அணைகள் ...!



எனக்காக ...
சண்டையிட்டோர் எத்தனை 
ஜாதி கலவரத்தில் 
சமாதியானோர் எத்தனை 
கட்சி பெயரைச் சொல்லி 
களவாடியவர்கள் எத்தனை 
அத்தனை பேருக்கும் சேர்த்து 
அமைதியாக 
தூங்கிக் கொண்டிருந்த நான் 
இப்போது 
அடை மழை என்ற பெயரில் 
ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறேன்  
எங்கே இன்று .... 
சண்டையிடுங்கள் பார்ப்போம் 
தண்ணீர் தரமுடியாது என்று 
அவ்வளவு தான் 
அடையாளம் தெரியாமல் போய்விடுவீர்கள் 
என்றது அணைகள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145