Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

சமயோசித புத்திக் காரி ...!


மௌனத்தை மட்டுமே
பரிசளித்துவிட்டு
சம்மதத்தை சண்டைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள்
சமயோசித புத்திக் காரி ...! 

என் கார்மேகமே ...!

அவள் விழிகளில் 
எப்போதும் 
அடை மழை 
அடம் பிடிக்காமல் 
நனைந்து கொள்ளவா 
என் கார்மேகமே ...!



வளர்பிறை காதல் ...!



 

ஆரம்பத்தில்
வளர் பிறையாக
நகர்ந்த காதல் 

போகப்போக
 தேய்
பிறையாக
குறையக் காரணம்

நம் இருவருக்கும்
இடையில் 
இடைஞ்சலாக 
மலர்ந்த நட்சத்திரங்கள் ...!

தனிமையின் வலி !

 


பார்ப்பதற்கு
அழகாகத்தான் இருக்கிறது
பாய் மரக் கப்பல்
அதில் பள்ளம் மேடு பார்த்து 
பயணிக்கும் நிழலுக்குத்
தான் தெரியும் தனிமையின் வலி !

நானும் நீயும் ...!



நானும் நீயுமாய்
சேர்ந்து அசைக்கிறோம்
நிழல் மட்டும்
வந்து திரும்புகிறது
காற்றின் கிளையில் ! 




வானம்பாடி அவள் ..!

 




ஓடும் மேகமாக இருந்தவள்
பாடும் சோகமாக மாற்றிவிட்டு
தேயும் நிலவாக மறைந்து விட்ட
வானம்பாடி அவள் ..!

கருவறை கண்ணீர் ..!

 

கருவறை கண்ணீருக்கும்
காதல் கண்ணீருக்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
இரண்டுக்கும்
பாஷை தெரியாது பாசம் புரியும் ...!

நம்பிக்கை துரோகம் ...!















யாரை நீ
நூறு சதவீதம் நம்புகிறாயோ
அவராலே
உன் இதயத்தை
சுக்கு நூறாக
உடைக்க முடியும் ...!

உதிரத்தின் வாசம் ...!

 

நீ முள்ளாய்
குத்தி கிழித்தாலும்
என் இதயத்தில்
உதிரும்
உதிரத்தின் வாசத்தில்
உன் பெயர் கலந்திருக்கும் ..! 

பாஸாக்கிவிடு ....!

 

நொடிக்கு நொடி
உன்னை பின்தொடர்ந்த
நேரத்தைக் கொண்டு
வரைபடம் வரைந்து
வாட்ஸப் அளவு
பேஸ்புக் அளவென
வரைமுறை வகுத்துள்ள
எனக்கு பத்துக்கு பத்து மார்க்கு
போட்டு
பாஸாக்கிவிடு ....!

காதல் ஊஞ்சலில் ...!

 

உன் மன ஊஞ்சலில் ஆடும்
தாலிக் கயிறு நான்
அறுந்து போவதற்குள்
தாலிக் கொடி வாங்கி கட்டிவிடு
இருவரும் சேர்ந்து ஆடுவோம்
காதல் ஊஞ்சலில் ...!

ஸ்லோ பாய்சன் ...!


என்
கவிதையை
கொஞ்சம் கொஞ்சமாக
கொன்று கொண்டு இருக்கிறது
காதல் எனும்
ஸ்லோ பாய்சன் ...! 



என் காதல் மனதை ...?

 

உள் அன்போடு
தான்
உன்னை உணர்கிறேன்
உயிர் அம்பு அல்லவா
 வேட்டையாடுகிறது
என் காதல் மனதை ...? 

தோற்று போதல் ...!

 

எந்த உறவிடம்
நீ ஆயிரம் முறை
தோற்றுப் போகிறாயோ
அந்த உறவே
உன்னை
 பல்லாயிரம் மடங்கு
மகிழ்ச்சியாக வைத்திருக்கும் ...!

காதல் ஒரு காகித கப்பல்...!



என் காதல்
ஒரு
காகித கப்பல்
அது
கரை சேரும் வரை
என் கண்ணீர்
கடலில் மிதந்து
கொண்டே இருக்கும் ...!

 

காதல் வலி ...!




உயிர் போகும்
வலியைத் தந்தவனே
உடல் உயிர் ஆவி
அனைத்தும்
உனக்கென எழுதித் தரக்
காத்திருக்கிறேன் வாராயோ 

வரைவோலை காதல் ...!

 


என் வரைவோலை 
பின்னால்
உன் பெயர் ஓலை 
வேண்டும் என்பதே
என் 
ஆகச் சிறந்த
ஆசையில் ஒன்று ..!

என் கண்ணீரின் சக்தி ...!




என் கண்ணீரின் சக்தி 
அக் கடலை விட 
பெரியது என்பதை விட 

உன் புன்னகையில் 
நான் கொண்ட பக்தி என் காதலைவிட உயர்ந்தது ...!

 

புதுப்பித்துக் கொள்ளலாம் ....!

 

சதையோடு ஓட்டிக்கொள்ளும்
நினைவுகளை
பிரித்து எடுக்கும் பாதரசம்
இருந்தால் கூறுங்கள்
சேதாரம் செய் கூலி இல்லாமல்
புதுப்பித்துக் கொள்ளலாம் ....! 

முதல் காதலை.....!

 

அதிகமான ஏக்கம்
ஆர்ப்பரிக்கும் மனசு
இடையிடையே
துள்ளிக் குதிக்கும் கவிதை
நின்று நிதானமாய்
ஏறி இறங்கும் ஞாபகம்
தடபுடலாய்
ஓடி ஓளியும் இதயத் துடிப்பு
மிருகமாய் அவ்வப்போது
எட்டிப்பார்க்கும் கோபம்
தனக்கு தானே
சிரித்து மகிழும் புன்னகை
இவற்றைத் தாண்டியும்
தன்னலத்தோடு தேடுகிறது
தலைமறைவாகப்
பதுக்கி வைத்த
முதல் காதலை.....!

mhishavideo - 145