பனித்துளியாக மாறினேன் |
என்னவள் |
இதழ் விரிகையில் ...! |
மின்னஞ்சல் தாக்கி |
உயிரிழக்கவில்லை |
கூகுள் ...! |
வான் விழியில் |
வர்ண ஜாலங்கள் |
வாங்க மறுக்கும் குடை ...! |
குளிரில் தவிக்கும் நதிக்கு |
வெளிச்சம் கொடுக்கிறது |
நிலவின் அரவணைப்பு …! |
அழிவென்று தெரிந்தும் |
ஆசை கொள்கிறது |
அகிலம் ...! |
ஆடும் கிளைகளை பார்த்து |
ஓடுகிறது |
சூரியன் ...! |
தட்சணைச் சோற்றை தின்று |
கொழுத்து திரிகிறது |
கோயில் எறும்பு ...! |
கிள்ளி எறிந்த கீரையில் |
நிரம்பிக்கிடக்கிறது |
அல்ல முடியாத நீர் சத்து ...! |
கடவுளின் பெயரைச் சொல்லி |
சாமிக்கு தாலி கட்டினார் |
ஆசாமி ...! |
மும்மதப் பிராத்தனை |
சம்மதம் தந்தாள் |
முதிர் கன்னி ...! |
குறுகிய இரவு |
நீண்டுகொண்டே போகிறது |
காதலியின் ஏக்கம் ...! |
சித்தர் மலை |
தவமிருக்கும் |
கஞ்சாசெடிகள் …! |
அக்கினிப் பரிச்சை |
வலம் வருகிறது |
காற்று ...! |
விரல் நுனி
|
திரும்பிப் பார்த்தேன்
|
இனித்தது வாழ்க்கை ..!
|
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் !
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
விரிசல் பட்ட நிலத்தில் ஊா்ந்து வருகிறது எறும்பு படை மங்கள வாத்தியம் முழங்க உடன் கட்டை ஏறுகிறது ...
-
விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான் விடியலை தந்தவள் நீயல்லவோ தாயே படைத்தவன் துணையில் எனை வளர்க்க பத்துப்பா...
அனைத்தும் அருமை...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅருமையாக உள்ளது இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Delete