காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அங்கே
ஊற்றுமுயிர் துடிக்கையிலே பொன்னம்மா - எந்தன்
ஊமையுயிர் வெந்து சாகுதடி - உன்
செவ்விதழ் வருடும் பேச்சினிலே - அமுதம்
செவ்வியில் சென்று மோதுதடி - என்
கண்விழி பிதுங்க காத்திருக்கேன் - அன்பே
காணுமிட மெல்லாம் பூத்திருப்பேன் - நெஞ்சில்
ஏக்கம் தரு தூக்கத்திலே உன்னை
எண்ணி எண்ணி மனம் வாழுதடி
மூச்சி வரையும் நின்று தன்னை என்
மூளை எல்லாம் பித்தம் ஏறுதடி - இதை
தூற்றும் கண்கள் நடுவினிலே நம்
தூய நினைவுகளை பார்க்கின்றேன்
நாளு பொழுதும் மறைந்தாலும் கண்ணமா
நான் கொண்ட காதல் அழியாதே
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...