ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள்



கனமழை
பெருகும் கல்வி கட்டணம்
தத்தளிக்கும் தாய்மார்கள் ...!

ஆண்பால் பெண்பால்
தரம் பிரித்தது
ஜாதி ...!

நினவு நாட்கள்
அசை போடும்
ஆணி வேர் ...!

நரையழகை பார்த்து (கடல் அலை )
மயங்கி விழிக்கும்
சூரியன் ...!

விண்வெளிய வீடாக்கி
வாசல் தாண்டிக் கோலமிடும்
பாரதிப் பெண்கள் ...!

சிறைப் பிடித்த
ரோஜா செடியில்
சிரிகிறது காதல் ...!

தேன் கூட்டைக் கலைத்து
அஹிம்சையைத் தேடுகிறது
அரசியல் ...!

கருபழியில் தப்பிய
குழந்தைக்கு
நரபழி ...!

கருபழியில் தப்பிய
குழந்தைக்கு
பாலியில் பலி ...!

கருவறையில் தப்பித்து
ஆழ்குழாய் கிணற்றில்
புகுந்தது குழந்தை ...!

ஜாதிக் காதல்
என்றுமே
சாதிக்காது ...!

காற்றாற்று வெள்ளத்தில்
கலக்கிறது
கானல் நீர் ...!

கொட்டும் மழை
முட்டி முனுங்குகிறது
ஏரி குளம் ...!

அடை மழை
ஊஞ்சல் ஆடும்
கடல் அலைகள் ...!

ஆணி வேர்
அசைத்துக் காட்டியது
அடை மழை ...!

மரணிக்காமல்
மரணித்துக்கொண்டிருக்கும்
அவளின் நினைவுகள் ...!

நிலா சோறு
வயிறு நிரம்பாத
முதிர்கன்னி ..!

முல்லைப் பூ
குத்தி கிழித்தது
தூர தேசத்து ராமனை ...!

இறங்கும் அம்மை
கூழ் குடிக்கும்
பூமித் தாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145