Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

கோயில் மணியோசை ...!

ஒரே அலறல் சத்தம் கேட்டு எழுகையில் எனது ஹவுஸ் ஓனர் குடும்பத்துடன் சென்ற கார் விபத்தில் நால்வரும்  மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட செய்தி கேட்டு சிறு புன்னகையுடன் கோயில் வாசலை நோக்கி விரைந்தேன் அங்கே சிலுவையில் அறைந்த கடவுளை கண்டு "பாவத்தின் சம்பளம் மரணம்" நிஜம் தான் என்பதை இன்று உணர்கிறேன்  தகப்பனே என்ன காலம் தான் ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது என்று விட்டிற்கு வந்தாள் 
அங்கே அக்கம் பக்கத்தினர் அந்த விபத்தில் ஒருவர் 24 மணி நேரம் கெடுவில் இருப்பதாகவும் மற்ற இருவருக்கு தலையில் பலத்த காயம் அறுவை சிகிக்சை செய்ய இரண்டு லாசம் தேவை அடுத்து அவர்களுடன் வந்த சிறு குழந்தையும் மயக்கத்தில் இருக்கிறது எல்லாம் அவர்கள் செய்த பாவம் என பேசிக்கொண்டனர் 
இப்போது ஹவுஸ் ஓனரின் மகன் பணத்திற்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான் இறுதியில் வீட்டை விற்க முடிவு செய்து பணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான் அங்கு அவன் மாமா 24 மணி நேர கெடு முடிந்து இருந்துவிட்டார் கொண்டு சென்ற பணத்தில் 2.5 லட்சம் கட்டி பாடியை அடக்கம் செய்தான்
அடுத்து அவனின் அம்மா மற்றும் அக்கா இருவருக்கும் அறுவை சிகிக்சை செய்ய 2.5 லட்சம் கட்டிவிட்டு வெளியில் அமர்ந்தான் டாக்டர் வந்து ஸாரி நங்கள் முயற்சி செய்தும்  பலன் அளிக்கவில்லை இருவரும் உயிர் துறந்தனர் இந்த  பாடியை வாங்க 5 லட்சமும் அத்துடன் குழந்தைக்கான ட்ரீட்மெண்ட் செலவு 50 ஆயிரத்தையும் சேர்த்து காட்டுங்கள் என்றதும் பணத்தைக் கட்டி இறுதிச்சடங்கை முடித்தான் எல்லாவற்றிற்கும் காரணம் அவள் கொடுத்த சாபம் தான் இதற்குமேலுமா அவள் கடனை கொடுக்க வேண்டும்  கூடாது என யோசிக்கையில் 
வீட்டின் பேரில் கடன் கொடுத்தவர்கள் வந்து 3 மதம் அவகாசம் கொடுத்தார்கள் அவனும் சரி என்றான்
இரண்டும் மாதம் கடந்தது அந்த பணக்காரர் பேசிய தொகை போக மீதி பணத்தை கொடுத்தார் அதில் கொஞ்சம்  பணம் குறைவாக இருந்தது ஏன் என கேட்டதும் நீ வாங்கியக் கடனை கொடுத்துவிட்டேன் நீ ஏமாற்றியது போல் நானும் அவர்களை ஏமாற்ற தயாராகவில்லை இந்த வீட்டை காட்டி தானே கடன் வாங்கினாய் அதான் நானே அந்த கடனை அடைந்துவிட்டேன். ஏனா  எங்கள் தலைமுறையாவது நல்லா இருக்க வேண்டுமே அதற்கு தான். இன்னும் ஒரு மாதத்தில் வீட்டை காலி செய்துவிடு என பேசி திரும்புகையில் அவனது முடிவை அமோதிப்பது போல தூரத்தே கோயில் மணியோசை கேட்டது. 

