கருவறை தந்தவள் பொதுவுரை
கூறும் அறிவுரைகள் ......
பத்து திங்கள் பொத்தி வைத்து
பவளமணி முத்து போல்
எட்டு திங்கள் பாலுட்டி
எட்டுவைத்த நாட்களில்
பொட்டு வைத்து பூவும் வைத்து
புதுசு புதுசாய் ஆடை போட்டு
கண்ணே மணியே என்று
கண்ணுறங்க தாலாட்டி
தெரு வீதி கடை வீதி
தினம் தினம் சுற்றி வந்து
முதல் மொட்டை மூடி கொடுக்க
மும்மூர்த்தி கோவிலிலே
தாய் மாமன் தங்கத்தில் பூட்ட
தலை வாழை தானத்தில்
தலைமுறை கண்ட சொத்தை
தானமாய் தருவது நாயமா ?
சொல்லடி நாத்தனாறே நீ
சொல்லுவது நீதியாகுமா ....?
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...