உயிரைத் தொட்டக் காற்றே
பின் உணர்வை தந்த சுகமே
உறவை மட்டும் தர
மறுப்பது ஏனோ...?
உயிராய் உருவமாய்
இதயத்தை அறுத்த
கயிரே
நீ உறவே இல்லாமல்
ஒதுங்கி சென்றது ஏனோ ...?
மாலைச் சூடி மங்களம்
முழங்குவாய் என்று
மடியில் மயங்கிய என்னை
நொடியில் மறந்தது ஏனோ ..?
நினைவில் நான் இருந்தும்
உறவில் உயிர் பிறந்தும்
விரைவில் வந்து விடியலாய்
வெற்றி வாகை சூடுவாய்
என்றேன் ஆனால் நீயோ
என் வாழ்க்கையை இரவாக்கி
விட்டு போனது ஏனோ ...?
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...