மஹா...!


பதினெட்டில் மெட்டியிட்டவள்
இருப்பதில் தாயாகி பின்
குழந்தை மனத்துடன் தன்
குடும்பத்தை ஆளும் அரசியாய் ....

மனதின் துன்பங்களை தன்
மஞ்சள் கயிற்றில் மறைத்து
வயதாகும் முன் தன் வாழ்வை
தொலைக்கிறாள் விதவை பெண்ணாய் .....

இதோ ....
கொடுங்கோல் பேச்சில் தன்
மூச்சை அடக்கி பேச்சில்
ஊமையாய் தாய்மையை காக்க
கண்ணீர் முகத்துடன் ......

கைதியாய் மாறி அகிம்சை வழியில்
இம்சை வலியை தாங்கும்
தரங்கெட்ட பெண்ணாய் இல்லாமல்
தன் தமிழ் மண்ணில் வீர நடை
போடுகிறாள் இதோ இந்த மஹா .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145