Showing posts with label பக்திப் பாடல். Show all posts
Showing posts with label பக்திப் பாடல். Show all posts

திருப்பதி - பாடல் !

Related image

திருப்பதி வாசா திருமலை நேசா உன்
திருமுகம் காணவே கோவிந்த கோசா
திருப்பதி வாசா திருமலை நேசா உன்
திருமுகம் காணவே கோவிந்த கோசா
மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும்
மனதாற உனை நினைத்த மறு கணமே 
மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த
விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும்
விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே
விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த
கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே
கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த
பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா 
பசியோடு பத்தும் பறந்தோட
ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா 
ஒரு போதும் உனை மறவா திருநாள் 
தினம் வேண்டும் கோவிந்தா
அருள் தேடும் என் விழிகளுக்கு 
உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா

கண்ணன் பாட்டு ...!

Image result for கண்ணன் பாட்டு

கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் 
எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ 
தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை 
தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா !
எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை 
அமைதி காத்திட நீயருள்வாயோ ! என 
சொல்லி புலம்பிட வரவில்லை நான் 
சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா 
பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை 
பக்தராய் மாற்றிட மனமில்லையோ என 
கேள்வி கேட்டிட வரவில்லை நான் 
கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா 
கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் 
சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ 
எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ 
எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா 

எங்க குல தெய்வமே ...!

Image result

குலசாமி திருவிழா இங்கே 
கூடியிருப்போருக்கு ஓர் விழா 
வானம் படியா போனவுங்களையும் 
வந்து சேர்க்கும் சித்திரை திருவிழா 
மண்ணும் பொண்ணாக 
மக்கள் பஞ்சம் காணாது 
நின்னு நிதானமாய் 
நொருப்பு பந்தம் கைபுடிச்சி 
வேட்டைக்கு போய் வரும் 
வீரகுல கருப்பனே .. உனக்கு 
உண்ணும் படையலிட்டு 
உருமி மேளம் குலவையிட்டு 
கைகூப்பி வணங்கிவந்தோம் எங்களை 
காத்து நிற்கும் கருப்பனே 
நல்வாக்கு சொல்லுமையா  
வெள்ளாட்டம் குட்டி அடிச்சு   
ஓலப்பாயில் சோறு குவிச்சு 
எல்லைக் காத்த அய்யனாருக்கு 
எடுத்துவச்சு பரிமாறிட வந்தோம்-உனக்கு 
உண்ணா விரதமிருந்து 
ஊருக்கே பந்தியிட்டு 
ஒண்ணுமண்ணா உக்காந்திருந்து  
கரகாட்டம் ஒயிலாட்டமென 
கண்விழிச்சி காத்திருக்கும் மக்களை 
காக்கும் மாடனே உனக்கு 
காவு கொடுக்கும் சாமத்துல 
குறி கேட்க வந்தோமையா எங்கள்   
குறையெல்லாம் தீர்த்துவையும் 
எங்க குல தெய்வமே ...!

சிவன் பாடல் ...!

Image result for siva images

முக்கண் வேந்தனே 
மூவுலகத்தின் தலை மகனே 
எக்கண் உன்னை போதித்தாலும் 
இரங்கியருள் புரியும் சிவனே போற்றி 
நந்திக்கு முதல்வனே 
நடனத்தின் கலை மகனே 
சிலையாக உன்னை பாவிப்போருக்கும் 
சித்தம் தெளியவைக்கும் சிவனே போற்றி 
சக்தியின் துணைவனே 
சரித்திரத்தில் சிறந்தவனே 
முக்தி வேண்டுமென்று கேட்போருக்கு 
சக்தியளித்திடும் சிவனே போற்றி 
அனைத்துயிரிலும் சிறந்தவனே 
யாணை முகத்தின் அப்பனே 
அரும் பசியாற்றுவோர் நெஞ்சில் 
அமர்ந்திருக்கும் சிவனே போற்றி 
மயானத்தின் மாயவனே 
மந்திரத்தின் மூலவனே 
எந்திர மயமான உலகத்திலும் 
மந்திர திருநீறணிந்த சிவனே போற்றி 

பிள்ளையார் பாடல் ...!



எங்க பிள்ளையாரு இவர் எங்க பிள்ளையாரு 
பிள்ளை வரம் வேண்டி வந்தவருக்கு தங்கும் பிள்ளையாரு 
தங்கப் பிள்ளையாரு இவர் தங்கப் பிள்ளையாரு 
தஞ்சமென்று வருவோருக்கும் அள்ளித்தரும் அன்பு பிள்ளையாரு 
வெள்ளிப் பிள்ளையாரு இவர் வெள்ளிப் பிள்ளையாரு 
வேதமற்ற பக்தருக்கும் ஞானம் போதிக்கும் யோகப் பிள்ளையாரு
செம்பு பிள்ளையாரு இவர் செம்பு பிள்ளையாரு
செஞ்ச வினையெல்லாம் போக்க வந்த செல்லப் பிள்ளையாரு 
மண்ணு பிள்ளையாரு இவர் களி மண்ணு பிள்ளையாரு 
கர்ம வினையெல்லாம் கரைய வைக்கும் தொந்தி பிள்ளையாரு 
வண்ணப் பிள்ளையாரு இவர் வண்ணப் பிள்ளையாரு 
எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் பிள்ளையாரு

முருகன் பாடல் ...!

Image result for murugan

எனக்கெனப் பிறந்தவனை மறைத்து விட்டாயோ 
மீண்டும் பிறந்தவனை எழுத மறந்துவிட்டாயோ முருகா 
உனக்கெனக் கொடுத்துவிட்டேன் என்னுயிரை 
இனியும் உனக்கு என்மேல் தயவில்லையோ முருகா 
தனக்கென ஓரிடத்தைப் பதித்துவிட்டாயே உலகினிலே 
எனக்கென ஒரு இடம் தருவதற்கு மனமில்லையோ முருகா 
மணக் கவலை தீர மலை ஏறிவந்தேன் 
என்னை இனியும் மன்னிக்க மனமில்லையோ முருகா 
உனக்கிரு துணைவியர் இருக்கையிலே 
எனக்கொரு துணையினைக் கொடுக்க வரமில்லையோ முருகா 
மனமுருகி அழுதுவிட்டேன் உன் திருவடியில் 
இனியும் என் குலம் செழிக்க வழி வரவில்லையோ முருகா 
பலவகை பழம் படைத்துப் பசியாற்றிவிட்டேன் 
பல தலைமுறை  பாவத்தை போக்கிட மனமில்லையோ முருகா 
அனுதினமும் உன்னை வெறுத்ததில்லை இருந்தும் 
திருமணக் கோலம் காண வரமளிப்பாயோ முருகா
(முதல் முறையாக பக்திப் பாடல் எழுத முயற்சி செய்துள்ளேன் 
எப்படி இருக்கு கூறுங்கள் நண்பர்களே )

mhishavideo - 145