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா 
அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்தேன் எனக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் என்று அழுது புலம்பினாள் பாபாவோ பதில் பேசவில்லை நேராக திரும்பி தன் வீட்டிற்கு வந்தாள் சிவன்யா சிறுது நேரம் கழித்து தான் பணம் கொடுத்து உதவி செய்த வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப தருமாறு கேட்டாள் 
அதற்கு அவர்கள் பணம் கிடைக்கும் போது தான் தரமுடியும் சும்மா சும்மா வந்து கேட்காதே வீட்டை விற்ற பிறகு நாங்களே பணத்தை திருப்பி தருகிறோம் என்று மரியாதை குறைவாக பேசினார்கள்  
சிவன்யாவும் விடவில்லை நான் அப்போது பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மகள் திருமணம் நடந்திருக்காது இப்போது அவளும் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டாள் வருடமும் நான்கை தொட்டு விட்டது இனியும் காலம் கடத்தினால் நன்றாக இருக்காது ஆகவே எனக்கு பணம் வேண்டும் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்றதும் 
அக்குடும்பத்தின் உன்னால் என்ன செய்ய முடியுமோ பண்ணிக்கோ என்று சொன்னதும் 
சிவன்யா சாபத்துடன் கடவுளை வஞ்சித்துவிட்டு வீடு திரும்புகையில் 
அக்குடும்பத்தினரின் மகன் சிவன்யா உங்கள் கஷ்டம் புரிகிறது என் அம்மா பேசியது தவறு தான் என்ன செய்வது நாங்களும் இந்த வீட்டை விற்க முயற்சி செய்கிறோம் நடக்கவில்லை இதோ இந்த அண்ணாவிடம் தான் பேசியுள்ளோம் அவர்கள் உங்களிடம் பேசுவதாக சொன்னார் இப்போது அவர் லையனில் தான் இருக்குக்கிறார் பேசுங்கள் என்றான் 
சிவன்யாவும் ஹலோ அண்ணா சொல்லுங்கள் என்றாள்  
மேடம் இந்த வீட்டை விற்க நீங்களே ஒரு நல்ல ஆளு இருந்தால் கூறுங்கள் விரைவில் பேசிமுடிப்போம் உங்கள் பணமும் கிடைத்துவிடும் இவர்கள் கடனும் அடைந்துவிடும் என்றார் 
சரி என கூறிவிட்டு கிளம்பிவிட்டாள் சிவன்யா 
வீட்டிற்கு வந்ததும் அங்கே ஒருவயதானவர் வந்து மகளே தயங்காதே உன் பணம் உன்னை தேடிவரும் கலங்காதே நாளை இந்த வீட்டுக்கே நீ சொந்தக்காரியாகலாம் இல்லை இதைக்கொண்டே பலமடங்கு லாபம் சம்பாதிக்கலாம் வருத்தம் வேண்டாம் என்று கூறிவிட்டு தட்சணை ஏதும் வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார் 
ஒரு வேலை இது பாபாவின் அருள் வாக்கோ இருந்தாலும் இருக்கலாம் இனிமேல் நாம் கவலைப்பட வேண்டாமென்று மனதை தேற்றிக்கொண்டாள் 
திடீரென்று சிவன்யாவுக்கு  ஒரு யோசனை வந்தது ஏன் அவர் கூறியது போல் நாமே இந்த வீட்டை விலைக்கு  வாங்கிவிட்டால் என்ன என்று யோசித்தாள்  
அன்று சிவன்யாவிடம் பேசிய தரகரை அழைத்தால் இந்த வீட்டின் விலை என்ன என்று கேட்டாள் அவர்கள் 45 லட்சம் என்று சொன்னதும் சிவன்யா இவ்வளவு விலைக்கு இந்த வீடு போகாது கரணம் பொது சொத்து இன்னும் தனித்தனியாக பிரிக்கவில்லை அதுவும் போக இரண்டு பக்கமும் பொது சுவர் வண்டிகள் நிறுத்த இடம் இல்லை ஆக இந்த வீட்டை 35 லட்சத்திற்கு கேட்கிறார்கள் தர சம்மதமா என்றதும் 
அவர்கள் நாங்கள் கலந்து பேசிவிட்டு சொல்கிறோம் என்றனர் 
சரி என்று வந்துவிட்டாள் சிவன்யா 
இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் சம்மதம் சொன்னார்கள் காரணம் கடன் தொகை பெருகிவிட்டது எல்லாரிடமும் இந்த வீட்டையே காரணம் காட்டி அதிக கடன் வாங்கிவிட்டதால் கிடைத்த தொகைக்கு விற்று பணத்தை வாங்கிக்கொண்டு எங்காவது ஓடிவிடலாம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இது சிவன்யாவுக்கு புரிந்தது உடனே சிவன்யா இந்த வீட்டிற்கு லீசு தொகை 10 லட்சம் போக மீதம் 25 லட்சம் அதில் டாகுமெண்ட் செலவு 2 லட்சம் போக மீதம் தரவேண்டியது 23 லட்சம் சம்மதமா இந்த 23 லட்சத்தை மூன்று மாத தவணைக்குள் உங்களுக்கு செட்டில்மென்ட் ஆகிவிடும் என்றாள் 
அவர்களும் சரி என்றதும் ....
வீட்டிற்கு வந்து தன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது தனது அம்மா கணக்கில் அக்கா கணக்கில், மற்றும் நகைகள் எல்லாம் சேர்த்து  கூட்டி பார்த்தால் மொத்தம் 15 லட்சம் தேறியது இன்னும் 8 லட்சம் தேவை பட்டது அது போக டாகுமெண்ட் ரெடி பண்ண குறைந்தது 2 லட்சம் தேவை பட்டது ஆக மொத்தம் 10 லட்சம் என்ன செய்வது என்று திகைத்தாள் ஆனால் சிவன்யாவின் அக்காவோ இது அகலக்கால் வேண்டாம் நம் அம்மா அப்பாவின் 60 வருட உழைப்பு தான் இந்த பதினைந்து லட்சம் இதை வீணடிக்காதே என்று சொன்னதும் 
சிவன்யா  உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லையா நிச்சயம் நல்லது தான் நடக்கும் நீங்கள் எல்லோரும் எனக்கு உறுதுணையாக இருந்தால் மட்டும் போதும் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றதும்  
சிவன்யாவின் குடும்பத்தினரும் சரி நடப்பது எல்லாம் நமைக்கே என்று சிவன்யாவுக்கு உறுதுணையாக இருந்தனர் 
டாகுமெண்ட் ரெடியானது பத்திர பதிவு நடக்கும் போது தன்னிடம் உள்ள 15 லட்சத்தை தருவதாகவும் அடுத்த 8 லட்சம் ஒரு மாத தவணைக்குள் தருவதாகவும்  ஒப்புதல் பத்திரமும் எழுத பட்டது  அதன் படியே அந்த சொத்து சிவன்யாவின் பெயருக்கு மாற்றப்பட்டது உடனே அந்த பாத்திரத்தை கொண்டு சென்று வங்கியில் அடமானம் வைத்து 10 லட்சம் பெற்றுக்கொண்டாள் அப்பணத்தில் 8 லட்சத்தை முதல் சொத்து தாரருக்கு கொடுத்து அவ்வீட்டை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டாள் சிவன்யா 
பின் அங்கு லீசுக்கு இருப்பவர்களை காலி செய்ய இரண்டு மாத தவணை உள்ளது அதற்குள் இவ்வீட்டை கொஞ்சம் ஆல்ட்ரேஷன் செய்தாள் சிவன்யா புதிய சம்பு தொட்டி  , திரிபேஸ் கரண்ட், மூன்று வீட்டிற்கும் டைல்ஸ் வெளியில் கம்பிக் கேட் , புது பெயிண்ட் என்று அட்டகாசமாக மாற்றினாள் அதைக் கண்டு  அத்தெருவே அந்த வீட்டை பார்த்து அசந்து போனார்கள் 
பின்பு அவ்வீட்டை விதவிதமாக போட்டோ எடுத்து நிறைய பேரிடம் விற்க விலை பேசினாள் சிவன்யா சிலர் 40 லட்சம் 45 லட்சம் என்று சொன்னார்கள் ஆனால் சிவன்யா 50 லட்சம் தான் முடிவான விலை சம்மதம் என்றால் சொல்லுங்கள்  உடனே  ரிஜிஸ்ட்ரேஷன்  பண்ணிடலாம் என்றதும் அவ்வீட்டை வாங்குபவர் டாகுமெண்ட்டை வாங்கி பார்த்தார் எல்லாம் சரியாக இருந்தது உடனே இந்தாருங்கள் 10 லட்சம் அட்வான்ஸ் மீதி பணம் ரிஜிஸ்ட்ரேஷன் அன்று DDயாக தந்துவிடுகிறோம் என்றனர் 
சிவன்யா சந்தோசத்தில் துள்ளிக்குதித்துக் கொண்டு பாபாவின் கோயிலுக்கு சென்று மனதார நன்றி சொன்னாள் அன்று வரும் வியாழன் அன்ன தானமும் கொடுக்க பணம் கட்டிவிட்டு வீட்டிற்கு வந்த சிவன்யா  கையில் இருக்கும் 10 லட்சத்தை வங்கிக்கு எடுத்துச் சென்று தனது பெயரில் இருக்கும் வாங்கிக்கடனை அடைத்துவிட்டு தனது பத்திரத்தை மீட்டுக்கொண்டாள் கடைசி மூன்றாவது மாதத்தில் அந்த வீட்டை விற்பனை செய்து விட்டு மீதி தொகை 40 லட்சத்தையும் கையில் பெற்றுக்கொண்டாள் 
பின்பு இந்த 40 லட்சத்தில் தனது கை தொகை, மற்றும் லீசு தொகை சேர்த்து 25 லட்சம் போக 15 லட்சத்தில் 
ஆல்ட்ரேஷன் 4 லட்சம், பத்திர பதிவு செலவு போக லாபம் 10 லட்சம் வெறும் மூன்று மாதத்தில் எப்படி வந்தது இந்த தைரியம் எல்லாம் பாபாவின் அருள் வாக்கு தான் என்று அக்கம் பக்கத்தினரிடம் பாபாவின் மகிமையை எடுத்துரைத்தாள் சிவன்யா  
அத்துடன் தன் கையில் இருக்கும் 40 லட்சத்தை வைத்து வீடு வாங்க சொன்னார் அவளின் அம்மா அதற்கு அவள் வேண்டாம் அம்மா 8 லட்சம் ரூபாய்க்கு ஒரு நல்ல வீடடை லீசுக்கு எடுத்துக் கொள்வோம் மீதம் உள்ள பணத்தை நால்வர் கணக்கிலும் ரூபாய் 8 லட்சம் வீதம் டெபாசிட் செய்துவிடுவோம் மதம் ஒருவருக்கு 7000 வீதம் நான்கு கணக்கிலும் சேர்த்து சுமார் 24000/-  வட்டி தொகை கிடைக்கும் அதைக் கொண்டு நிம்மதியாக காலம் முழுக்க வாழலாம் இல்லை புது வீடு தான் வாங்க வேண்டும் என்றால் அதற்கு இத்தொகை பத்தாது மீண்டும் கடன் வாங்க வேண்டும் அதற்கு வட்டி கட்ட வேண்டும் அதை விடுத்து வருடம் ஒரு முறை EB டெபாசிட், சொத்து வரி, தண்ணீர் வரி எப்படி ஏகப்பட்ட செலவு இருக்கு ஆகையால் தற்சமயம் நமக்கு சொந்த வீடு எல்லாம் வேண்டாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் நிச்சயம் பாபா இதை போல் இன்னும் ஒரு நல்ல வழி காட்டுவார் என்றதும் சரி உன் இஷ்டம் என்று விட்டுவிட்டனர் 
சிறுது காலம் கழித்து முன் பணம் வாங்கியவர் திரும்பவும் பணம் கேட்டு சிவன்யாவிடம் வந்தனர் 
அப்போது சிவன்யா பணம் கொடுப்பேன் உன் மகள் சொல்லுவாள் எனக்கும் இப்பணத்திற்கு சம்மதமில்லை என்று, பின் அவளின் புருஷன் சொல்லுவான் என் மனைவி பெயரிலா கடன் கொடுத்தீர்கள் இல்லையே இனிமேல் அவளிடம் கேட்க கூடாது என்று மிரட்டுவான்  
உன்னுடைய இன்னொரு மகள் சொல்லுவாள் நாங்களே வரும்டம் ஒரு முறை தான் குடும்பத்தோடு என் அம்மா வீட்டிற்கு லீவுக்கு வருகிறோம் இங்கு வந்து தொந்தரவு செய்யாதே இப்பணத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மதமும் இல்லை என்று 
பின் நீ சொல்லுவாய் உன்னிடம் பணம் வாங்கியது தான் நான் செய்த தவறு என் எல்லா கஷ்டத்திற்கும் நீ என் வீட்டிற்கு லீசுக்கு வந்த நேரம் தான் என்று 
அடுத்து உன் மகன் சொல்லுவான் இந்த மாதம் இறுதியில் தருகிறேனென்று முடிந்து போய் கேட்டால் அடுத்த மாதம் அதற்கு அடுத்த மாதம் அப்படியே நான்கு வருடத்தையும் கழித்துவிடுவான் 
இதில் யாரை நம்பி உனக்கு உதவுவது என்று சொல் பார்க்கலாம் அன்று உங்கள் குடும்பத்தில் யாருக்குமே வருமானம் இல்லை இருந்தும் உன் தம்பியும் உன் தம்பி மனைவி அதாவது உன் மூத்த மகளும்  சொன்ன ஒரே வார்த்தையை நம்பி பணம் கொடுத்தேன் கரணம் கிருஸ்துவன் ஒரு சபையை  எடுத்து நடத்துபவர் நம்பிக்கையுடன் நடந்து கொள்வர் என்று தானே அந்த நம்பிக்கையை இன்று வரை யாராவது காப்பாற்றினீர்களா இல்லையே  
இந்த காலத்தில் 100 ரூபாய் கடனாக வாங்குவதே சிரமம் உன் மகளின் திருமணத்திற்கு முழு தொகையும் இன்னொருவர் மூலம் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன் நீங்கள் வட்டியும் காட்டவில்லை அசலும் கட்டவில்லை எல்லாம் என் தலையில் விழுந்தது ,கேட்டால் பணம் எப்போது இருக்கிறதோ அப்போது தான் தரமுடியும் என்று ஏளனமாக சொன்னாயே அந்த நான்கு வருடம் நான் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் உன்னுடைய அத்தனை சொந்த பந்தங்களும் உங்களை சுற்றி தானே இருந்தார்கள் யாராவது உதவி செய்தார்களா இல்லையே அதை விடு இரண்டு மாதம் முழுக்க கரண்ட் இல்லாமல் இருட்டில் இருதோம் யாராவது உதவி செய்தார்களா இல்லையே அன்று தான் புரிந்தது நீ கவர்மெடேயே ஏமாற்றியது நானெல்லாம் எம்மாத்திரம் 
சரி பழசை எல்லாம் பேச எனக்கு விரும்பம் இல்லை தயவு செய்து இங்கிருந்து சென்று விடு கடைசியாக ஒன்று மட்டும் சொல்கிறேன் கேள் 
நமக்கு உதவியர்களை என்றுமே நாம் மறக்க கூடாது அதே போல் நம்மை மிதித்தவர்களையும் என்றுமே மிதிக்க கூடாது என்று நினைக்கின்றேன் 
சொத்து சொத்து என்று திமிராக இருந்தாய் அதுமட்டுமா ஊரெல்லாம் கடன் வாங்கி எத்தனை பேரை ஏமாற்றினாய் அந்த பாவம் தான் என் மூலம் உனக்கு பாடம் கற்பித்துள்ளது இப்போது எந்த சொத்து உன்னிடம் உள்ளது சொல் அதற்கு ஈடாக பணம் கேட்க அன்று வாக்கு தவறாமல் நடந்திருந்தால் இன்று வழி தவறி அலைந்திடுவாயா இதெல்லாம் உனக்கு ஒரு பாடம் இனிமேல் என் வீட்டு வாசலில் வந்து நிற்காதே போ இப்போது புரிகிறதா பணத்தின் அருமையும் குணத்தின் அருமையும். என்று சொல்லி அனுப்பிய சிவன்யா 
தன்னால் அவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று பாபாவின் முன் புலம்பினாள் காரணம் இந்த நான்கு வருடத்தில் எத்தனை கோவில்,ஜர்ச் வாசல்,விரதம் பூஜை என்று அலைந்து திரிந்திருப்பேன் மீண்டும் அதை போல் ஒரு கஷ்டத்தை எதிர் கொள்ள என் இதயத்தில் தெம்பு இல்லை பாபா அதனால் தான் அவ்வாறு கூறிவிட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்றாள் சிவன்யா 
அருகில் இருந்த ஒரு அம்மா நீ ஏன் கலங்குகிறாய் மகளே நல்லவர்களுக்கு உதவி செய் இந்த மாதிரி தீயவர்களுக்கு உதவ முடியவில்லையே என்று வருத்தப்படாதே இன்னும் நீ கற்றுக்கொள்ள வேண்டிய நன்மை தீமைகள் நிறைய உண்டு தயங்காமல் இரு வெற்றி எப்போதுமே உண்மையின் பக்கம் தான் மறந்துவிடாதே மகளே செல் என்றனர் 
சிவன்யாவும் சந்தோசமாக பாபாவை தரிசித்துவிட்டு வீடு திரும்பினாள் 
ஜெயம் 
ஓம் சாய் ராம்  சாய் இருக்க பயம் ஏன் !

