Showing posts with label சென்ரியு. Show all posts
Showing posts with label சென்ரியு. Show all posts

சென்ரியு


வரதட்சணை  
செலவு கணக்கு காட்டினான் 
தாய் மாமன் 
ஆண்டு வருமானம் 
புரட்டிப்போடுகிறது 
பெண் கல்வி 
அதிகமாக நேசித்துவிட்டேன் 
இந்த காதலர் தினமும் 
ஏமாற்றத்துடன் முதிர் கன்னி !
கடவுளின் மனம் 
எதிரொலிக்கிறது 
நேத்திக்கடன்!
கண் திறந்தார் கடவுள் 
பார்வை கிடைத்தது 
யாசகனுக்கு !

சென்ரியு,


தாண்டுவதற்குள் 
நீண்டு கொண்டே செல்கிறது 
வறுமை ...!

#சென்ரியு#

சிங்கத்தின் உதவியுடன்
கைமாறுகிறது
கருப்பு பணம் ...!

சென்ரியு,



குடுகுடுப்பைகாரன் 
நல்லகாலம் பொறந்தது
ராசி கல் விற்பனை

சென்ரியு ...!

அனைத்துக் கட்சி கூட்டம் 
கல்லெறிந்தார்கள் 
ஏழையின் வயிற்றில் ! 

சென்ரியு !



எந்த சாதிக்காரன் 

செய்த அருவாளோ ? 

குறி பார்த்து வெட்டுகிறது!

சென்ரியு !



பணத்தில்
தூலி கட்டி ஆடுகிறது
தாலி சரடு ...!

சென்ரியு.


பார்வையால் 
ததும்பியது நிறைகுடம்
இடையழகு ...!

அடித்த வெள்ளத்தில் 
மூழ்கியது 
மதுக்கடை போராட்டம் ...!
இரண்டு பொண்டாட்டிக்காரன் 
எழுதினான் 
ஸ்ரீராமஜெயம் ...!
பணத்தில் தெரியாத ஜாதி 
தெரிந்தது 
பத்திரிகையில் ...!

சென்ரியு - செல் அடங்கிவிடும்



"செல்" அடிச்ச பேசாதே 

"செல்" அடங்கிவிடும் 

சேருமிடம் தெரியாமல்  ...!

சென்ரியு - 5



டாப் கலண்டவனெல்லாம் 
டாப் டென் வரிசையில் 
டாஸ் மார்க் 



சென்ரியு - 4



வரப்புகள் எல்லாம் 
இறப்புகள் 
வீட்டு மணை ..!


சென்ரியு - 3



திருக்குறள் - ஹைக்கூ 

எப்பால் மொழியிலும் 
முப்பால் சுரக்கும் 
நம் தாய் பால்
வேதங்களுக்கும் நல் 
போதங்கள் புகட்டும் 
தெய்வநூல் 

சாஸ்திரங்களை கூட 
சோஸ்திரமாய் மாற்றும் 
அச்சையப்  பாத்திரம் 

கடலில் சிலையாகி 
தமிழில் முதலாகி
சரித்திர அழகன் 

அகிலத்தையே 
ஈரடியால் நடந்த 
தமிழ் தாத்தா 

கவிஞர்கள் பிறக்க 
தமிழை வளர்க்க 
தாயாய் மருவிய தந்தை 

இளையவர்களுக்கு பாடம் 
முதியவர்களுக்கு வேதம் 
இதயக் குறள்

சென்ரியு - 2



அம்மாவாசையில் முந்திவிரித்தேன் 
பௌர்ணமியில் பாவ மன்னிப்பு 
கேலியாய்  குழந்தை

வரியால் விலை வீக்கம் 
வளர்கிறது பொருளாதாரம் /வாணிபம் 
ஏக்கத்தில் விவசாயி 

வியர்வையில் உரம் 
இனித்தது கரும்பு 
கசந்தது உழுதவனின் பசி 

சென்ரியு - 1




ஹரிஜன் 
கடவுள் 
அம்பேத்கர்


சட்டம் 
தலை நிமிர்ந்தது 
அம்பேத்கர்



நீதி 
தலை குனிந்தது 
வாய்தா ...!



கண்கெட்டி வித்தை 
உஷ் 
ஓடிவிட்டது நீதி...!



புன்னகை 
ஒளிந்துகிடக்கிறது 
பணத்தின் கீழ்...!
சுதந்திரம் 
மறைந்திருக்கிறது 
அரசியலின் கீழ்...!
தாடிக்குள்
எத்தனை கேடிகள் 
நேத்திகடன்..!

mhishavideo - 145