Showing posts with label சமுதாயக் கவிதைகள். Show all posts
Showing posts with label சமுதாயக் கவிதைகள். Show all posts

என் பரமாவது குறையும் ...!

 Image

தலைக்கு மேல்
பாரமாக இருக்கும்
"கடவுளை"
நிகரான விலை கொடுத்து
வாங்கினால்
என் பரமாவது குறையும் ...!

கொல்லுகிறது ...!

 

எனக்கு தெரிந்தே
ஹிஷாலி

இங்கு இத்தனை பெண்களை
கடந்திருக்கிறாய் என்றால்

எனக்குத்
தெரியாமல்
எத்தனை பெண்களை
கடத்தியிருப்பாய்
என்ற சந்தேகமே
என்ன
அணுவணுவாக
கொல்லுகிறது ...!

விவசாயின் உள்ளம் ...!

படுக்க பாய் இருக்கிறது பறக்க மின்விசிறி இருக்கிறது இருந்தும் களத்தில் பரிதவிக்கும் குருவிகள் சத்தம் கேட்டு உறக்கம் இல்லாமல் தவிக்கிறது விவசாயின் உள்ளம் ...!

 

ஞாயத்தை


காமத்தை வேட்டையாடும் 
மிருகத்திடம் 
ஞாயத்தை 
எதிர் பாக்கமுடியாது !

பெண் தேவதைகள் ...!


பெண் தேவதைகள் 
சிதைக்கப்படுகிறார்கள் 
ஆண்னென்னும் 
அரக்கனிடம் இருந்து !

கைகள் ...!


கீழத்தெருவில் 
குதித்த சூரியன் 
மேலத்தெருவில் 
விழும் பொழுது 
வணங்க மறுப்பதில்லை 
கைகள் ...!

வயிறு காலியானதால் ...!



வயிறு காலியானதால் 
கழிவறை 
சுத்தமாக உள்ளது !

அழிப்படகு !



மனமெனும் ஓடத்தில் ஏறி 
மரணமதை தோளில் சுமத்தி 
மரகத மீனுன்னை காண 
மரத்தினால் ஆன 
மரத்தை குத்தி மார் துளைக்கும் 
மகசூல் வழியே நின் 
மாதர் சங்கத்தின் மனைவி 
மக்களை காண திரும்பும் அழிப்படகு !

mhishavideo - 145