Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

முத்தமிழே !

Image may contain: 1 person, sunglasses and closeup

முத்தமிழே 
உன் எழுது கோல்
இறக்கமின்றி கிடக்கிறது
எழுந்து வா

காவேரியும் 
கடலில் கலந்து விட்டது
கல்லணையும் 
நிறம்பி வழிந்து விட்டது
கடவுளின் 
இதயம் மட்டும் இறங்கவில்லையோ
எழுந்து வா தலைவா

தமிழரின் உரிமைக்கு
குரல் கொடுத்த தமிழே 
இன்று
தலைசாய்ந்து கிடப்பதைக் கண்டு 
கண்ணீர் சிந்துகிறதோ
காவேரியின் முன்

இதுவரை கரை சேர்த்த 
கட்டுமரம் களங்கரை விளக்காக 
ஒளி வீச எழுந்து வா

உனக்கும் ஓர் இடம் உண்டு 
அங்கே உலகம் பேசும் 
வரலாறு உண்டெனத் தனித்துவம் 
படைத்தத் தமிழே இன்று 
தமிழகமே உன் இறப்பை 
நோக்கி தவிக்கிறது இங்கு

கதறி அழுக்கும் இதயத்தின் 
ஒரம் கொஞ்சம் கருணை இருந்தால்
விடை கொடுக்கும் முன்
விழித்தெழு என் வெண் மேகமே
விடியலை கொஞ்சம் நிறுத்திவிடு 

அலை கடலென திரண்டு ஓடும்
மனிதர்கள் முன் உன்
ஆன்மாவை எவ்வாறு அறிவது
என்று புலம்புகிறோம் 

விழித்திடு தமிழே ! விழித்திடு தமிழே !
விழித்திடு தமிழே ! விழித்திடு தமிழே !

தளபதி விஜய் - க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Vijay's 61 film title, first look poster released
உள்ளொன்று வைத்து 
புறமொன்று பேசும் 
உலகினிலே 
உரிமைக்கும் குரல் கொடுத்த 
இளைய தளபதியே 
செய் நன்றி மறவாத 
ரசிகர்களுக்காக 
செஞ் சோற்று கடன் தீர்த்த 
தலைவனே 
உன் கையசைத்தால் 
கை தட்டும் கூடடத்திற்கு நடுவில் 
கலங்கரை விளக்காக 
வழிகாட்டி ஒளி கொடுத்த 
தமிழனே 
நல்லரசு கொடுத்தால் 
வல்லரசாகும் காலம் 
வெகு தூரமில்லையென்று  
போர் கொடி தூக்கிய 
விஜயனே 
உன்னை பாராட்ட 
உலகமே  காத்திருக்கு 
விரைந்து வா 
நாளைய முதல்வனே 

கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாள் விழா

Image may contain: 1 person, sunglasses and text

ஜாதி மதங்களைக் கடந்தவரு 
சமத்துவம் பேசிடும் கலைஞரிவரு 
அண்ணா வழியில் நடந்தவரு 
அகிலத்தில் பூத்த முதல்வரிவரு 
முரசொலி இதழைத் தொடங்கியவரு 
முத்தமிழ் கவிஞராய் திகழ்ந்தவரு 
திரைக்கதை வசனம் அமைத்தவரு 
திராவிட கழகத்தின் மூத்தத் தலைவரிவரு  
ஆண்டுகள் அறுபது உழைத்தவரு
அருந்ததியர் வாழ்வைக் காத்தவரு                                                                   
இலவசக் கண்ணொளி வழங்கியவரு 
இதயங்களில் வாழும் தெய்வமிவரு 
வைர விழா கண்டவரு நாளைய 
வரலாறு பேசிடும் நாயகனிவரு 
உலகமே பார்த்து வியந்தவரு 
உயிர் மூச்சாய் வாழும் தமிழறிஞரிவரு 
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் நூற்றாண்டு !

கிறிஸ்மஸ் பாடல் !


Image may contain: text

குழந்தை ஏசு பிறந்துவிட்டார் வாருங்கள் 
குதித்து குதித்து மகிழ்ந்து பாடி ஆடுங்கள்

தொழுவத்திலே பிறந்தவரே பாருங்கள் 
தெகிட்ட தெகிட்ட அல்லேலூயா கூறுங்கள்  

ஏழைக்கு இரங்கச் சொன்னவரை தேடுங்கள் 
எதிரியையும் நண்பனாக்க ஓடுங்கள் 

அல்லேலுயா அல்லேலுயா பாடுங்கள்  
அகிலம் காக்கும் ஞானத்தையே நாடுங்கள் 

ஜீவனுள்ள தேவனையே போற்றுங்கள் இயேசு
ஜெபத்தை கேட்கும் உள்ளங்களை தேற்றுங்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்ரம் ஜி !