புரிதலின்றி பிரிதல் ...!

ராமூ சோனா இருவரும் நல்ல நண்பர்கள் ஒரு நாள் சோனாவிற்கு எதோ தெரியத எண்ணில் இருந்து ஒரு குறுந்செய்தி (காதல் என்ற வார்த்தையை உபயோகித்து )வருகிறது அச் செய்தியை கண்டு கோவம் கொள்ளவில்லை சோனா தன் வீட்டில் மற்றும் சக தோழிகளிடம் வினவினாள் அவர்கள் இல்லை என்று கூற

தன் நண்பனிடமும் பானு என்ற நண்பன் இருக்கானா என்று கேட்டதும் அந்த நண்பன் ஏன் என்னை சந்தேகப் படுகிறாயா உனக்கு எந்த ஒரு ராங் கால் அல்லது மெஸேஜ் வந்தால் நான் தான் காரணமா இல்லை என் நண்பர்கள் தான் காரணமா கிராமத்து பசங்கள் தான் இப்படி செய்வார்களா ஏன் நகரத்து பசங்கள் இப்படி செய்ய மாட்டார்களா? என்று திட்ட

உடனே சோனா நான் சாதுவாக பானு என்று நண்பர் உள்ளாரா என்று தானே கேட்டேன் இதற்கு ஏன் இப்படி கோவப்படுகிறாய் உன்மீது சத்தியம் உன்னை சந்தேகப் படவில்லை நீயோ எனக்கு நல்ல நண்பன் நீ சத்தியமாக அந்த மாதிரி வார்த்தையை என்னிடம் உபயோகிக்க மாட்டாய் அப்படி இருக்க நான் ஏன் உன்னை சந்தேகப் படவேண்டும் சொல்

உடனே ராமு ஓகே ஓகே எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று ஏளனம் செய்கிறாயோ என்றதும்

சோனாவோ ஐயோ அப்படி சொல்லவில்லை அதில் ஐ லவ் யூ பானு என்ற குறுஞ்செய்தி இருந்ததால் அப்படி சொன்னேன் நீ என்னை தவறாகவே புரிந்து கொண்டாய் அதனால் தான் நான் எது பேசினாலும் உனக்கு தப்பாகவே தோன்றுகிறது உன்மேல் எனக்கு சந்தேகம் இருந்தால் இந்த பத்து வருட காலமாக நாம் நண்பராக இருக்க முடியாது என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டுவிட்டேன் அது தவறு என்று புரிந்துவிட்டது இதற்கு போய் என்னை பைத்தியம் மெண்டல் லூசு என்று பட்டம் கட்டிவிட்டாய் இனிமேல் உன்னிடம் எதுமே பகிர்ந்து கொள்ள மாட்டேன் ஓகே ஒன்றே ஒன்று மட்டும் கடைசியாக சொல்கிறேன்

நான் கேட்டது தவறாக இருந்தாலும் நீ சொல்லியிருக்கலாம் பானு என்று எனக்கு யாரும் இல்லை ஏன் எதாவது தவறான மெஸேஜ் வந்ததா எந்த நம்பர் கொடு பார்க்கலாம் இல்லை எதாவது ஒரு எண் வித்தியாசத்தில் தவறுதலாக அவர்கள் அனுப்பியிருக்கலாம் அதை அப்படியே விட்டுவிடு இனிமேலும் போன் அல்லது மெஸேஜ் வந்தா அப்போது பார்த்துக்கலாம் ஓகே என அன்பாக கேட்டிருக்கலாம் அதை விடுத்து நெருப்பை அள்ளி கொட்டியது போல் என்னை திட்டி தீர்த்துவிட்டாய்

நாளைக்கே நான் உன்னை பற்றி தவறுதலாக பேசினேன் என்று யாராவது ஒருவர் வந்து உன்னிடம் சொன்னால் நீ என்ன ஏது என்று வினவாமல் என்னை தண்டிக்கவும் தயங்க மாட்டாய் ஆதலால் இன்றுடன் நம் நட்ப்புக்கு முற்று புள்ளி வைத்துவிடலாம் என்றதும் ராமு தனது அழைப்பைத் துண்டித்துவிட சிறு தவறால் பெரும் விளைவால் வளர்ந்த நடப்பு மௌனத்தில் பிரிந்தது !

