கருவின் மடியில் கண்ணீர் சிந்திய
அன்னையை கண்டு - பின்
கல்லறையா கணவனறையா என்று
கலங்காமல் என் திருமுகம் காண
ஏங்கி தவிக்கும் தாயின்மனவேதனையை காதலித்தேன்
பிறந்தேன் செல்லமாய் மெல்ல மெல்ல
அப்போது நான் அழுத முதல் அழுகையைகாதலித்தேன்
என் அழுகைக்கு அமிர்தமாய் அமத்திய
தாய் பாலை காதலித்தேன் ....
தாய்மாமன் மடியில் வைத்து தலைமொட்டை
போட்டு பின் தலையாட்டம் கறிபோட்டு
மலையாட்டம் சோறுபோட்டு காதுகுத்தும்
பஞ்சாங்கத்தை காதலித்தேன் ....
அடியெடுத்து முதல் படியேறிய கல்வி
சாலையின் கனவுகளை காதலித்தேன் ....
பதினாறு வயதிலே முளைத்த அரும்பு
மீசையில் குறும்புகள் பதித்த காதலை காதலித்தேன் ...
இப்படி அணுஅணுவாய் காதலித்த
அன்னையை மறந்து வேறு பெண்ணை
காதலித்தேன் அவளும் ஒருநாள்
அன்னையவால் என்று ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...