சென்ரியுவாய்த் திருக்குறள் -131-135

குறள் 131:
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் 
உயிரினும் ஓம்பப் படும்.


ஒழுக்கம் காக்க 
உயிர் விட்டாள் 
தாசியின் மகள் 

குறள் 132:
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் 
தேரினும் அஃதே துணை.

பிச்சை எடுத்தாலும் 
எச்சில் ஆகா ஒழுக்கம் 
மறுமைக்கு துணை  

குறள் 133:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் 
இழிந்த பிறப்பாய் விடும்.

உயர்ந்தவர் இழிந்தவர் 
எடுத்துரைத்தது 
ஒழுக்கம் 

குறள் 134:
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் 
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

குலம் சிறக்க 
தொழில் மறந்து கல்
ஒழுக்கம் தவறாமல் நில் 


குறள் 135:
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை 
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

உயர் குலத்தின் பெருமை 
நல்ல பொறாமை 
நல்லொழுக்கம் 


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145