழந்தையின் கல்வி செலவிற்கு பயன்படுத்தாலம்,மாதம் மாதம் Insurance தொகை கட்டலாம், சீட்டு போடலாம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இல்லை அதே வங்கியில் மறு சேமிப்பில் சேமிக்கலாம், இதனால் உங்கள் மனைவி வீட்டில் இருந்துகொண்டு மாதம் ஒரு வருமானத்தை ஈட்டுவது போல் தன்னம்பிக்கைபிறக்கும்.

கொஞ்ச நாள் சுய கழித்து தொழில் தொடங்க உதவியாக இருக்கும்
சும்மா அறையில் பூட்டி கிடக்கும் நகை எவ்வளவு உதவியாக இருக்கிறது 
இதனால் நிச்சயம் ஒரு குடும்பம் வளரும் என்றால் நாடு வளராதா ?

யோசியுங்கள் இப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் நகையின் மீது இருக்கும் மோகம் குறையும், விலையும் குறையும் கீழ் மட்டத்தில் இருக்கும் குடும்பங்களும் பயனைடைவார்கள் என்று நான் நம்புகிறேன்.

பள்ளியல்ல பார்சியாளிட்டி ...!



டிரிங் .... டிரிங் ... 

ஹலோ சொல்லுங்க மேம் 

நீங்க மோகன் அம்மாவா ? 

எஸ் 

ஒகே நாளைக்கு 9 மணிக்கு ஸ்கூலுக்கு வாங்க 

ஏன் மேடம் எதாவது பிராபலமா ? 

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும் கே 

ஒகே மேடம் ...

போனை வைத்த அந்தப் பெண் புலம்பிக் கொண்டே இருந்தாள் ஐயோ என் பையன் எதாவது தவறு செய்துவிட்டானோ என்னவோ என்று 

அன்றைய பொழுது விடிந்தது மறு நாள் காலையில் 9 மணிக்குப் பள்ளிக்குச் சென்றாள் அங்குள்ள அலுவலகத்தில் பணிபுரியும் மேல் அதிகாரியைக் கண்டார் அங்கு .... 

உங்கள் பையன் நல்லாப் படிக்கிறான் ஆனால் ரெம்பச் சேட்டைச் செய்கிறான் எல்லாப் பசங்களையும் அடிக்கிறான் அடுத்துப் போவது 6 வது வகுப்பு இப்படியே சேட்டைச் செஞ்சா TCயைக் கொடுத்து அனுப்பிவிடுவோம் என்றார்கள் 

என்ன மேடம் இப்படிச் சொல்லிடேங் அவன் நல்லாப் படிக்கவேண்டும் என்று தான் இங்க சேர்த்தோம் நீங்களும் இப்படிச் சொன்னா எப்படி மேடம் 

புரியுதுமா இருந்தாலும் இங்க படிக்கின்ற எல்லாப் பசங்களும் பெரிய பெரிய பணக்காரங்க அவுங்கப் பையன உங்க பையன் அடிச்சா எப்படிச் சொல்லுங்க நீங்களும் ரெம்பக் கஷட்டப்பட்டுத் தான் பீஸ் கட்டுறேங்க ஏன் கவர் மெண்ட்பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டியது தானே இங்க வந்து ஏன் கஷ்டப்படுறேங்க என்றனர் 

அதற்கு அவள் நான் ஏழைதான் இல்லேன்னு சொல்லல மேடம் இவனாவது நல்லாப் படிக்கணும் என்ன மாதிரியே கஷ்டப்படக் கூடாது என்று தான் கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க மேடம் இனிமேல் இப்படி நடக்காமல் கண்டிச்சி வைக்கிறேன் 

சரி விடுங்க நாளைக்கு வந்து ஒரு லட்டர் எழுதிக்கொடுங்க இந்த மாதிரி என் பையன் இனிமேல் எந்தச் சேட்டையும் செய்யமாட்டான் அப்படிச் செய்தால் TCயைப் பாதியில் கொடுத்துவிடுங்கள் என்று கே 

சரிங்க மேடம் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தாள் தன் பையனை அடியடியென அடித்து விட்டாள் 

அதற்கு அவள் மகன் அம்மா அடிக்காதே நானா வம்புக்கும் போகவில்லை எல்லாப் பசங்களும் என்னை அடித்ததால் தான் நானும் திருப்பி அடித்தேன் என்றான் 