ஒரு ஊர்ல ஒரு ராணி !

ஒரு ஊர்ல ஒரு ராணி அந்த ராணிக்கு ஒரு ராஜா மேல காதலோ காதல் ஆனா அந்த ராஜாவுக்கு வேர ஒரு ராணி மேல காதல் இது தெரிஞ்சும் அந்த ராணி அந்த ராஜா மேல உயிரையே வச்சிருந்தா
ஒரு நாள் அந்த ராஜா தன் பழைய காதல் தோல்வியில இந்த ராணியை தேடி வந்தான் ஆனாலும் அந்த ராணி பழச மறக்காமல் அந்த ராஜா கூட நல்ல நட்போடு பேசினாள்
இப்படியே இவர்கள் நட்பு தொடர்ந்தது 
ஒரு நாள் அந்த ராணி இன்பச் சுற்றுளா செல்ல வேண்டி சூழல் இந்த விசயத்தை அந்த ராஜாவின் காதில் போட்டாள் அந்த ராஜாவும் போய் வா என்றான்
அப்போது அந்த ராணி சொன்னாள் நான் எது செய்தாலும் உன் அனுமதி வாங்கியப் பின் தான் செய்கின்றேன் காரணம் என்னை நீ எப்போதும் நம்ப வேண்டும் அதே சமயம் நான் இன்னும் உன் விஷயத்தில் மாறவில்லையென நீ புரிந்துகொள்ள வேண்டும் ஆனால் நீ மட்டும் அப்படி இல்லையே ஏன் என்றாள்
நீ என்ன பைத்தியமா என் பழக்க வழக்கம் வேறு நீ அப்படி இல்லை எனக்கு குட்மார்ணிங்,குட் நைட் சொல்ல ஒரு பிரண்ட்ஸ் சாப்டையா என கேட்க ஒரு பிரண்ட்ஸ இப்படி லிஸ்ட் போய்ட்டே இருக்கும் ஆனால் நீ மட்டும் எனக்கு எப்போதூமே ஷ்பெசல் தான்
அப்ப நான் எந்த லிஸ்ட் ல இருக்கேன் ?
நீ அந்த லிஸ்ட்டில்  இல்லை உன் கிட்ட எப்படி பேசனும் மத்த பொண்ணுங்க கிட்ட எப்படி பேசனும் என்று எனக்குத் தெரியும் ஏனா நீ ஒரு பழம் சோ நீ வேர அவுங்க வேர
ஒ அப்படியா நீ திருந்தவே மாட்டையா ஏன்டா இப்படி இருக்க
நான் அப்படித் தான் எனக்கு அட்வைஸ் பண்ணுனா  பிடிக்காது நீ சுற்றுலா போய் ஜாலியா எஞ்சாய் பன்னு ஒகே  அப்புறமா நாம ஒரு நாள் கோவாவுக்கு போவோம்
கோவா வா எத்தனை நாள் ஆகும்
ஐந்து நாள் ஆகும்
என்ன ஐந்து நாளா ம்ம்ம்கும் நான் வரலப்பா
ஏன்?
ஒரு பிரண்ட்டு கூட வெளியில் போய் தங்குற அளவுக்கு தைரியம் எனக்கு இல்லை அதே சமயம் அந்த மாதிரி பொண்ணும் நானில்லை அதற்கு வேர ஆள பாரு வேண்டுமென்றால் கோவிலுக்கு போகலாம் என்றாள்
ம்ம்ம் சரி சரி நீ வர மாட்டேனு தெரியும் சும்ம தான் கேட்டேன்
அதானே பார்த்தேன் நீயே ஒரு கஞ்சன் ஒரு காப்பி கூட வாங்கி தரமாட்ட நீ கோவாவுக்கு கூப்பிட்டு போறவனா
இல்ல ராணி நான் அப்போம் பிச்சைக் காரண இருந்தேன்
இப்போம் கோடீஸ்வரான இருக்கையோ ?
ம்ம்ம் ஆமாம்
எல்லாம் பணத்தின் ஆசை சரி எனக்கு வேலை இருக்கு அப்பரமாக பேசலாம் 
ம்ம்ம் ஓகே ஓகே
உடனே அந்த ராணி தன் தோழிகளிடம் நடந்ததைச் சொல்ல அத் தோழிகள் ராணி இந்த நட்பு வேண்டாம் அந்த ராஜா நல்லவரா தெரியல விட்டுடுங்கள் என்றனர் 
ஏன்?
அவர் எனக்கு குட்மார்ணிங் குட் நைட் சொல்ல ஒரு பிரண்ட்ஸ் சாப்டையா என கேட்க ஒரு பிரண்ட்ஸ, மத்தபடி வேற மாதிரி பேச ஒரு பிரண்ட்ஸ் என லிஸ்ட் போட்டு பேசும் போதே தெரிகிறது அவர் நிச்சயம் கெட்டவராக தான் இருக்க முடியும் அவரும் தங்களை எப்படியாவது அந்த லிஸ்ட்டில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முயற்சி செய்கிறார் இது உங்களுக்கு புரியவில்லை
அடுத்ததாக கோவா -வை கூகுளில் பாருங்கள் என்ன கண்டராவியாக உள்ளது ஏன் இந்த ஊரை அவர் தேர்வு செய்ய வேண்டும் அங்கேயும் அவர் எண்ணம் சபலப் பட்டுவிட்டது
அதை விடுங்கள் இதே போல் இன்னும் எத்தனை பேரை அங்கு அழைத்துச் சென்றாரோ யாருக்கு தெரியும் அதனால் தான் சொல்கிறோம் ராணி கொஞ்சம் கவனமாக இருங்கள் உங்களுக்கு வெளி உலகம் தெரியவில்லை இனியும் அவரை நம்பி பழகாதீர்கள் அப்பழக்கத்தை இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள் அது தான் உங்களுக்கும் நல்லது உங்கள் குடும்பத்திற்கும் நல்லது
சரி தான் நீங்கள் கூறுவதும் ஆனால் இதுவரை என்னிடம் அவன் தவறாக பேசியதில்லை மேலும்  அவன் என்னிடம் கண்ணியமாகத் தானே நடந்துகொள்கிறான் அப்படி இருக்கையில் என்னால் அவனின் நட்பை துண்டித்துக்குக் கொள்ள விருப்பம் இல்லை  ஒன்று வேண்டுமானால்  இந்த கேள்விக்கான விடையை  அவனிடமே  கேட்டு விட்டால் என்ன ?
வேண்டாம் ராணி நீங்கள் கேட்டால் வீணாக சண்டை தான் வரும் பின் உங்கள் மனம் வாடும் சோகத்தில் மூழ்கிவிடுவீர்கள் பின் அவர் சொன்னது போல் உங்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் வந்தாலும் வரும் இது தேவையா காலம் பதில் சொல்லும் வரை கடவுளிடம் விட்டுவிடுங்கள்
ம்ம்ம் நீங்கள் கூறுவதும் சரிதான் என்னால் அவனை மறக்கவும் முடியாது அதே சமயம் மன்னிக்காமல் இருக்கவும் முடியாது கரணம் முதல் காதலுக்கு வலு அதிகம் வயதும் அதிகம் தான் அதுவே நட்பாக மாறும் போது மௌனத்தின் சித்திரவதை அதைவிட அதிகம் இது உங்களுக்கு புரியாது
ஆக எல்லோரும் தயாராகுங்கள் நாளை இன்பச் சுற்றுலா செல்ல 
சரிங்கள் ராணி நீங்கள் எப்போதும் போல் இப்படியே இருங்கள் அது போதும் எங்களுக்கு 

பழங்களால் வந்த நோய்


மோசமான ரசாயனங்கள் கலந்துள்ளது!!  நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகளில் எல்லாம் எச்சரிக்கை!!

