நீ வந்த காலம் முதல்
என் இதயத்தில்
இறந்த காலமாய் எழுதினேன்
நட்பே என்று
அன்று முதல் வாடினேன்
உன்னை நினைத்து நினைத்து
என்னில் அடங்கா ஆசைகளை
கண்ணில் பூட்டி காகித
பெட்டகத்தில்
எதிர் காலமாய் வந்தவனை
கவிதை காலமாய்
மாற்றினேன்
அவன் தாள் வணங்கி
அடியேனே உன் அன்பின்
ஆலையம் நானே நிதமும்
தொழுவாய் என்னை
தொடர்வாய்
இனிவரும் காலம் நம்
எதிர்காலமாய் மாறி
குடும்ப காலமாய் கொண்டாடலாம்
நம் குழந்தை செல்வங்களுடன்
சேர்த்து தலை முறை காலமாய்
இத்தரணி செழிக்கவே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...