கல்வி என்னும் கரும் பலகையில்
கற்ற உயிர் மெய் எழுத்தை நம்
கைவண்ணம் தொட்டு காகித தட்டில்
எழுதி படிக்க கற்று கொடுத்து
நம் தமிழ் மொழி சிறக்க நம்மை
அடிமனதில் ஆணி அடித்தார் போல்
அறிமுகம் பதித்து இன்முக சிரிப்புடன்
பொன் முக கனவில் என் முகம்
மேல் அறிவு கண்டு மென் மேலும் சிறக்க
அதே இடத்தில நின்று தான்
கற்று தெளிந்ததை என் தலைமுறை
தாண்டியும் பின் தலைமுறை தளிர்க்கவும்
உழைக்கும் ஆசானே உன்னை குருவே
தெய்வமாய் வணங்குவதில் பெருமை கொள்கிறேன் !
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...