வறுமையில் வாடிய குடும்பம் ஒரு நாளைக்கு உணவு உண்பதே கடினம் அப்படி இருக்கையில் தனது மகளை எப்படியாவது ரத்த சோகையில் இருந்து மீட்டெடுக்கவேண்டுமென்று தினமும் மாலை கடை வீதிக்கு சென்று அங்கு கூறு கட்டிய பழங்களை குறைந்த விலையில் வாங்கி வந்து கொடுப்பாள் மகளும் அதை விரும்பி சாப்பிடுவாள் 
ஒருநாள் திடிரென்று தாளாத வயிற்று வலி வந்தது துடிதுடித்தாள் உடனே மருத்துவரிடம் அழைத்து சென்றால் அங்கு மருத்துவர் அக்குழந்தையை பரிசோதனை செய்தார் அவராலே நம்ப முடியவில்லை அக்குழந்தைக்கு சம்மந்தமே இல்லாமல் பெரிய பெரிய நோயிகள் 
அம்மாவை அழைத்தார் மருத்துவர் என்ன இது உங்க குழந்தையை நன்றாக கவனிக்காமல் விட்டுவிட்டேர்கள் இப்போது அவள் மரண தருவாயில் இருக்கிறாள் எப்படி, நான் கூறும் போது வெறும் ரத்த சோகை தானே இருந்தது இது எப்படி சாத்தியம் வேறு எங்காவது ரத்தம் ஏத்தி இருக்கீங்களா 
அவர் இல்லை டாக்டர் பக்கத்து தெருவில் இருக்கும் கடையில் தான் கூறு கட்டிய பழங்களை வாங்கி கொடுத்தேன் 
ஐயோ அது தான் நீங்கள் செய்த தவறு 
இல்லை டாக்டர் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு தான் கொடுத்தேன் 
அட அம்மா இப்படி இருக்கீங்களே இப்ப உள்ள பழங்கள் எல்லாம் கெமிக்கல் மூலம் விறபனைக்கு வருகிறது அதன் தாக்கமே ஒரு வாரம் தான் ஒரு வாரம் முடிந்ததும் குப்பையில் போடவேண்டிய பழங்களை இந்த மாதிரி கூறு கட்டி விற்பனை செய்கிறான் இதில் எத்தனை பேர் கைகள் தொட்டு புழங்கியிருக்கு நல்லவர்களும் வருவார்கள் நோய் உள்ளவர்களும் வருவார்கள் இல்லை அங்கு வேலை செய்பவர்களுக்கு எதாவது நோயிகள் இருந்திருக்கலாம் 
இரண்டாவது ரோட்டு கைடை என்றால் புகை ஈ கொசு இப்படி ஏகப்பட்ட கிருமிகள் நிறைத்திருக்கும் இந்த பழங்களை உண்டதால் தான் உங்கள் மக்களுக்கு இவ்வாறான நோயிகள் வந்திருக்கிறது தயவு செய்து பணம் குறைவு என்று எண்ணி பல நோயிகளுக்கு ஆளாக்குகிறார்கள் இன்றைய மக்கள் 
இது உங்களுக்கு மட்டும் அல்லா எல்லோருக்குமே ஒரு நல்ல பாடம் (http://tamil.times.lk/news/2009)

ராசியால - ராசியான குடும்பம்

Diwali, Diwali 2016, Diwali puja, Diwali vidhi, Diwali puja timing, Diwali date, Diwali festival, Diwali muhurat, Diwali muhurat 2016, upcoming festival, festival 2016, indian express

அம்மா நாளைக்கு தீபாவளி பாட்டி தாத்தாவை பார்க்க போகலாமா ம்ம்ம் போகலாமே உங்க அப்பா என்ன செய்றாரு கொஞ்சம் கூப்பிடு அப்பா அப்பா அம்மா கூப்பிடுறாங்க இங்க வருவீங்களாம்,அப்பா வந்தார் என்னமா சொல்லு என்றார் 

நான் உங்க அம்மாவை பார்க்க வரவில்லை நீங்களும் உங்க பிள்ளையும் போயிட்டு வாங்க என்றதும்

ஆனந்தத்தில் அப்பாவும் மகளும் புதுத்துணியும் இனிப்பும் எடுத்துவைத்து கிளம்பிப் போனார்கள் 

அங்கு பாட்டி தாத்தாவை கண்டதும் கட்டி அனைத்து முத்தமிட்டாள் பேத்தி பின் பாட்டியிடம் பாட்டி பாட்டி நீங்களும் தாத்தாவும் வீட்டை விட்டு இந்த முதியோர் காப்பகத்திற்கு வந்ததிலிருந்து அம்மா அப்பா இருவருமே ஒரே சண்டை ஒரே கெட்டதாதான் நடக்குது பெரியப்பா பெரியம்மாவும் தனி குடுத்தனம் போய்ட்டாங்க அண்ணனும் அக்காவும் இல்லாம நான் மட்டும் தனியா இருக்கேன் முன்னெல்லாம் நாம கூட்டுக் குடும்பமா இருக்கும் போது எவ்வளவு சந்தோசமா இருந்தோம் அந்த சந்தோசம் இப்ப இல்லையே பாட்டி ஏன்?

பாட்டி சொன்னார் அது ஒன்றும் இல்லை நாம கூட்டுக் குடும்பமா இருக்கும் போது 12 ராசிகளும் ஒண்ணா நம்மளோடையே  குடித்தனம் பண்ணியது ஒருவருக்கு ஒரு ராசி கெட்டதைக் கொடுத்தாலும் இன்னொருவருக்கு இருக்கும் நல்ல ராசி நல்லதைக் கொடுக்கும் அப்போது குடும்பத்தில் இருக்கும் நல்லது கெட்டது சமநிலையாகி சந்தோஷம் பொங்கி பெருகியது இப்போது எல்லோரும் தனித்தனியாக பிரிந்ததால் எல்லா கேட்டதும் தனித்தனியாக இருந்து ஆட்டிப்படைக்கிறது என்று கண்ணீர் விட்டாள் பாட்டி 

ஓ அப்படியா பாட்டி நல்லது இந்த உண்மையை நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சொல்லி புரியவைத்து அடுத்த தீபாவளிக்குள் எல்லோரும் ஒண்ணா ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ முயற்சிக்கிறேன்...
நன்றி பாட்டி ,

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .



சிறுகதை, !

ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் நீ வருங்க காலத்தில் என்னவாக போறாய் என்று வினாவினார் அதற்கு ஒவ்வொருவரும் நான் ஆசிரியராக போறேன் IAS படிக்கபோறேன் டாக்டராக போறேன் இஞ்சினியராகப் போறேன் வக்கீலாகப் போறேன் என்று சொல்லிக்கொண்டே வந்தனர் அப்போது ஒரு மாணவி மட்டும் நான் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரியாகப் போறேன் (TNPSC) என்றதும் ஆசிரியர் வியந்தார் அந்த பெண்ணை அழைத்து உனது வித்தியாசமான சிந்தனைக்கு கரணம் என்ன என்று கூறலாமா ? என்றார்

ம்ம்ம் கூறுகிறேன் டீச்சர் எந்த tnpsc exam வந்தாலும் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பிக்கிரார்கள் இதில்18 வயது முதல் 40 வயது வரை exam எழுதலாம் என்று வரைமுறை இருக்கிறது அதில் நிச்சயம் வயது அதிகமானவர்கள் தேர்வாக மாட்டார்கள் அப்படியே தேர்வானாலும் பணம் கொடுத்து பதவியை முன்னவே தேர்வு செய்யப்பட்டிருக்கும் அப்படி பார்த்தால் இதெல்லாம் ஒரு கண் தொடைப்பு மாதிரி தான் என்று மக்களுக்கும் தெரியும் அரசுக்கும் தெரியும் இருந்தும் இதில் அரசுக்கு கிடைக்கும் வருமானம் சுமார் .... 10 லட்சம் மக்கள் x ரூ 150 அல்லது ரூ 50 வைத்துகொள்வோம் இப்படியே போனால் சுமார் 22 ஆண்டுகள் அரசுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு ? இப்ப நினைச்சாலே கண்ணக் கட்டுது டீச்சர் 
இதை மாற்றி அமைப்பதே எனது குறிக்கோள் 

எப்படி 

சுருக்கமாகக் கூறுகிறேன் டீச்சர்
18 வயது முதல் 25 வயதுவரை உள்ளவர்களுக்கு exam தனியாகவும் 26 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு தனி exam மும் இரண்டிற்கும் விண்ணப்பிக்க ஒரு குறிப்பிட எண்ணிக்கை படிவம் மட்டுமே என்று கூறினால் அனைவரும் பயன் பெறுவார்களே

இது சாத்தியமாகுமா ? 

மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்லியே விற்பனை செய்வது சாத்தியமாகும் போது இது சாத்தியமாகாத டீச்சர் ?

வகுப்பே கை தட்டி ஆரவாரம் செய்தார்கள் ....

சிறுகதை - களைகள் !



