கண்ணன் பாட்டு ...!

Image result for கண்ணன் பாட்டு

கண்ணன் திருவடியைக் கண்டுவிட்டேன் - என் 
எண்ணம் நிறைவேற்ற அருளிடுவாயோ 
தின்னப் பழம் படைத்து விட்டேன் -என்னை 
தெகிட்டாத இன்பத்தில் திளைத்திட வைப்பாயோ - கண்ணா !
எள்ளி நகைப்போர் முன்னிலையில் என்னை 
அமைதி காத்திட நீயருள்வாயோ ! என 
சொல்லி புலம்பிட வரவில்லை நான் 
சொல்லாமலே அறிந்திடும் பொருளல்லவோ ! கண்ணா 
பித்தராய் நானுனை தொடர்ந்தாலும் என்னை 
பக்தராய் மாற்றிட மனமில்லையோ என 
கேள்வி கேட்டிட வரவில்லை நான் 
கேளாமலே கொடுக்கும் மாயவனும் நீயல்லவோ! கண்ணா 
கல்லுக்கு உயிர் கொடுத்த காவலனே என் 
சொல்லுக்கு மெய் கொடுக்க வாராயோ 
எள்ளுக்கும் தண்ணிக்கும் இடைப்பட்ட காலத்தை நீ 
எழில் பொங்கிடும் மகிழ்வை தாராயோ ! கண்ணா 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145