பாவத்தின் சம்பளம் மரணமென்று !

விட்டுக் கொடுத்து
விட்டுக் கொடுத்து
வீதியில் நிற்கிறேன்
சிலர் விதியென்றார்கள்
சிலர் மதியென்றார்கள்
நானோ விதி மதி கலந்த
சதியென்றேன்
சிரித்தார்கள்
சிந்தித்து கொண்டே
சிலையாக நின்றேன்
கண் கடலானது
கால் மறுத்துப் போனது
இதயம் இடைவெளி விட்டு விட்டு 
லேசாக நிற்கத் தொடங்கியது
இனி இருக்க மாட்டோம் 
என நினைக்கையில்
நினைவுக்கு வந்தது
பாவத்தின் சம்பளம் மரணமென்று !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145