ஏனோ? எல்லாம் காதல் தானோ ?


எதையும் தாங்கும் இதயம் இன்று
என்னை மறந்ததேனோ பின்
உன்னை மாறியே பல பெண்ணாய்
தோன்றி என் முன்னாள் வந்ததேனோ ...!

கண்ணால் கண்ட மெய்கள் இன்று
கவிதை தந்ததேனோ பின்
இந்நாள் போலவே இனி எந்நாள் மாற
இதயம் துடித்ததேனோ ....!

சொன்னால் சொல்ல சொன்னால் இன்று
காதல் பிறந்ததேனோ பின்
காலை மாலை எல்லாம் அவள்
காதல் வளர்ந்ததேனோ .....!

எல்லாம் கலந்து என்னுள் நுழைந்து
என்றும் முடிப்பதேனோ பின்
திருநாள் காணும் யோகம் வந்து
திருமணம் காண்பதேனோ .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145