ஓட்டு கேட்ட ஆட்டு மந்தைகள் ...!

சாக்கடை பாயிந்த 
சந்தனமரத்தில்
சகல விதமான 
பறவைகளின் ரிங்காரம்
இடையே ...
சமத்துவக் காற்று
சாதியற்ற கிளைகள்
குள்ள நரிப் பூக்கள்
கொலைகாரக் கனிகள்
பட்டு திருந்திய கட்டுமரம்
பாடாய் பாடுபடுத்தும் படர் தாமரை குளம்
எனவெல்லாம் பொய் கூறும்
ஆட்டு மந்தைகள்
ஆங்காங்கே ஓட்டு
கேட்டு வருவதைக்கண்டு 
சந்தனமரம் சிரிப்பாய் சிரித்ததாம்
முட்டால் மனிதனே
என்னில் இருப்பது
அகிம்சையின் சுவாசம்
அதை அரிந்தும்
தலையசைக்கிற நீ
எப்படி நாளைய 
தலைவனை தேர்ந்தெடுப்பாய்
பணம் பத்தும் செய்யும் 
என்பதை மறந்து
அந்த ஒரு கணம்
பைத்தியமாகிவிடாமல்
நின்று நிதானமாக 
தேர்வு செய் 
உனக்கோ எனக்கோ
ஒர்
உன்மை ஜெயிக்கலாம் !

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145