ஈழத்தின் விடியல்...!

சிங்களத்து இதயம் அங்கே 
சின்னா பின்னமாய் சிதறுகிறது 
இறைவா நீ சிலையாய் நின்று 
சீரும் சிறப்புமாய் சிரிக்கிறாயோ 

இங்கே பச்சிளம் குமரியின் மேனியைப் 
பஞ்சு மெத்தைபோல் எண்ணி கஞ்சு கஞ்சாய் 
கழற்றி காற்றில் எறிந்தார் போல் 
துயிலுருகிய ராணுவத்தைத் தடுக்க 
ராமனும்   தூங்கிவிட்டானோ

அசுரனை அழித்த இறைவா 
அரியதோர் தமிழனைக் காக்க 
புதியதோர் புரட்சி செய்து என் 
புண்ணிய சிங்களத்தை மீட்க 

பன்னிரு விடியலில் பதுங்கிய வீரத்தை 
என்னுயிர் தமிழனின் குருதியில் பூட்டி 
தன்னுயிர் நாட்டை காக்கத் தமிழ்த் தாயே 
நீ மீண்டும் பிறிவே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145