"ஐ "
தேசிய விருதையே 
மிஞ்சியது 
நட்சத்திரக் கிரிக்கெட்டர்களின் 
கேக் விருது !
மெர்சலாகிட்டேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விக்ரம் ஜி !

இளையராஜா - 1000 !


இளையராஜாவின் 
இசை நூலில் 
நெய்த சேலையை 
உடுத்தியிருக்கும் 
சரஸ்வதி தாயே 
ஆயிரம் ஆயிரம் காலமாக 
இசைக்கு ஒருவன் 
அவன் இவன்தான் 
என்று 
மீட்டுகிறதோ உந்தன் வீணை !

பெண்மையைப் போற்றுவோம் ....!


பெண்கள் ....
சதவீதத்தில் மட்டுமல்ல 
சகவீதியிலும் 
உயர்த்தப்படவேண்டும் !

பெண்கள் ...
சமஉரிமையில் மட்டுமல்ல 
சதை உயிரிலும் 
மதிக்கப்படவேண்டும் !

பெண்கள் ...
சகல துறையில் மட்டுமல்ல 
சன்மார்க்க நெறிமுறையிலும் 
போற்றப்படவேண்டும் !

பெண்கள் ...
ஆஸ்தியில் மட்டுமல்ல 
அந்தஸ்திலும் 
வாழ்த்தப்படவேண்டும் !

பெண்கள் ...
பால் பிரிவினையில் 
வேறுபட்டாலும்
பார் பிரிவினில் 
ஒன்றுபட்டு 
வாழவேண்டும் என 
வாழ்த்துங்கள் ....!

மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !

Womens-Day-wallpapes-images-pic

உலகின் 
முதல் பெண் 
ஆதி வாசி 
மெல்ல மெல்ல 
ஆடை வாசியானாள் !
கிள்ளி எரியும் 
கள்ளிப் பால் 
சங்கிலிருந்து 
மீண்டும் பிறந்து 
பாரத மங்கையானாள் ! 
இறுக்க மூடிக்கொள்ளும் 
கல்விக் கண்ணை 
உருக்கமெனப் படித்து 
பலம் பெரும் பட்டதாரியானாள் ! 
சரிக்கி விழும் 
வாழ்க்கை சுமையை 
இறக்கி வைக்கும் 
பூமி தாயானாள் !
விஞ்ஞானம் மெஞ்ஞானம்
பிரித்து 
அமுதம் கடைந்து 
அகிலமே பருகும் 
வண்ணம் 
சக்தி ரூபமானாள்  !
எருதுகள் பூட்டிய 
கைகளோ இன்று 
விருதுகள் படைக்கும் 
அதிசயப் பிறவியானாள்  !
நடை உடை பாவனை 
மாறினாலும் 
நல்லொழுக்கமே 
நாட்டின் கண்ணென 
திகழும் ஒவ்வொரு 
மகளீர் களுக்கும் 
எனது
மகளீர் தின நல்வாழ்த்துக்கள் !  

பாரதம் எங்கள் பாரதம் !



பாரதம் எங்கள் பாரதம் 
பகைவரை அழிக்க 
பல்லுயிர் கொடுத்து 
பட்டொளி வீசி பறக்கும் 
பாரதம் எங்கள் பாரதம் 

ஜன கண மன அதி - நம் 
சமூகத்தின் உயிர் நீதி - (பாரதம் )

பாரத பாக்யம் - எங்கும் 
பாயிந்திடும் ஏழுயிர் வாக்கியம் - (பாரதம்)

விந்திய இமயம் வரை - ஒலிக்க
கங்கை யமுனையே சாட்சி ! (பாரதம்) 

பொங்கலோ பொங்கல்...!


போகி முடிஞ்சிருச்சு 
பொழுதும் விடிஞ்சாச்சு 
நாடும் வீடும் செழிக்கவே 
நடந்ததெல்லாம் மறந்தாச்சு
கலர்கலராய் கோலமிட்டு 
கரும்பு மஞ்சள் படைச்சாச்சு 
அச்சுவெல்லப் பொங்கலிட்டு
ஆடிப்பாடிடு மகிழ்ந்தாச்சு 
ஊரும் உறவும் ஒன்று கூடி  
உழவனுக்கு நன்றி கூறியாச்சு  
கால்நடைகளுக்கு நன்றி செலுத்தவே 
காணும் பொங்கல் முடிஞ்சிருச்சு 
பொங்கலோ பொங்கல்...! 
                                       - ஹிஷாலீ

(வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் )

இன்றைய சுதந்திரம் ...!



