துள்ளி ஓடும் மானாய்
பள்ளி சென்றேன்
கல்வி கற்கும் முன்
காதலை கற்றதால்
அள்ளி கொண்ட
பருவத்தில் ஆசையை
கற்றுக் கொண்டேன் ...!
சொல்லி கொண்ட
வார்த்தைகள் எல்லாம்
தள்ளிச் சென்றதால்
பாசத்தைக் கற்றுக் கொண்டேன் ...!
ஏனோ புரியா மோகம்
தாகத்தை தந்ததால்
மோகத்தை கற்றுக் கொண்டேன் ...!
எல்லாம் அறிந்தும் மறந்தும்
சேர்ந்ததால் இனிமையான
தனிமையை கற்றுக் கொண்டேன் ...!
கடைசியில் முடிவே படியேறியதால்
சறுக்கிய அடியில் காதலின்
வலியை கற்றுக் கொண்டேன்...!
விழியோடு மொழி சேரும் போது
வழியாய் வந்த காலம்
விடை பெற்றதால்
பிரிவைக் கற்றுக் கொண்டேன் ...!
அந்த பிரிவே அனலாய்
சுட்டதால் காதல்
தோல்வியைக் கற்றுக் கொண்டேன் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...