குபேரனும் பிச்சைக்காரனும் கலந்துரையாடல்










பிச்சைக்காரன் : அம்மா தாயே பழைய மொபைல் இருந்த பிச்ச
போடுங்களேன்



குபேரன் : எல்லாரும் காசு தானே கேட்பாங்க நீ என்ன மொபைல் கேட்குற....


பிச்சைக்காரன் : அதுவா யாராருக்கு என்ன தேவையோ அததான் கேட்டு வாங்குவாங்க .


குபேரன் : அப்படியா நான் மொபைல் பிச்ச போட்ட நீ வாங்கி என்ன
பண்ணு வே



பிச்சைகாரன்: அதுவா இப்பெல்லாம் டிவில நெறையா நிகழ்ச்சி வருது அதுக்கு SMS பண்ணுனா ஒரு கோடியாம் அதன் கேட்டேன்


குபேரன் : அப்படியா அதுல நீ எப்படி வின் பண்ணுவா ....?


பிச்சைக்காரன்: இந்தியாவில எத்தன கோயில் இருக்கு தெரியுமா


குபேரன் : தெரியாது ......


பிச்சைக்காரன் : மக்கள் தொகை


குபேரன் : சுமார் 1.17 மில்லியன் இருக்கலாம்


பிச்சைக்காரன்: இந்த மக்கள் தொகையில கால் வாசி கோயில்
இருக்குமா அந்த கால்வாசி கோயில்ல எங்க கூட்டங்க தான் இருக்காங்க அதனால எப்படியும் SMS பண்ணுறவுங்கல பாதிப் பேர் தான் பண்ணுவாங்க அந்த பாதில கால்வாசி நாங்க தானே இருக்கோம் அப்போம் நாங்க தானே ஒரு கோடிய வின் பண்ணுவோம் அப்போம் நானும் கோடிஸ்வரன் தானே



குபேரன் : அட முட்டாள் ஒரு நாளைக்கு உனக்கு எவளவு கலைக்சன் ஆகும்


பிச்சைக்காரன் : என்ன ஒரு ஐய்நூறு ரூபாய் சில்லறையா வரும்


குபேரன் : அப்படினான் இந்த ஐய்நூறு ரூபாய் சில்லறைய உங்க கால் வாசி பிச்சைக்காரங்க உனக்கு தினமும் அனுப்புனா உன்னால எண்ண முடியுமா .....?


பிச்சைக்காரன் : முடியாது கொஞ்சம் சோம்பேறியா தன் இருக்கும்


குபேரன் : அப்படினா இந்த உலகத்துல இருக்குறவங்க அனுப்புற SMS அவனால எப்படி பார்க்க மடாலயம். அப்படியே பாத்தாலும் நிச்சையம் உங்கள் யாரையுமே தேர்வு செய்யமாட்டன் எல்லாமே கண் தொடிப்பு இது உனக்கும் தெரியும் அவனுக்கும் தெரியும் இருந்தும் ஏமாருராங்களே மக்கள் இத நினைச்ச சிரிப்பு தான் வருது நீ சோம்பேறியா பணம் சம்பாதிக்க ஆசப்பட்ட பிச்சைக்காரன இருக்க. அவன் அறிவால சம்பாதிச்சதால அவன்கிட்ட நான் குபேரனா இருக்கேன் ஒன்னு தெரியுமா 1.17 மில்லியன்ல 3- னால பெருக்கி பாரு அவன் எவளவு சம்பாதிப்பான் அதுல விளம்பர காசு வேற இப்படியே போனா அவன் அம்பானி நீ சப்பாணி ஹா ஹா ஹா


பிச்சைக்காரன்: சிரிக்காதே குபேரா நானும் இனிமேல் அறிவால
சாதிக்க முயற்சி செய்கிறேன் நீ எனக்கு துணையா இருப்பியா ...?



குபேரன் : நிச்சையமா உன்ன மாதிரி சோம்பேறியா இருக்குறவங்கல திருத்த தான் நான் குபேரனா அவதாரம் எடுத்துருக்கேன்.
அப்போம் நான் போயிடு வரட்டா ......!



பிச்சைக்காரன்: மிக்க நன்றி. சந்தோசமா போயிட்டு வாங்க குபேரா ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145