முதல் காதலை.....!

 

அதிகமான ஏக்கம்
ஆர்ப்பரிக்கும் மனசு
இடையிடையே
துள்ளிக் குதிக்கும் கவிதை
நின்று நிதானமாய்
ஏறி இறங்கும் ஞாபகம்
தடபுடலாய்
ஓடி ஓளியும் இதயத் துடிப்பு
மிருகமாய் அவ்வப்போது
எட்டிப்பார்க்கும் கோபம்
தனக்கு தானே
சிரித்து மகிழும் புன்னகை
இவற்றைத் தாண்டியும்
தன்னலத்தோடு தேடுகிறது
தலைமறைவாகப்
பதுக்கி வைத்த
முதல் காதலை.....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145