என்னைக் கேட்காமலேயே
என் கண்ணில் நுழைந்தாய்
பின் என் கனவில் எழுதாத
வண்ணக் கனவுகள் தந்தாய்
பசியின்றி ருசிக்க வைக்கும்
பார்வை தந்தாய்
பாதி ஜாமத்தில் சிரிக்க வைக்கும்
பைத்தியம் தந்தாய்
துக்கம் போக்கும் சிகிரட்டை
தூக்கி வீசும் மாற்றம் தந்தாய்
தூது சொல்லும் பார்வைக்கு
தூயவளே காதல் என்னும்
பெயர் தந்தாய்
நாசம் செய்யும் மதுவை கூட
நம் நேசம் கொண்டு மாற்றவே
தேசம் கொண்ட காதலை
தேவி நீ போற்றவே
திருந்திக் கொண்டு வாழ்கிறேன்
திருமணக் கோலத்தை காணவே
இல்லையென்று சொல்லிவிடாதே
இழந்த இதயத்தை கொன்று விடாதே
கோடைகாலமாய் மாற்றி விடாதே
மீண்டும் குடிகரானாய் ஆக்கிவிடாதே
தாடியில்லா தேவதாசிற்கு நீ
தாரமாய் மட்டும் போய்விடாதே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...