ஆகா வந்திருச்சு
ஆகஸ்ட் பதினைஞ்சு

அடடே விட்டாச்சு
அகிலமே விடுப்பாச்சு

குளிச்சி முடிஞ்சாச்சு
கொடியேற்றப் புறப்பட்டாச்சு

தலைவரெல்லாம் வந்தாச்சு
தலை நகரமே தொலைகாட்சி முன் அமர்ந்தாச்சு

இந்திய கொடி பறந்தாச்சு
இனிப்பும் வழங்கியாச்சு

அலங்கார அணிவகுப்பு ஆரம்பிச்சாச்சு
ஆட்டம் பாட்டம் அமர்க்களாமாச்சு

அசதியும் அலுப்பாச்சு
ஆதவனும் மறைஞ்சாச்சு

நிலவும் இருளாச்சு எல்லோரும்
இயல்பு நிலைக்கு திரும்பியாச்சு ...!



கருணாநிதிக்கு 92-வது பிறந்த நாள் வாழ்த்து ...!




கருணாநிதியே ...
புறஜாதிப் பூக்கள்
உன் திருவடி தொழுகையில்
கண்டோம் பாரதியாக ...!
பகல் இரவு பாராது
பச்சி முதல் பாமரருக்கும்
உழைக்கையில்
கண்டோம் பெருமாளாக ...!
சட்ட திட்டங்கள்
சாட்சி மாறுகையில்
சட்ட சபை ஏறி
சவால் விடுகையில்
கண்டோம் அம்பேத்கராக..!
விழுந்த விதை
எழுந்து வருகையில்
விழுந்து வணங்கும்
மக்கள் நடுவில்
கண்டோம் சூரியனாக ...!
வயது தளர்ந்தாலும்
வரலாறு படைக்கும்
பேனாவின்
அகிம்சை மொழியில்
கண்டோம் காந்தியாக ...!
தூற்றுவோர் தூற்றினாலும்
துவண்டுவிடா திராவிடனின்
மூச்சுக் காற்றில்
கண்டோம் போதிமர புத்தனாக ...!
ஏன் பிறந்தோம்
ஏன் வளர்ந்தோம்
என்றில்லாமல்
எல்லோர் நலன் கருதி
வாழ்வதில்
கண்டோம் கர்ணனாக ...!
எட்டாத இடத்தில்
இருந்தாலும்
தி.மு கா வில் பட்டா போட்ட
தலைவனே
தமிழ் உள்ளவரை
உன் தலை வாழ்ந்திருக்க
கண்டோம் சரஸ்வதியாக ...!
தமிழுக்கு பசியூட்டிய
கவி செம்மலே உன்னை
காவல் தெய்வமென்று
வணங்குவதில்
கண்டோம் கடவுளாக ...!
திறமைக்குப் பரிசளித்து
வறுமைக்கு
விடை கொடுக்கும்
விருதாகக் கண்டோம்
அதிசயங்களின் ஒன்றாக ...!
ஈரடியால் வாழும்
வள்ளுவனுக்கு
ஆறடி சிலை வைத்த
கன்னியாகுமரியில்
கண்டோம்
கலங்கரை விளக்கமாக ...!
இப்படி கண்டெடுத்த
அஞ்சுகத்தின் முத்தே
தி மு கவின் சொத்தே
நின் புகழ் வாழ்க நூறாண்டு ...!

சூப்பர் ஸ்டார் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்




விண்ணுலகின் தேவனுக்கு 

கிருஸ்மஸ் ஸ்டார் ...!

மண்ணுலகின் நாயகனுக்கு 

சூப்பர் ஸ்டார் ...!

எம் எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...!




ஆதி மனிதனின் விவசாயத்தை 
ஆராய்ச்சி மையமாக மாற்றிய அதிசயம் நீ 
புண்ணிய தீர்த்தத்தில் 
புலன் பெயரும் பொக்கிச விதை நீ 
துருவ நட்சத்திரங்கள் பருவமடையப் 
பாதை வகுக்கும் சூரிய புத்திரன் நீ 
அனல் பறக்கும் பூமியைக் 
குளிர வைக்கும் குலக் கொழுந்து நீ 
மண்ணையும் பொன்னாக்கும் மழை  நீரை 
வீணாக்காப் பருவ பயிர் நீ 
அறுவடையின் அவசியத்தை 
அச்சில் பொறித்த ஆலயமணி நீ 
பாமரரும் பஞ்சம் பெயரா வண்ணம் 
பல்  தொழில் சேவையாற்ற வந்த  அட்சயப் பாத்திரம் நீ  
காலத்தை அளந்து காலனையும் 
விரட்டியடிக்கும் காவியத் தலைவன் நீ 
அன்று கருவிலே அறிந்ததால் தான் என்னவோ 
பெயரிலே தெய்வமான நீ (சுவாமிநாதன் )
ஆயிரம் விருதுகள் பெற்றாலும் தன் 
அன்னை பெற்ற திரு உருவிற்கு ஈடாகுமா? 
என்ற புகழுடனே வாழ்க பல்லாண்டு 
வளர்க உங்கள் வேளாண் தொண்டு ...!

