கவிச்சூரியன் இதழ் மே -19

சுதந்திரப் பூமி
அகதிகளாக திரியும் 
வண்ணத்துப்பூச்சிகள்

குருவியின் அலகு வரைகையில் 
பென்சில் முனையில்
கீச்கீச் சத்தம்

மரம் வெட்டும் போது
வியர்வையில் துளிர்க்கிறது
மனிதனின் பிம்பம்

கல்லறைத் தோட்டம் 
புதிதாகப் பூக்கும் 
மெழுகுவர்த்தி பூ

எப்படி குடை பிடித்தாலும்
மௌனமாய் உடைகிறது 
நீர்க் குமிழிகள்

முன் ஜென்ம பகையோ
பறவையின் அலகில்
தவளையின் சத்தம்

என்றோ வந்து போன மழை
பரண் மேல்
துருப்பிடித்த குடைக் கம்பி

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145