இளவரசி மிகவும் சாதுவானவள் எவருக்கும் துன்பம் என்றால் ஒடிப்போய் உதவுவதில் கெட்டிக்காரி ஒரு நாள் தன்னுடன் பணியாற்றும் தோழிக்கு பணம் தேவை பட்டது உடனே இளவரசி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வட்டிக்கு கொஞ்சம் பணத்தை வாங்கிக் கொடுத்தாள் 
சில நாட்கள் சென்றது கொடுத்த கடனை திருப்பிக் கேட்டாள் 
ஆனால் அந்த தோழியோ பணத்தை இப்போது திருப்பி தரமுடியாது கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றாள் உடனே இளவரசி சரி என்று ஒரு வருட காலம் காத்திருந்தாள் பணம் கிடைக்கவில்லை 
என்ன செய்வது கொடுத்தவர் கடனைக்கேட்க தன் பணத்தைக் கொடுத்து அந்தக் கடனை அடைத்தாள் 
ஓரிரு மாதம் ஆனது அதே தோழிக்கு பணம் தேவைப்பட்டது அந்த வழியாக வந்த இளவரசியின் தாத்தா என்னமா இந்தப்பக்கம் என்றார் 
அதற்கு அவள் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அறுவை சிகிச்சை செய்வதற்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது அதனால் தான் அங்கும் இங்குமாக வட்டிக்கு பணம் கேட்டு அலைகிறேன் கிடைக்கவில்லை தாத்தா என்றதும் 
சரிமா நான் வாறேன் முடிஞ்சா நானும் உதவி பண்ண முயற்சிக்குறேன் என்றவாறு சென்றார் தாத்தா  
வீட்டிற்கு சென்றதும் இளவரசியிடம் நடந்ததை சொன்னார் தாத்தா 
உடனே இளவரசி தாத்தா அவளுக்கு உதவுவது தவறு நான் கொடுத்த பணத்தை கேட்டப் போது வாங்கும் போது நன்றாக இருக்குமாம் கொடுக்கும் போது யாருமே நல்ல எண்ணத்துடன் கொடுக்க மாட்டார்களாம் என்று கூறினாள். அதைகேட்டு எனக்கு வருத்தமாக இருந்தது. அன்று மட்டும் சரியான நேரத்தில் நான் உதவவில்லை என்றால் அவளின் அக்கா திருமணம்
நடந்திருக்குமா? அன்றையில் இருந்து இனிமேல் யாருக்கும் பண உதவி செய்யக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டேன். அடிக்கடி கூறுவீர்களே விதைத்தது தான் மூளைக்கும் என்று அதுதான் என் தோழியின் விசயத்தில் நடந்துள்ளது என்றாள்     
நீ கூறுவது தவறு இளவரசி ஒரு விவசாயி வருடம் தோறும் விதவிதமாக காலத்திற்கு ஏற்ப விதைக்கிறான் அவன் விதைக்காமலே விளைவது களை அந்த களையை பிடிங்கி போட்டுவிட்டு தொடர்ந்து தனது விவசாயத்தை செய்து வெற்றி காண்கிறான் அதே போல் தான் நாம் உதவி செய்யும் போதும் சில களைகள் கூடவே இருக்கத்தான் செய்யும் அதை பிடிங்கி எறிந்துவிட்டு நம் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும் அப்போது தான் பிறவி பயன் முற்றுப் பெரும் என்றார் தாத்தா
சரிங்க தாத்தா நான் இப்போது சென்று அவளுக்கு தேவையான பணத்தை கடனுக்கு வாங்கி அவளிடம் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று கிளம்பினாள் ....
தோழியோ ரோசியோ அப்பணத்தை வாங்க மறுத்தாள் அப்போது இளவரசி கூறியது 
" மாதம் முழுவதும் உழைத்தப் பணத்தில் ஒரு பங்கு சந்தோசமாக  கடவுளுக்கு கொடுக்கிறோம் காரணம் நடந்ததற்கு நன்றி கூறி இனி நடக்கப்போவதற்கும் சேர்த்து கடவுள் நம்மை காத்தருள்வார் என்று தானே "
அதே போல் நம் கஷ்டத்தில் கடவுள் நேரில் வரமாட்டார் நம்மை போன்றவர்கள் உருவத்தில் தான் வருவார் அப்போது தனக்கு உதவி செய்யும் நபருக்கு அதைவிட இருமடங்கு வட்டி கொடுப்பதில் தவறில்லை அதை விட்டுவிட்டு வயிறேரிந்து கொடுத்தால் நாம் எதற்காக வாங்கினமோ அதற்கான பலன் தவறாகிவிடும் என்பதை உணர்ந்துகொள் "  நாளை வந்து அம்மாவை பார்க்கிறேன் தைரியமாக இரு என்று இளவரசி சென்றாள். 

சிறு கதை : உணவை வீணாக்காதே !



சித்து எப்போதும் தனது தாத்தாவுடன் மாலை வேளையில் வாக்கிங் போவது வழக்கம் அப்போது அந்த வழியாக வந்த விளம்பர வாகனத்தில் இருந்து ஒருவர் ஒரு நோட்டிசை கொடுத்தார் அதில் உணவை வீணாக்காதீர்கள் என்ற எழுதியிருந்தது .
படித்து விட்டு தாத்தாவிடம் விவரத்தை கூறினான் கூறியதை கேட்காமல் எதோ சிந்தனையில் இருந்த தாத்தாவின் கண்களை உற்றுப் பார்த்தான் 
தாத்தாவோ அருகில் இருக்கும் குப்பை தொட்டியை பார்த்தார் அங்கு ஒரு காகம் பசியோடு குப்பை தொட்டியில் இருக்கும் வடையைக் கொத்தியதும் சந்தோசமாகப் பறந்து சொன்றது. பின் சிறிது நேரம் கழித்து காக்கை அந்த வடையை அதே குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றதைக் கண்டு வருத்தத்துடன் தாத்தா சொன்னார் 
என்றோ ...
வானுயர்ந்த அனுமனுக்கு 
வடையால் அலங்காரம் 
வந்த விழிகள் எல்லாம் 
வளைத்து வளைத்து எடுத்த செல்பியில்
வடை ஊசவில்லை 
வயிற்றுப் பசிக்கு 
வட்டமிட்ட காக்கையின் 
வாயில் ஊசியதோ ?
என்றதும் அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி தாத்தாவை புகழ்ந்தார்கள் அத்துடன் நாங்கள் யாரும் இனிமேல் உணவை வீண் அடிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்தார்கள் 
மறு நாள் சித்து பள்ளிக்கு சென்றான் வழக்கம்போல் பாடம் நடந்தது மதிய உணவுக்கு நேரம் வந்ததும் தனது உணவை எடுத்து சென்று ஓடுகையில் கை தவறி கிழே சிந்தியது சிந்திய உணவை குப்பையில் போடும் படி ஆசிரியர் கூறினார் ஆனால் குப்பையில் கொட்டிய சோறு அழுகி தொற்றுக் கிருமிகள் காற்றுடன் கலந்து துருனாற்றம் வீசும் என்பதை பேச முடியாத காக்கை அந்த வடையை கொண்டு சென்ற இடத்தில் போட்டால் அங்கேயும் நோய் கிருமி பரவிவிடுமே என நினைத்து எடுத்த இடத்திலே கொண்டு வந்து போட்டதை நினைவு கூர்ந்த சித்து தன் பசி அடங்கவில்லை என்றாலும் இந்த பருக்கையில் எத்தனை காகங்களின் பசி அடங்கும் என்று பள்ளியின் மொட்டை மாடியில் சென்று தூவிவிட்டு வந்தான் இதை கண்ட அனைவரும் அவனை பாராட்டி தாங்களும் உணவை வீணாக்க மாட்டோம் என்று சபதம் எடுத்தனர் .
குழந்தைகளே இதன் மூலம் தாங்கள் கற்றுக்கு கொள்வது என்னவென்றால் "உடலைப் பேணுவதற்கு உணவு தேவை அப்படிப்பட்ட உணவை வீணாக்குவது உலகையே அழிப்பதற்கு சமமாகும் "

