தர்மம் ஜெயிக்கவில்லை


அன்று 
சிலம்பு ஏந்தியவளும் 
தீ ஏந்தியவளும் 
சிறக்கவில்லை கீதையில்!

இன்று 
சிந்திக்கும் ஆற்றலால் 
சந்திக்கும் 
காதல் கீதையில் 
சிறந்தும் சிறக்காமல் 
வாழ்கிறார்கள்

     என்ன ஒரு வேற்றுமை 
   அன்று நீதி தூங்கியது 
  இன்று அவரவர் நிலைகள் 
ஓங்கியது!

  இருந்தும் 
    கற்பு மட்டுமே சிலையானது 
    பெண்ணின் கண்ணீர் மட்டுமே 
  விலையானது 

 எத்தனை சுதந்திரம் வந்தாலும் 
 என்னை மாற்ற 
 இன்னொரு கலியுகம் 
 தான் வேண்டும் 

முள்ளை முள்ளால் தான் 
எடுக்க வேண்டும் என்ற 
பல மொழிக்கேற்ப 

இரவு பகல் கடக்கிறது 
இன்ப துன்பம் பிறக்கிறது 
இறைவன் மட்டும் தூங்கவில்லை 
இன்னும் தர்மம் ஜெயிக்கவில்லை ...!




No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145