நிஜமான காதல்...! 


இமையின் சொற்களில்
பரிவு தந்தாய்
கனிவு தந்தாய்

இதைக் கண்டு உதவியாய்

காதல் தந்தேன்
மரியாதை தந்தேன்

இதைப் பார்த்தும்

உன் பெற்றோர் ....

நேர்மை கொண்ட

நெஞ்சங்களே நல்ல
எண்ணம் கொண்டு
வாழ்க என
வாழ்த்தியதை கண்டு - நான்

கோபத்தை மறந்தேன்

வேள்வியாய் மாறும்
வெறுப்பை மறந்தேன்

இழிவில்லா சொற்களைக் கண்டு

பொறாமையை மறந்தேன்
சுயநலம் மறந்தேன்

இப்போது என்னை

ஈன்ற வீட்டையே மறந்தேன்
மணமகளாய் மாறி உனது
குலம் தலைக்க குமரியானவள்

தாயாகி கனிந்திருக்கும்

கற்பனை பெட்டகமாய்
மாறிவிட்டேன்
என் கனவு கவிதையில்

விடிந்ததும் நிலவுமில்லை

என் காதல் நிஜமும்மில்லை
இருந்தும் நேசிக்கிறேன்
உன்னை அல்ல

நம் காதலை

மீண்டும் விடியும் என்ற
நம்பிக்கையில் ..!

1 comment:

  1. நம் காதலை
    மீண்டும் விடியும் என்ற
    நம்பிக்கையில் akka yaru avuru ?

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145