இனிதான வாசகம் ...!


துயிலெழும் காலையில்
தூயவளே தெய்வமாய்

காலை தேநீரில்
கரையும் கற்கண்டாய்

குளியல் தேகத்தில்
கொஞ்சும் மழலையாய்

அதிகாலை பசியில்
அட்சய பாத்திரமாய்

எல்லாம் முடிந்து
கேட்டேன்

கனிவான வார்த்தையில்
இனிதான வாசகமாய்
என் காதல் பெண்ணே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145