சிறுகதை,



ரோசி தனது பாட்டியின் நினைவு நாளுக்கு பூஜை போட கிராமத்திற்கு செல்கிறாள் 
அங்கு பல வகை இனிப்புகளுடனும்  காரங்களும் சேர்த்து கறி குழம்பு வாசனையும் ஊரையே அழைத்தது தனது சொந்தங்கள் அனைவரும் உண்ட பின் மிஞ்சிய சோற்றை தனது தோட்டத்தில் வேலை செய்கிறவர்களுக்கு கொடுக்க தாத்தா எடுத்து வைத்தார் 
இதைக் கண்ட ரோசி ஏன் தாத்தா அவர்களும் நம்முடன் அமர்ந்து உணவு அருந்தலாமே என்றாள் 
அதற்கு தாத்தா அவர்கள் கொல்லைப்புறமாக தான் வருவது நம்ம ஊர் வழக்கம் இது எல்லாம் உனக்கு புரியாது நீ போய் சாப்பிடு என்றார் 
உடனே தாத்தா எனக்கு ஒரு சந்தேகம் 
கேள் ரோசி 
நம்ம குலுக்கையில் நிரம்பி வழியுதே கடலை அப்புறம் அரிசி மூட்டை பருப்பு மூட்டை காய்கறி மூட்டை இதெல்லாம் நீங்களா விளைய வைத்தீர்கள் இல்லையே ஏன் ?இதையெல்லாம் வியர்வை சிந்தி வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு உழைத்து கொடுத்த இந்த ஏழைகளின் இரத்தம் தானே தாத்தா இவைகளை விற்றப் பணத்தை பீரோவில் பூட்டி வைக்கிறீர்கள் இவர்களை மட்டும் பின்புரத்தில் வந்து உணவருந்தச் சொல்கிறீர்கள் இது ஞாயமா தாத்தா 
குழந்தையின் அறிவை கண்டு வாமன கிருஷ்ணன் தான் தன் கண்களை திறந்து வைத்தார் என்று தனது தவறை உணர்ந்து அவர்களை எல்லாம் முன் புறமாக வந்து உணவு அருந்தும்படி மிகவும் அன்போடு அழைத்தார் தாத்தா
ஊர் மக்கள் அவனைவரும் ரோசியை தெய்வமாகவே கொண்டாடினர் அன்றையில் இருந்து அவ்வூர் ஒற்றுமையுடனும் சந்தோசமாகவும் வாழ்த் தொடங்கியது 
குழந்தைகளே ! இந்தக் கதை கூறும் நீதி என்ன இளைய தலைமுறையாகிய நீங்கள் ஜாதி மதம் வேதம் பாராமல் ஒற்றுமையுடன் இருந்தால் போதும் உலகமே உங்களை வியந்து பார்க்கும் என்று தூண்டுதலுக்கு உதவியாக இருந்தது கல்வி 
ஆகவே ஒரு மனிதனை மாற்றும் சக்தி கல்விக்கே உண்டும் என்பது தான் உண்மை  

சிறுகதை - சிற்பி !



பொற் கோவிலூர் என்ற கிராமத்தில் வசிக்கும் மாதவன் சிலைகள் வடித்து தனது வாழ் நாளை கழித்து வந்தான். அவன் எப்போதும் எரிச்சலான முகத்துடனும் கோவமான சுபாவத்தையும்  கொண்டிருந்தான். அவன் அவ்வூருக்கு வெகு நாட்களாக செதுக்கிய சிலை தயாராகும் தருவாயில் இருக்கும் போது  ஊர்  பெரியவர்கள் அனைவரும் மாதவனை சந்தித்து வருகிற வெள்ளிகிழமை நாள் நன்றாக உள்ளது அன்றே இந்த சிலையை பிரதிஷ்டை செய்திடலாம் என்றனர்.அவனும் சரி என்று விறுவிறுப்பாக வேலையை முடித்தான் . சாமியின் கண்களை திறக்கும் பணி முடியும் போது சிறு துளி கல் அவனது கண்களில் பட்டு பார்வை இழந்துவிட்டான். மறு நாள் வெள்ளிக் கிழமை அவன் செய்த சிலைக்கு கும்பாவிசேகமும் ஆட்டமும் பாட்டமும் ஜோராகா நடந்தது இவற்றையெல்லாம் அந்த சிற்பியால் கண்டு களிக்க முடியவில்லை மனம் உடைந்து கோயில் சன்னதிக்கு சென்று தாயே கல்லாக இருந்த உன்னை கடவுளாக வடித்தேன் இன்று ஊரே கைகள் கூப்பி உன்னை வணங்குகிறது கடவுளாக பாவிக்கும் என்னை ஒரு கல்லாக தூக்கி எரிந்து விட்டார்களே இந்த கல் நெஞ்சு கார மக்கள் இது என்ன கொடுமை இதற்கு நீயே என்னை கொன்று விடலாமே என்று அழுது புலம்பினான் மாதவன் 
இதைக் கேட்ட தெய்வம் குழந்தை உருவில் வந்து ஐய்யா தங்களின் கூற்று தவறு.கல் கடவுளாகலாம் கல் நெஞ்சம் படைத்த நீங்கள் கடவுளாக முடியுமா ? என்றதும் குழந்தை மறைந்தது 
குழந்தையே நீ யார் எனது தவறை சுட்டிக்காட்டி நடந்த தவறை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி சொல்லியவாறு நினைத்துப் பார்த்தான் மாதவன் அன்றொரு நாள் ஒரு குருடனை அலச்சியம் செய்தேன் இன்று நான் குருடனாக வாழ்கிறேன் ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடு இறைவா இனிமேல் உனக்கு கண்ணுக்கு கண்ணாக நானே இருப்பேன் என்றதும் விடிந்தது அய்யோ காண்பது கனவா 
தாயே என் தவறை உணர்த்தவா கனவில் வந்தாய் என்று தன் தவறை உணர்ந்து அந்த சிலைக்கு கிடைத்தப் பணத்தை கண்ணில்லாத மக்களுக்கு தானமாக தருகிறேன் என்று வாக்கு கொடுத்தான்.
குழந்தைகளே "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பதற்கு இக்கதை ஒரு உதாரணம் 
நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை ஒருவர் இன்னொருவருடன் தோழமையுடன் இருக்கவே வந்திருக்கிறோம் என்று உணருங்கள் . 
நன்றி !
  

சிறுகதை - நிவாரணம் !




தீபாவளி லீவு முடிந்ததிலிருந்து சென்னையில் வரலாறு காணாத கன மழை இதனால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டது . இன்று பள்ளிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஒரு கட்டுரைப் போட்டி. இந்த மழையால் என்ன என்ன சேதங்கள் அதனால் என்ன நன்மை என்று ஒவ்வொருவரும் எழுதி வரவும் என்றதும் 
பூமிகா தனது பாட்டியிடம் வந்து நடந்ததைக் கூறினாள். 
அதற்கு பாட்டி சரி நீ எதைப்பற்றி எழுதப் போறாய் என்று சொல் நான் முடிந்தவரை உதவி செய்கிறேன் 
உடனே பூமிகா "நிவாரணம்" பற்றி எழுதப்போறேன் பாட்டி 
ஒ அப்படியா பலே பேஷ் பேஷ் நன்றாக எழுது இதற்கான அர்த்தம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு சாட்டை அடி கொடுப்பது போல் சொல்கிறேன் எழுதிக் கொள் என்றதும் 
பூமிகா பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு பாட்டியின் அருகில் வந்தாள் 
அன்று பாஞ்சாலியின் துயிலை இழுத்து மானபங்கம் பண்ண எண்ணிய கௌரவர்களுக்கு பாடம் புகட்டவே கிருஷ்ணன் துயில் கொடுத்து பாஞ்சாலியின் மானத்தை காத்தான் அதனால் தான் பாஞ்சாலி சபதம் நடந்தது 
இன்று மழையால் பாதிக்கப்படும் மக்களின் நலன் காக்க கிருஷ்ணன் இந்த புவியில் சில மனிதர்கள் உருவில் நிவாரணம் கொடுக்கிறான் அதில் சில பல அரக்கர்கள் அதிலும் ஊ ழல் செய்கிறார்கள் அவர்களுக்காகவே இந்த பஞ்ச வெள்ள சபதம் தொடர்கிறது 
சரியாக சொன்னீர்கள் பாட்டி, மீண்டும் எனக்கு ஒரு சந்தேகம் 
கேள் பூமிகா 
எல்லோரும் நதிக்கு கால் இருக்கிறது என்று கூறுகிறார்களே இது உண்மையா ? 
உண்மை தான் பூமிகா 
சற்று விளக்குங்களேன் பாட்டி 
இதோ சொல்கிறேன் நதி நடந்தால் என்னவாகும் என்று காட்டவே இந்த வெள்ளம். இதில் எத்தனை கால்கள் நடக்கின்றன,ஓடுகின்றன அதிலும் சில பல மரணமும் கூட நடக்கின்றன அதனால் தான் நதி எப்போதும் படுத்துக்கிடக்கிறது நான் நடந்தால் நாடு தாங்காது என்று உணர்த்தவே இந்த கன மழை வெள்ளம் 
ஆகா அழகான விளக்கம் பாட்டி அப்படியே இந்த மழை நல்லாத கெட்டதா என்று சுருக்கமாக கூறுங்களேன் 
மழை வருவது இயல்பு அதன் வழியை மறைத்து கட்டிடங்கள் கட்டியது தவறு, நஞ்சை பூமி நான்கு போக விளைச்சலைஉருஞ்சும் தன்மை கொண்டது அதை தரிசாக்கி தண்ணீர் மண்ணை பெருசாக விலை வைத்து விற்றவன் வாழ்ந்துவிட்டான் வாங்கியவன் வீழ்ந்துவிட்டான் இப்போது விளைச்சலுக்கு தேவையான தண்ணீர் இருக்கிறது விளைய நிலம் எங்கே ?என்று கேட்கும் வானத்திடம் சண்டை போட முடியுமா ? நான் எவ்வளவு காலம் தான் மழை பொழியாமல் அடக்கி வைப்பது அதனால் நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்று அடைமழையாக வெளுத்து வாங்குகிறேன் என்று கூறுவது உங்களைப் போல் வளரும் சமுதாயத்திற்கு பாடம் புகட்டவே வந்தேன் இனியாவது திருந்துங்கள் இல்லை திருத்த முயலுங்கள் என்று கூறுவதாக உனது கட்டுரையை முடித்துக்கொள் பூமிகா என்றதும் 
பாட்டிக்கு நன்றி சொல்லி பள்ளியில் முதல் பரிசு பெற்றாள் பூமிகா 
"பாதை மறந்து வாழாதே 
பாலம் உடைந்து சாகாதே " 
இந்த கதை கூறவருவது என்னவெறால் காலத்தை விட பழிவாங்கக் கூடிய சக்தி வேறு ஒன்றும் இல்லை

