சென்ரியுவாய்த் திருக்குறள் - 251-255

குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள்.


ஹிஷாலீ சென்ரியு :

கோலியைத் தின்றவன் 
ஆடுகிறான் கோயிலில்
அருளில்லாமல் 

குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி 
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.

ஹிஷாலீ சென்ரியு :

இறைச்சி விற்றப் பணம் 
புரச்சி செய்தது 
பாவத்தின் கண்ணீரில் 

குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன் 
உடல்சுவை உண்டார் மனம்.

ஹிஷாலீ சென்ரியு :

பேனாவை மறந்த கத்தி...
போட என்றது
இறக்கத்தை...

குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் 
பொருளல்ல தவ்வூன் தினல்.

ஹிஷாலீ சென்ரியு :

கொலையில்லா இறக்கம் 
விலையில்லா பாவம் 
போக்கும்...!

குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண 
அண்ணாத்தல் செய்யாது அளறு.

ஹிஷாலீ சென்ரியு :

கொன்றால் பாவம் 
தின்றால் நரகம் 
என்றது அறம்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145