சரி டா நாளைக்கு உங்க மேடமிடம் சொல்லலாம் என்றாள் 

சரி அம்மா என்றான் 

மறு நாள் சொன்று நடந்ததை விவரமாகக் கூறினார்கள் இருந்தும் என் மகனும் தவறு செய்யமாட்டான் என்று கூறவில்லை மேடம் அவனும் தவறு செய்திருக்கலாம் அதுக்காக இவ்வளவு பெரிய தண்டனையா? சொல்லுங்கள் என்றாள் அதற்கு அந்த மேடம் 

அதையெல்லாம் பொருட்படுத்த முடியாது அவுங்கப் பெரிய இடம் நீங்க யாரைக் கூட்டி வந்தாலும் இது தான் முடிவு ஒகே என்றதும் 



சரியென்று திரும்பியவர்கள் கண்ணீர் மல்கக் கடவுளை வதைத்தார்கள் கடவுளே பாதியில் என் கணவன் என்னை விட்டுப் பிரிந்தது என் தவறா? இப்போது நான் கூலி  வேலை செய்து என் குழந்தைகளைப் படிக்க வைப்பது என் தவறா இலலை நான் அந்தப்பள்ளியில் உண்மையைப் பேசியது என் தவறா ? இப்படி எல்லாத் தவறையுமே விதி என்ற ஒரே வார்த்தைக்குள் அடக்கி என்னை ஆட்டிபடைக்கிறாயே நான் என்ன பாவம் செய்தேன் சொல் என்னையும் என கணவன் இறந்த அன்றே எடுத்துக் கொண்டால் இப்போது இவ்வளவு கொடுமையை நான் எதிர்கொள்ள வேண்டாமே என்று புலம்பினாள் 

கடவுள் என்ன நேரில் வந்து காட்சிக் கொடுக்க என்ன திரைப்படமா? இல்லையே இது தலை விதிப் படம் பட்டுத் தான் சாக வேண்டும் என்றாள் 

உடனே தன் பையன் ஓடிவந்து அம்மா அழாதே அங்கு எல்லாப் பசங்களும் என்னை அடிக்கிறாங்கமா அதனால் தான் நானும்திருப்பி அடிச்சத் தவறு என்கிறார்கள் அதற்குப் பதிலாக என்னை வேறு பள்ளியில் சேர்த்தால் வேறு பசங்கள் வேறு நடப்புகள் சோ நான் இனிமேல் இந்த மாதிரித் தப்புப் பண்ணாம என்ன யார் அடிச்சாலும் கிளாஸ் டீச்சரிடம் போய்க் கம்ளைண்ட் பண்ணுகிறேன் சரியாமா என்றான் 

அதைக் கேட்டத் தாய்க் கட்டி அனைத்து முத்தமிட்டு கண்ணே உன்னை நான்  வேறு பள்ளியில் சேர்க்கிறேன்  என்றாள் 

இருந்தும் மனதிற்குள் ஒரு பயம் அங்கும் இதே மாதரிப் பார்சியாளிட்டிப் பார்த்தால் என்ன செய்வது என்று ! 

சரி அப்படி இருக்காது என்ற மனப் போராட்டத்தில் வேறு பள்ளியில் அட்மிசன் போட அப்ளிகேசன் வாங்கச் சென்றார்கள் 

அங்கு உள்ள அலுவலக அதிகாரி ஒருவர் ஏன் அந்தப் பள்ளியில் இருந்து இங்குச் சேற விரும்புகிறேர்கள் என்றனர் 

அதற்கு அங்குப் பீஸ் அதிகம் சோ எங்களால் கட்ட முடியல அதான் இங்குச் சேர்க்கலாம் என்று நினைத்தோம் 

ஒகே இந்தாங்க அப்ளிகேசன் பார்ம் ஐநூறு ரூபாய்த் தாருங்கள் அடுத்த நாள் என்ரன்ஸ் எக்ஸாம் 



ஒகே மேடம் ரெம்ப நன்றி என்று திருப்பினார்கள் .! 



நன்றி !
                                                                                                   -~-

இன்றைய சூழலில் ஓர் எறும்புக் கடித்தால் அதைக் கொன்றுவிடத் துடிக்கும் மனது சரியா தவறா என்று யோசிப்பதில்லையே அதே போல் அந்த எறும்புக்கு இவர் பணக்காரர் இவர் ஏழை என்று தெரிவதில்லை அனால் மனித னத்தில் மட்டும் ஏன் இந்த வேற்றுமை இதனால் ஒரு சிறு குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாய் நிற்கிறது இந்தத் தவறுக்கு யார் காரணம் பணமா? பார்சியாளிட்டியா ?) 



mhishavideo - 145