ஓரின ஈர்ப்பு ...!


என் இதயத்தை
பார்க்க ஆசைப்பட்டேன்
தோழியே ...

உன் இதயம்
என் இதயமாய் துடித்த போது
பார்த்துவிட்டேன்
நட்பின் காதலை...!

**********************************
நீயும் நானும்
சந்தித்ததில்லை
நிறைய சிந்தித்திருக்கிறோம்
கவிதையில்

நாம் சந்திக்கும் வேளையில்
சிந்திக்காமல் நம்மை
சிரிக்க வைத்தது
நம் குழந்தைத் தனம்

**********************************

நீ இருக்கும் இடத்தில்
என்னைப் போல்
அன்பான தோழன்
இருந்துவிட கூடாது என்று
வரம் கேட்கிறேன் கடவுளிடம்
நட்பை மறந்து காதலில்
மூழ்கிவிடக்கூடாது என்று

**********************************
பூக்கும் காலம் அறிந்தேன்
காய்க்கும் காலம் அறிந்தேன்
உதிரும் காலம் அறிந்தேன்
வளரும் காலம் அறிந்தேன்

எந்த காலம் வந்தாலும்
நம் உயிர் காலம் உள்ளவரை
நடப்பு காலம் நடமாடட்டும்
நம் மழலையின் மறுமலர்ச்சியில்

**********************************

கடல் நீரில்
சிறு துளி சேர்ந்தாலும்
சிதைந்துவிடும் சுவை

நம் நட்பில்
ஒரு கண‌ம் அழுதாலும்
பிள‌ந்துவிடும் இதயம்

**********************************
எழுது கோல் சொல்லும்
உனக்கும் எனக்கும்
உள்ள வருத்தங்களை
பக்கம் பக்கமாக
**********************************

நமக்குள்ளும்
காமம் கர்ப்பமாகிறது
ஆண்டுக்கு ஆண்டு

நீ அனுப்பும்
வாழ்த்து மடலில்
தள்ளாடிய வரிகளை
கண்டபோது

**********************************
உன்னை புரியும் முன்
நீ என்னை புரிந்ததால்
வருந்துகிறேன்

வரலாற்றில் நீ வராமல்
நான் வந்த பெருமை
உன்னை சேரும் போது
**********************************

காலை வணக்கமும்
மாலை வணக்கமும்
தொடருவது போல்
தொடருவோம் நம்
நட்பு வணக்கத்தை

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145