சிறுகதை - ஜல்லிக்கட்டு !


ரோஷன் தனது பள்ளியில் நடக்கும் சிறப்பு பேச்சுபோட்டிக்கு தேவையான கருத்துகளை தனது அம்மாவிடம் சென்று கேட்கிறான் ஆனால் அம்மாவோ காலையில் சமைக்கணும் அப்புறம் அலுவலகத்திற்கு செல்லனும் நீ போய் உன் அப்பாவிடம் கேள் என்றாள் உடனே ரோஷன் தனது அப்பாவிடம் சென்று கேட்டான் அப்பாவோ காலையில் வாக்கிங் போகணும் அப்புறம் ஆபீஸ்ல ஒரு அவசர மீட்டிங் இருக்கு அதுக்கு நான் பிரிப்பேர் பண்ணனும் நீ போய் தாத்தாவிடம் கேள் என்றதும் சலித்துக்கொண்டு தனது தாத்தாவிடம் சென்று கேட்டனான் தாத்தாவோ நடந்ததையெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தேன் உனக்கு என்ன கருத்து வேண்டும் என்று கேள் என்னால் முடிந்தவரை உதவி செய்கிறேன் என்றார் நல்லது தாத்தா மிக்க நன்றிகள் என்றவாறே கேள்வியை தொடுத்தான்
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிப்பது நல்லதா? கெட்டதா ?
சரியென்றும் சொல்லமுடியாது தவறென்றும் சொல்லமுடியாது அவரவர் வசதியை பொறுத்தது 
என்னதாத்தா குழப்புறீங்க ....
தாத்தா சிரித்துக்கொண்டே ஜல்லிக்கட்டும் பள்ளிகட்டும் நமது மூதாதையர்கள் வந்த வழிமுறை என்று பலருக்கும் தெரியும் தெரிந்தும் என்ன செய்வது ஒரு பக்கம் மாட்டை அடித்து தின்பது தப்பில்லை என்பார்கள் மறுபக்கம் அதே மாட்டை அடக்கி விளையாடுவது தப்பு என்றும் தப்பு இல்லை என்றும் கூறுகிறார்கள் 
இன்னும் கொஞ்ச நாள் போனால் கொசுவை அடிப்பவனுக்கு ஆயுள் தண்டனை ஏறும்பை நசுக்கியவனுக்கு மரண தண்டனை என்று வாதிப்பார்கள் எல்லாம் கலிகாலம், அன்று அரிசியை சமைத்து உண்டோம் ஆயுள் கூடியது இன்று புதுசு புதுசா  உணவுகளை சாப்பிடுகிறோம் புற்று நோய் போன்ற புதிய புதிய நோயிகள் வந்து சாகிறோம் 
அதுமட்டுமா ஒவ்வொரு வீட்டிலும் எத்தனையோ குழந்தைகள் மிருகங்களாகவும் மிருகங்கள் குழந்தைகளாகவும் வளர்கிறார்கள். நம் கண்ணுக்கு தெரியாமல் எத்தனை உயிர்களை வதைக்கிறோம் தெரிந்தும் எத்தனை உயிர்களை கொல்கிறோம் அது தவறென்று வாதிட முடியாது ஏன் என்றால் அது நம் முன்னோர்கள் மரபு என்பார்கள் 
உதாரணத்திற்கு மதுவை எடுத்துகொள் சிலர் குடித்துவிட்டு மிருகம் போல் நடக்கிறான் இதை தடை செய்வதற்கு எவரும் முன்வரவில்லை,இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் ...
ம்ம்ம் மிகவும் சரியகாக சொன்னீர்கள் தாத்தா நம் தமிழரின் பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டே நசுக்கப் படுகிறது என்பது தான் உண்மை.மேலும் எதையுமே தகுந்த பயிற்சியுடன் செய்தால் தவறில்லை அப்படி தானே  
ஆம் ரோஷன் பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது நீ கிளம்பு 
ஓகே தாத்தா பாய் சொல்லி கிளம்பினான் ரோஷன் .
நன்றி !

சிறு கதை - கடிகாரம்

large picture

பள்ளி விடுமுறை விட்டது உடனே ஆதி கிராமத்தில் இருக்கும் தனது தாத்தா வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு தன் தந்தையிடம் கூறினாள்

அவரும் ஆதியை அழைத்துக் கொண்டு சென்றாரர்

இரண்டு நாட்கள் கழித்து அவர் திரும்பிவிட்டார்

ஆதி அங்கேயே தனது விடுமுறையை அழகாகவும் இனிமையாகவும் கழித்து வந்தாள்

ஒரு நாள் தாத்தா வீட்டில் இருக்கும் பழமையான கடிகாரத்தை பார்த்து எள்ளி நகைத்துவிட்டு தாத்தா தாத்தா என்று அழைத்தாள் 

தாத்தா உடனே வந்தார் 
என்னடா ஆதி என்றார் 

இன்றைய காலத்திற்கு ஏற்றார் போல் அனைத்தையும் புதுமையாக மாற்றி விட்டீர்கள் ஆனால் இந்த பழைய கடிகாரத்தை மட்டும் ஏன் குப்பையில் போடவில்லை என்றாள்

அதற்கு தாத்தா இது ஒழுங்காகத்தானே ஓடுகிறது பின் எதற்கு குப்பையில் போட வேண்டும் என்றார்
இருந்தும் பழமையாக உள்ளதே

தீடிரென்று கடிகராம் பேசத் தொடங்கியது . நானும் பல ஆண்டுகளாக நிற்காமல் ஓடி சரியான நேரத்தைக் காட்டி வருகிறேன் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது பேத்தியே நீயாவது ஒய்வு கொடு என்றதும்

ஆதி சிரித்தாள்

உனது புகார் தவறு எனதருமை கடிகாரமே என்று பதில் அளிக்கத் தொடங்கிய தாத்தா ஒவ்வொரு டிக்கிலும் உனக்கு ஒரு வினாடி ஒய்வு இருப்பதை நீ மறந்து விட்டாயோ ?...

கடிகாரம் ஒரு நொடி யோசித்தது பிறகு மீண்டும் வழக்கம் போல் தன் பணியைத் தொடங்கியது

தாத்தாவின் அறிவுப்பூர்வமான சிந்தனையைக் கண்டு வியந்தாள் ஆதி

திடீரென்று தாத்தா சொன்னார் ஒரு ஒழுங்கு முறையிலான வேளையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக் கொன்று ஈடு கொடுத்து அமைந்தால் அந்த ஒழுங்கு முறையே அதிக பளுவையும் அதனால் ஏற்படும் வலியையும் போக்கிவிடும் என்பது தான் உண்மை !

பள்ளி தொடங்கும் நாள் வந்தது ஆதி தாத்தாவின் நீதிக் கதையை தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கும் உரைப்பதாக வாக்கு கொடுத்தாள்.

mhishavideo - 145