சென்ரியுவாய்த் திருக்குறள்-241-246

குறள் 241:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள.


பலகோடி செல்வம் 
தெருக்கோடியில் தோற்றது 
அருளற்ற பொருளால்...! 

குறள் 242:
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் 
தேரினும் அஃதே துணை.

நல்நெறி தராசில் 
அருள் முள் 
துணை...!

குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 
இன்னா உலகம் புகல்.

அருள் கொண்ட 
உயிரை பார்த்து 
நரகம் பயந்தது 

குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப 
தன்னுயிர் அஞ்சும் வினை.

தீவினையைக் கண்டு 
கருணை உள்ளம் 
கலங்கியதில்லை 

குறள் 245:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் 
மல்லன்மா ஞாலங் கரி.

அருளுடையார் காற்று 
அகிலத்தின் 
தேன் ஊற்று...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145