வாழ்க்கையில் |
ஒளிந்திருக்கும் |
பண்பாட்டை |
மீட்டெடுக்க |
முயற்சிப்பதற்குள் |
கடிந்து கொண்டிருக்கிறது |
காலத்தின் அலச்சியத்தோடு |
சுருங்கிக்கொண்டே
|
செல்லும் ஆடை |
அலங்கராத்தில் |
நிரம்பி வழியும் |
மதுக்குடுவைகள் |
தள்ளாடிக் கொண்டிருகிறது |
தன்மானத்தின் கண்ணீரோடு |
வானம் பூமி |
தவிர வரைமுறைகள் |
எல்லாம் வழி தவறும் |
உறவு முறையில் |
உலவிக் கொண்டிருக்கிறது |
இன்னொரு உறவை |
முறித்துவைக்கும் முயற்சியோடு |
ஓவியமோ காவியமோ |
வரைந்து முடிப்பதற்குள் |
வழிந்துகிடக்கிறது |
அங்கிங்கும் அரைகுறை |
கலை நயத்தோடு |
கட்டடக்கலை |
படித்து அரிவதற்குள் |
முடித்துவிட்டது |
பிணமா பணமா |
என்ற பட்டிமன்றத்தோடு |
இப்படி ... |
எல்லாம் அறிந்த மனம் |
காலத்தோடு இணையும் |
கர்ம வினையைத் தேடி |
எதிர்த்து நிற்கிறது |
ஏமாறவில்லை காலன் ...! |
சீரழியும் பண்பாடு ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete