Dr. A. P. J. Abdul Kalam ...!




மூவுலகையும் ஸ்தம்பிக்க வைத்த மாமனிதனே கலாம் ...!

ராமேஸ்வரத்தின் 
ராணுவ வீரனே 
"கலாம்"
தனது முழு பெயரில் 
"மூன்று" மெய்யெழுத்துடன் 
பயணம் செய்யும் 
எண் கணித 
வாழ்க்கை வரலாறு இதோ...
(அப்துல் கலாம் )

வயதைக் கடிந்தேன் 
கூட்டிக் கழித்துச் 
சொன்னது மூன்று 
(2015-1931=84
8+4=12
1+2=3)

வாழ் நாள் சரித்திரத்தை 
வரலாறாக்க 
முயற்சித்தப்  போது 
சுய சரிதம் கழிந்தது மூன்று
1931=14=5 , 
2015=8 
8-5 = 3

மதத்தின் குறியீட்டை 
இஷ்டப்படு கூட்டிக் கூட்டிப் 
பார்த்த போது மீண்டும் 
துளிர்த்தது அதே மூன்று
(7+8+6=21
2+1=3)

தேதி ஆராய்ச்சியில் 
ஜோதி ஏற்றி வழிபட உன் 
நினைவு நாளை 
கூட்டிக் கழித்தபோது 
வாசலில் நின்றது மூன்று
(OCT 15 = 6, 
JUL 27 = 9 
9-6 = 3)

இயற்கை எய்தி 
செயற்கை மொழி கொண்டு 
இமயத்தையே சரியவைத்த 
தவ நாட்கள் மூன்று
(Jul 27- Jul 30)

ராணுவ மரியாதையில் 
ராமேஸ்வரமே நடுநடுங்க 
நினைவுக் கல் ஏற்றி 
நல்லடக்கம் நடந்த நாள் 
30 என்றாலும் 
முன் நிற்பது மூன்று
( jul 30 )

உலகத் தலைவர்கள் 
ஒன்று கூடி 
உம் பாதம் வணங்க 
ராணுவ சத்தத்தில் 
கூட்டி முடிந்தது மூன்று 
(21 குண்டுகள் முழங்க )

மிச்சமிருக்கும் 
பிறந்த நாளை வரவேற்று 
இனிப்பூட்ட 
மாதம் மூன்றிருக்க 
முடிவுரை எழுதிய 
கலாமே ...
இதைத் தவிர்த்து இன்னும் 
மூன்றைத் தொடர்கிறேன்

உன் திருவாயில்
மொழிந்த மொழிகள் மூன்று 
(T+E+H)

வாதித்த "கடமை" மூன்று 

நீ கண்ட "சோதனை" மூன்று 
அதில் 
வெடித்துச் சிதறிய 
"சாதனை" மூன்று

"வேதனை" மூன்று 
விண்வெளியில் 
பெயரிட்ட SLV-3 rocket - மூன்று

"வேதம்" மூன்று 
விடியலைக் கூவும் 
உன் "கவிதை" மூன்று

அகிலமே விடுப்பளித்து 
அமைதிப் பூ மனம் வீசிய 
மண்ணில் வித்தான 
உன்னை 
வாழ்த்தவிருக்கும் இனி 
காலம் "மூன்று "

சுயலாபம் அறுத்து 
ஞானம் பெற்ற மூன்றின் 
நாயகனே உனக்காக

அகிலமே 
அகல் தீபம் ஏற்றிக் 
கைகூப்பும் ஆஞ்சநேயனே
அக்னி சிறகு கொண்டு 
என்றென்றும் சிரஞ்சீவியாகச் 
சிறக்க வாராயோ ...!

(மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்
உள்ளம் என்று ஒரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கு ஒரு பெயர் இருக்கும்
கலாம் அது கலாம் கலாம் அது கலாம் )

( குறிப்பு :- கலாமின் பிறப்பு முதல் இறப்புவரை நடந்த நிகழ்வுகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்துக் கிடைத்தது மூன்று அதையே கருவாக வைத்து எழுதியுள்ளேன் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் இப்படிக்கு ஹிஷாலி )

2 comments:

  1. ரொம்ப அருமையா இருக்கு.

    ReplyDelete
  2. அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145