அதிகமான ஏக்கம் |
ஆர்ப்பரிக்கும் மனசு |
இடையிடையே |
துள்ளிக் குதிக்கும் கவிதை |
நின்று நிதானமாய் |
ஏறி இறங்கும் ஞாபகம் |
தடபுடலாய் |
ஓடி ஓளியும் இதயத் துடிப்பு |
மிருகமாய் அவ்வப்போது |
எட்டிப்பார்க்கும் கோபம் |
தனக்கு தானே |
சிரித்து மகிழும் புன்னகை |
இவற்றைத் தாண்டியும் |
தன்னலத்தோடு தேடுகிறது |
தலைமறைவாகப் |
பதுக்கி வைத்த |
முதல் காதலை.....! |
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...