Showing posts with label நானிலு. Show all posts
Showing posts with label நானிலு. Show all posts

தன்முனைக் கவிதைகள் நானிலு - 80

உசுரோடு விளையாடும்
காதலை ஒலிம்பிக்கில்
வைத்தால் நானே 
முதலிடம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 79

மேகத்தை வரைந்துவிட்டு
அதன் வண்ணத்தைத்
தேடினேன் அவளின்
கூந்தலில் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 78

நாலு காசு சம்பாதிக்க
நாளுக்கு நாள்
பொய் சொல்லுகிறார்
நல்ல சூனியக்காரி ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 77

காதல் கலவரத்தில்
உடல் கருகி
மணம் வீசுகிறது
சாதி மல்லி ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 76

அடித்து நொறுக்கப்பட்ட
சிலைக்கு உயிர்
கொடுத்தது
தடுத்து நிறுத்திய போராட்டம் ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 75

திருநெல்வேலி
அல்வாவைக்
கட்டிப் போட்டு இழுக்கிறது
சிட்டுக் குருவி லேகியம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 74

உன் ஒரே ஒரு
புன்னகையால்
குறைந்தது
உயர் ரத்த அழுத்தம்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 73

கார சாரமாகச்
சத்தம் கேட்கிறது
கதவைத் திறந்ததும்
மழையின் வாசம் ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 72

மண்ணில் எதை
விதைத்தாலும்
விருட்சமாகும்
மனிதனைத் தவிர !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 71

பெரிய பெரிய
கனவுகளை எல்லாம்
தவிடு பொடியாக்கியது
சிறுதானியம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 70

துப்புரவுத் தொழிலாளியை
வரைந்து முடித்தேன்.
குப்பையான மனம் 
தூய்மையானது.

தன்முனைக் கவிதைகள் நானிலு - 69

மயங்கொலி பிழை 
மாதம் ஒரு முறை 
தொட்டிலை நிரப்பி கொள்ளும் 
அனாதை இல்லம் !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 68

கருணைக்
வயது இருந்தால்
கூறுங்கள் கடவுளுக்கு
கற்றுக் கொடுக்க !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 67

சுத்தம் என்பது இனி
நித்தம் இல்லை
அசுத்தத்தில் நிறைகிறது
அரை ஜான் வயிறு ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 66

வீடு நிறைய பொம்மை
ஒன்றுக்கொன்று
பேசிக்கொள்கிறது
யார் அம்மா என்று ...!

தன்முனைக் கவிதைகள் நானிலு - 65

கடன் வாங்கி
கட்டிய கோட்டை
வட்டியும் முதலுமாக
கூடியது நரை முடி !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 64

என் பசியோடு
உன் ருசி பார்க்கத்
தவம் கிடக்கிறது
மோதிர விரல்

தன்முனைக் கவிதைகள் நானிலு - 63

சண்டையிடும் 🐱
பூனைக் குட்டிகள்
மகிழ்ந்து களிகூறும்
மனித குரங்கு 🐵

தன்முனைக் கவிதைகள் நானிலு - 62

ஊஞ்சலில்
அமர்ந்த படியே
ஆராரோ ஆரிரரோ
பாடும் முதிர் கன்னி !

தன்முனைக் கவிதைகள் நானிலு - 61

ஒரு முறை கடிந்து விடு
கடவுளைப் போல்
உயிர்த்தெழுந்து விடும்
நம் அலைப்பேசி எண் !

mhishavideo - 145