ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!



தெய்வமான தாயைப்பார்த்து 
சிரித்தது 
அழுத குழந்தை ...!
களிமண் பொம்மை 
உயிர் கொடுத்தது 
விநாயகர்சதுர்த்தி ...!
கருப்பு இரவு 
பச்சையம் மாறது 
சிவக்கும் மருதாணி  ...!
பல புள்ளிகள் 
சேர்ந்து செல்கிறது
ஊர் கோலமாய் ...!
பெரும் உதவி 
செய்தது 
சிறு கதை ...!
ஊஞ்சல் ஆடும் 
கடல் அலைகள் 
அறுந்து விழுகும் மின்கம்பம் ...!
எரியும் வயிறு 
அணைக்கவில்லை 
வெள்ளம் ...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145