Showing posts with label ஈழம் கவிதைகள். Show all posts
Showing posts with label ஈழம் கவிதைகள். Show all posts

ஈழ அழுகுரல்......!

மயானமாய் மாறிய 
மரணக் குழியில் 
அம்மனமாய் 
அழுகிய ஈழ உடல் 

சிங்களத்து முள்வேலியில் 
சிறைக் கெஞ்சிய உயிர் 
வேடந்தாங்கலாய் 
வெளியேறிய சாபம் 

கோழி கூடாரத்தில் 
கொத்தித் தின்னும் 
பருக்கையாய் 
பசியை மறந்த ஈழ பாவிகள் 

தாய்ப்பால் அருந்திய 
தமிழன் தலையில்லா 
குதிப்பால் 
குடிக்கும் ஈழத்து மண் 

கழுகுக்கும் காக்கைக்கும் 
இரையாய் கருகிய உடல்கள் 
இரத்தக் கரைகளாய் 

உறவைப் பார்த்து அழுகும் 
பச்சிளம் குமரிகள் 
உடுத்த ஆடையில்லா 
வெக்கத்தில் 
முகத்தை மூடும் 
ரத்த விரல்கள் 

சிங்கள வேலிகளுக்குச் 
சரீர பின்னலாய் 
தன் மூச்சை நிறுத்த 
சுதந்திரமில்லை 
சுதந்திர தேசத்தில் 

ஒற்றைக் கால் 
மரத்தைப் போல் 
சட்டைக் கால் போட்ட 
சாம்பவன்கள் 
நாடோடியாக 

ஆறடி தோண்டவில்லை 
அழுவதற்கும் யாருமில்லை 
அடைக்கலம் பூண்ட 
ஈழனுயிர் 
அணையா விளக்காய் 

உறவே அறியா உருவத்தில் 
உதிர்ந்து தொங்கிய 
மொட்டை சரீரங்கள் 

விடியும் நாளை நோக்கி 
விழித்திருக்கும் 
ஊமை விழிகள் 

ஈழ தமிழச்சி..!

பெண்ணின் அங்கத்தைப் 
பேன் பார்த்த ராணுவம் 
கறுப்பைக் காமத்தால் ரசித்த 
கயவர்களைக் கண்டு 
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய் 

முடியும் விடியலாய் 
மின்னும் வானம் 
என் பக்கத்துத் தமிழன் 
ஈழத்தில் ஒளிரும் போது 

என்றோ அரை கூவிய 
புள் முளைக்காகச் சீனாவைப் போல் 
பேர் பெற்ற நாடாய் மாறும் 

அன்று 
என்னைத் தீட்டிய ராணுவமே 
என் தமிழைத் தீட்டித் 
தங்கப் பதக்கம் தரும் நாள் 
எந்நாள் என்றோவென 

காத்திருக்கிறோம் 
கண்ணீர் சொட்டக் 
கரையைத் தேடும் 
ஈழ தமிழச்சியாய் 

ஈழம் பாடாத இதயம் ...!


ஈழத்தின் குருதி நனைத்து 
எழுது கோல் 
அழுகிறது என்தேச 
குறும்படங்களைக் கண்டு 

தமிழ் வண்ணப் பூக்களுக்கும் 
மரணதண்டனை 
நடு ரோட்டில் நாறும் பிணங்கள் 

பெருக்க ஆளில்லாமல் 
பதுக்கிய பிணங்கள் 
பொட்டலங்களாய்  
ஒரே தீ பந்தத்தில் 
சமர்ப்பணம் 

மார் மறைத்து 
பால் குடித்த குழந்தை 
மரணக்குழியில் மண்ணோடு 
மாண்ணானமாயம்

மழையாய் சிந்திய 
கண்ணீரில் மக்கிய 
விதையாய் முளைக்காத 
ஈழப் பிணங்கள் 

விதியை எதிர் நோக்கி 
வாழ்ந்த ஈழம் வீழ்ந்தது 
சதியின் மதி கேட்டு 
சடலங்களாய் 

என்றோ தான மீட்டக் 
குருதிகள் இன்று 
சுட்ட மணலில் 
விதைக்கிறது இராணுவத்தால் 

நுண்ணறிவில்லா பிணக்கணக்கை 
எண்ணப்பழகிய பள்ளி 
சிறார்கள் பிணப்பள்ளியில்

சிறகில்லா  பறவைபோல் 
சிதைந்த உடலைக் காக்க
வேடந்தாங்கலாய் 
திரியும்  ஈழம்  

ஆகாய உணவை எதிர்நோக்கி 
அசையாத விழிகள் 
மௌன விரதத்தில் 
இரை தேவனைத் தேடியபடி 
ஈசல் வாழ்க்கை போல் 
இறுதிச் சடங்கு 
ஈழத்துயிர்கள் ...!

ஈழத்தின் விடியல்...!

சிங்களத்து இதயம் அங்கே 
சின்னா பின்னமாய் சிதறுகிறது 
இறைவா நீ சிலையாய் நின்று 
சீரும் சிறப்புமாய் சிரிக்கிறாயோ 

இங்கே பச்சிளம் குமரியின் மேனியைப் 
பஞ்சு மெத்தைபோல் எண்ணி கஞ்சு கஞ்சாய் 
கழற்றி காற்றில் எறிந்தார் போல் 
துயிலுருகிய ராணுவத்தைத் தடுக்க 
ராமனும்   தூங்கிவிட்டானோ

அசுரனை அழித்த இறைவா 
அரியதோர் தமிழனைக் காக்க 
புதியதோர் புரட்சி செய்து என் 
புண்ணிய சிங்களத்தை மீட்க 

பன்னிரு விடியலில் பதுங்கிய வீரத்தை 
என்னுயிர் தமிழனின் குருதியில் பூட்டி 
தன்னுயிர் நாட்டை காக்கத் தமிழ்த் தாயே 
நீ மீண்டும் பிறிவே ...!

mhishavideo - 145