இலை மரக் காய்போல
நீ
என் இதயத்தின் மறைவில்
வாழ்கிறாய்
அத்தனையும்
நீ
சொல்லித் தந்த
காதல் பாடங்கள்
உணவே இல்லை
உன்னில் ஆனால்
உதயமாகும் மதிமுக
உணவை என்
இரு விழி சுவையால்
சுவைக்கும் போது
விடியவே இல்லை
என்னில்
நீ உதயமாகி வாழ்ந்த
நாள் முதலில் என்னுயிர்
மண்ணில் மறையும்
போது கூட
ஒரு கணம் நீயே
வந்துபோகும் நினைவின்
சுவையே போதும்
எல்லாம் நீயாகவே இருந்தாய்
இப்போது யாரோ என்று
ஏமாற்றிச் சென்றாயே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...