ஓணம் வாழ்த்துகள்


















மூன்றாம் பிறையின் முழு நிலவே 
நீ முத்தமிழ் பேசும் பைங்கிளியாய்
என் தமிழ் கொண்ட தாய் நாட்டில் 
தன் தாய்மொழி கொண்டு என் தமிழ் 
பேசிடும் மலையாள பைங்கிளியே

மஞ்சள் தாவணியில் மலர்கரம் கோர்த்து 
மகிழம்பூ மாலை சூட்டி அங்க மேனியில் 
தங்கம் சூடி தலைவாரி பூவைத்து தலைவாசல் 
மேனியிலே தகதகவென மலர்கோலம் பூட்டி
தாமரை பெண்ணாய் தகதிமி தாளத்துடன் 

கேரளா இசையில் கதக்களி நடனமாய்
பொங்கல் பொது விழாவாய் பேர் கொண்ட 
நதிக்கரையில் படகு போட்டியில் தொடக்கி 
பொன் கையில் ஏந்திய கயிறு போட்டியில் 
வென்று புலி வேசமாய் குதுகல கொண்டத்தில் 

பத்து நாள் பாடிஆடி பகவனே மாவேலி 
மன்னவனை அத்தப்பூ கோலத்தில் 
புது அரிசி மாவிளக்கில் படையால் போட்டு 
விடைகொடுக்கும் மலையாள மக்களே 
நீங்கள் மனம் கொண்ட வாழ்க்கையில் 
எல்லா வளம் கொண்டு வாழ வாழ்த்துகிறோம் !
 



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145