விஜயின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் - 22.06.2014




நாற்காலியை விரும்பாத 
நட்சத்திரத்தின் தலைவா - நீ 
நாளை தீர்ப்பில் விழுந்து 
மாண்பு மிகு மாணவனாய் எழுந்தய்  - பின் 

காதலுக்கு மரியாதை தந்து 
கில்லியா எகிறிக் குதித்து 
துள்ளாத மனதையும் துள்ளவைத்த 
துப்பாக்கியின் வேட்டைக்காரனே - நீயே 
அழகிய தமிழ் மகன் அன்பின் காவலன் 
திருப்பாச்சி முதல் சிவகாசி வரை 
செந்தூரம் வீசிய மதுர ஜில்லாவின் நண்பனே 
குஷியான ரசிகர்களுக்கு
ருசியான  ஜாஜஹான் நீ 
நேருக்கு நேர் நின்று போரிடா
புதிய கீதையே  இன்று 

கத்தி முனையில் நின்றாலும் 
வெற்றி முனையை
பறந்தடிக்கும் குருவியே

போக்கிரியே பொறுமையும்
இளமையும் கொண்ட பத்ரியே
பாட்டுடன் கலந்த வசீகரனே  

பார் போற்றும் பல கோடி மக்களின் 
பகவதியே தல தளபதியே
வாழ்க பல்லாண்டு வளர்க திரையாண்டு 


கருணா நிதி - 91 பிறந்த நாள் வாழ்த்து



மேகம் கருத்தால் மழை நிதி 

மோதல் படர்ந்தால் துயர் நிதி  

தாகம் நீண்டால் உயிர் நிதி 

தன்னடக்கம் கொண்டால் தலைவன் நிதி 

சோகம் மறைந்தால் இன்ப நிதி 

சொகுசாய் வாழ்ந்தால் நூறு நிதி 

வீரம் கொடுத்தால் வெற்றி நிதி 

விவேகம் சாயிந்தால் தோல்வி நிதி  

விட்டுக் கொடுத்தால் கெடா நிதி 

வாரி வழங்கினால் வள்ளல் நிதி 

வயதை கடந்தால் யோக நிதி 

ஆட்சியை ஆண்டால் கொடை நிதி 

ஆசை புரண்டால் அழிவு நிதி 

கல்வி கடந்தால் அறிவு நிதி 

காதல் வென்றால் மண நிதி 

பசியை மறைத்தால் கடவுள் நிதி 

பணத்தை இழந்தால் பைத்திய நிதி 

புண்ணியம் செய்தால் மோட்ச நிதி 

புலமை பெற்றால்  கவி நிதி 

இப்படி எல்லா நிதியும் கடந்து 

செம்மொழி வளர்த்த கருணா நிதியே  

இவ்வையகம் போற்ற நீர் வாழ்க பல்லாண்டு 

வளர்க நூறாண்டு ...!

மோடிக்கு வாழ்த்துக்கள் ..!



நாடித் துடிப்பில்


வென்ற மோடிக்கு


வாழ்த்துக்கள் ..!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...!

போகினா சாம்பல் 
பொங்கல்னா சாமி 

கரும்பு தின்னக் கூலியா 
காளையை அடக்கு ஜாலியா 

குலவைக்கு முன்னால்  வருவது நுரை 
குடும்பமே கூடி பார்ப்பது சின்னத்திரை 

கலர்கலராய் வரவேற்கிறது கோலம் 
கதிரவனுக்கே அது ஒரு மாயாஜாலம் 

தம்பதினா தலைப் பொங்கல் 
தல தளபதின வெற்றிப் பொங்கல் ...!


வலை நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



இறந்த காலம் எதிர்காலம் 
கூட்டுப்பலன் 
புத்தாண்டு ...!


கருணாநிதி - பிறந்த நாள் வாழ்த்துகள்...!



நான்கு சிங்கம் பொரித்த நாட்டில்
மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும்
முழு மூச்சின் கடவுளே நீ 
இரு பார்வை கோட்டில் 
ஓர் இதயமாகத் தமிழைக் கடந்த

விதை காவலனே என்றும் 
ருசிக்கும் திரையில் ஜொலிக்கும் 
(ணா) நாயனே தூயனே ஏகனே 
நிலவும் தேயும் மலரும் மறையும் 
திரியில் ஒளி தரும் சூரியனே 
வாழ்க பல்லாண்டு வளர்க நூறாண்டு !

(03.06.13)




mhishavideo - 145