குறள் 41: |
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் |
நல்லாற்றின் நின்ற துணை. |
ஹிஷாலீ
சென்ரியு
|
மூன்று இயற்கை |
முத்தான மருந்து |
கடமை...! |
மூவழி சொந்தம் |
துணை நிற்பது |
இல்லறம்...! |
கடமையின் s |
முதல் படி |
மூவர் அறப்படி...! |
குறள் 42: |
துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும் |
இல்வாழ்வான் என்பான் துணை. |
இல்லறம் |
இனிக்க |
ஈகை நன்று...! |
துறந்தவர் வறியவர் |
உதவுபவன் |
நல்ல கணவன்...! |
மறைந்த தாய் |
வறுமை வாழ்க்கை |
கணவனே கண்கண்ட
தெய்வம்...!
|
குறள் 43: |
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு |
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. |
ஹிஷாலீ
சென்ரியு
|
மூத்த தலைவர்கள் |
வாழ்வின் முதுகெலும்பு |
அறநெறி தவறாமை...! |
வான் வாழ் மக்கள் |
செய்யா உதவி |
ஏழைக்கு உதவுவது சிறப்பு...! |
மறைந்த தெய்வங்கள் |
நிறைந்த விருந்தோம்பல் |
சிறந்த
இல்வாழ்க்கை...!
|
குறள் 44: |
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை |
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். |
ஹிஷாலீ சென்ரியு |
கோடி பொருள் செல்வம் |
குறைவில்லா பண்பு |
வாழ்வின் ஒழுக்கம்...! |
காக்கையின் குணம் |
பழியில்லா பண்பு |
அழியா ஒழுக்கம்...! |
பாவமில்லா பொருள் |
அழியா புண்ணியம் |
பரம்பரைக்கே...! |
குறள் 45: |
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை |
பண்பும் பயனும் அது. |
ஹிஷாலீ
சென்ரியு
|
நல்லறம் பெற |
தூய அன்பு போதும்...! |
பயன் அறியா |
பண்பு செய்தால் |
இல்வாழ்க்கை செழிக்கும்...! |
ஈதல் குணம் |
சுற்றத்தின் அன்பு |
இனிய
குடும்பம்...!
|
குறள் 46: |
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் |
போஒய்ப் பெறுவ எவன். |
ஹிஷாலீ சென்ரியு |
சிரம் தாழ்த்தி |
சினமறியா இல்வாழ்க்கை |
ஏழுஜென்ம பயன் |
அறநெறி பயன் |
இடையூறு இல்லா |
இல்வாழ்க்கை |
துரவரமற்ற முனிவர் |
தூய இல்லறம் |
மக்கள் பேர் |
குறள் 47: |
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் |
முயல்வாருள் எல்லாம் தலை. |
ஹிஷாலீ சென்ரியு |
இல்வாழ்க்கையின் |
சிறந்த இலக்கண |
நல்லோர் போற்றுவது |
அறம் அறிந்து |
இயல்போடு நடப்பவன் |
அதிசிய மனிதன் |
கடவுள் மனைவி |
இரண்டும் |
அறநெறி கண்கள் |
குறள் 48: |
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை |
நோற்பாரின் நோன்மை உடைத்து. |
ஹிஷாலீ சென்ரியு |
துறவி நோன்பு |
பிறவி பயன் |
கிட்டா பேர் புகழ் |
தன் அறம் |
பிற அறமாகக்கடவுக |
வாழ்க்கை வளம்பெறும் |
துறப் பெருமையைவிட |
அற இல்வாழ்க்கை |
ஆண்மையின் வலியது |
குறள் 49: |
அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் |
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. |
ஹிஷாலீ சென்ரியு |
கணவனின் தாரகமந்திரம் |
பழியில்லா புண்ணியம் |
நல்ல மனைவி |
குற்றமற்ற இல்வாழ்க்கை |
குறைவில்லா நன்மை |
பிறர் பழியா நன்று |
கோவலன் |
கண்ணகி |
பழிவாங்கியது மதுரை |
குறள் 50: |
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் |
தெய்வத்துள் வைக்கப் படும். |
ஹிஷாலீ சென்ரியு |
அறநெறி தவறா |
கணவன் மனைவி |
வானின் தேவர்கள் |
அறத்திற்கு இணையானது |
தெய்வத்தின் அருங்குணங்கள் |
பொருந்திய இல்வாழ்க்கை |
பூமியின் ஒழுக்கம் |
வானில் மின்னுகிறது |
கடவுள்
வடிவில் மனிதன்
|
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...