என்னை திருத்த...!

















எத்தனையோ பேனாக்கள் 
எழுதிவிட்டன 
என்னை திருத்த!!! 

அத்தனையும் சாம்பலானது போல் 
அகிலமும் சாம்பலாகிறது 
சமுதாயக் சீர்கேட்டால் 

விற்றவனும் விழுந்துவிட்டான் 
வடித்தவனும் வதந்தியாகிறான் 
படித்தவனும் பாவியாகிறான் 

இடையில் நான் எங்கே என்றால் 
வரலாற்றில் செதுக்கியச் சுவடுகள் 
இன்றைய வழிகாட்டியாகக் கெடுகிறது 
பின் எதற்கு எழுதுகோல்

மாற்றம் தறா மானிடனே என்னை 
மறந்து பார் மரணமும் உன் முன்னாள் 
ஜெனனம் கேட்கும் அப்போது 

புதிய தலைமுறையோடு பழமைக்கு 
முற்றுப்புள்ளி வைத்துப் பார் 
யுகங்கள் இனிமையாகும் 
யோகங்கள் தனிமையாகும் 

துணிவே துணை என்று 
பணிவின் பாதையாகும் 
பார்ப்பவரெல்லாம் 
இவர் பாரைப் பார் 
பாரின் உயர்வை பார் என்று 
பாராட்டுவார்கள்...!








2 comments:

  1. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
    இன்று என் தளத்தில்
    குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145