சென்ரியுவாய்த் திருக்குறள் - 21 to 40


குறள் 21: 
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

ஹிஷாலீ சென்ரியுக்கள்  
 
துறவிகள் 
ஆசையில்லா ஒழுக்கம் 
சிறந்த நூல்...!
பிறப்பு நூல் சிறப்பே 
உறுதியான 
ஒழுக்கம்...!
மேன்மக்கள் 
துறவி ஒழுக்கம் 
சரித்திர நூல்...! 

குறள் 22: 
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

ஹிஷாலீ சென்ரியுக்கள்  
நிகரில்லா 
அளவுகோல்
இறப்பு பற்று...!
  
பிறப்பு இறப்பு 
கணக்கிடப்படுகிறது 
உத்தமர்கள்...!
குறள் 23: 
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
நன்மை தீமை 
களைவது 
நல்லோர் பண்பு...!
இம்மை 
மறுமை 
துறந்தோர் ஞானி...!
இரண்டில் ஒன்றை
அறுத்தவர்
உலகில் நிலைப்பார்...!
தீமையில்லா 
பேரும் புகழும்
பிறப்பு வீடு...!
குறள் 24: 
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
துறவற நிலத்தின் 
விதைகள் 
ஐம்பொறிகள்...!
நல் விதைகள் 
நாற்றமற்ற ஆசை
வீடுபேறு...!
ஐம் புலன்கள் 
உறுதி அங்குசம்
இறைவனுக்கு சமம்...!
குறள் 25: 
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
அடங்கா ஆசைக்கு 
அடங்குபவர் 
இந்திரன்...!
புலன் வழி 
அறுத்தவன் 
உலகின் கோமான்...!
ஐய்புலன் 
ஒழித்தவன் 
வான்புகழ் மன்னன்...
குறள் 26: 
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
பிச்சைக்காரன்
இரத்த தானம் 
மேன்மக்கள்...!
பணக்காரனிடம் இல்லை 
ஏழையிடம் உள்ளது 
தான தருமங்கள்...!
இறைவனின் பண்பு 
மகனிடம்
சிறியோர்  பெரியோர்..!
குறள் 27: 
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
ஐந்தின் சுவை 
மறந்தவன் 
மனித கடவுள்...!
சுவை அறுத்தவன் 
பின்...
வசப்படும் உலகம்...!
ஆறில் ஐந்தை 
அறுப்பவன் 
அறிவில் உயர்ந்தவன்...!
குறள் 28: 
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
இம்மை மறுமை 
பேசும் நூல்கள்
இறவா மக்கள்...!
நிறைமொழி 
மறைமொழி
அழியா மந்திரம்...!  
நாவின் சுத்தம் 
நூலின் வடிவில் 
சான்றோர்கள்...!
குறள் 29: 
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
நற்ப்பண்பு 
சிலநொடியில் அழிந்திடும்
பெரியோர் கோவம்...! 
நிலைக்கவில்லை 
பெரியோர் கோவம்
நீரின் மேல் எழுத்துப் போல்...! 
மலை துளி கோவம் 
புன்னகை தாகம் 
பெரியோர்பண்பு...! 
குறள் 30: 
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
அண்ட உயிர்களுக்கு 
அன்பு செலுத்துபவன் 
அந்தணர்...!
உலகின் 
சரி பாதி
அந்தணர் அன்பு...!
நிறைவோ குறைவோ 
அறியா அந்தணர் 
அன்பில் உயர்ந்தவர்...!
குறள் 31: 
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
செல்வம் சிறப்பு
ஈடில்லை
நல்லறம்...!
மழை செழிப்பு 
மனிதன் சிறப்பு 
நல் அறவழி....!
சொலவம் சிறப்பு 
இல்லா மனிதன் 
உயிரற்ற பொம்மை...!
குறள் 32:
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
கோடிக்கேடு 
ஒரே அறம் 
தீரும் பாவங்கள்...!
அறத்தை மறந்தவன் 
அறிவை இழக்கிறான் 
தீயநிலத்தில்...!
நன்மை விளையும்
நிலத்தில் 
மேன்மை செழிக்கும்...!
குறள் 33:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
சமத்துவத்தின் 
சந்நிதானம் 
அறம்...!
தீயவருக்கும் 
தேடிப்புரிக
அறச்செயல்கள்...!
ஜாதிமாதம் பார்க்கா 
நல்லறம் 
நல் மோட்சம்...!
குறள் 34:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 
ஆகுல நீர பிற.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
வெளுத்த ஆடை 
அழுக்கில்லா மனம் 
ஆடம்பரமில்லா வாழ்க்கை...!
குற்றம் கலைந்தவன் 
சுற்றம் பெருகும் 
அன்பின் வாசல்...!
வேடங்கள் பலவானாலும் 
பாவங்களில்லா மனிதன் 
உலகின் கண்...!
குறள் 35:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
அறவழிப் பயணம் 
தொடர்கிறது...
அழுக்கின் நான்கு...!
தீயஆசை பொறாமை 
கோவம் அறுத்தது 
பரிசுத்த ஆன்மா...!
அடுத்தவன் புகழ் 
வாழ்க்கையின் படிக்கட்டு 
நான்கை விலக்கினால்...!
குறள் 36:
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
நொடிகள் மறவா 
அறம்...
இறவாபடிகள்...!
உடலின்றி துணை 
உலகில்
காலம் கடத்தா அறம்...!
வயதுகள் தேடா நல்லறம் 
வாழ்கையின் 
துணை வரம்...! 
குறள் 37:
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
இறைவன் பல்லாக்கு  
இதயமும் சென்றது 
அறம் துறந்தார்...!
இன்பம் துன்பம் 
பல்லாக்கில் இல்லை 
அறத்தில் உள்ளது...!
அளவில்லா அறம்
ஆண்டவன் பல்லாக்கு
துறந்தார் தீயவழி...! 
குறள் 38:
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
வாழும் நாள் 
வாழ்க அறம்
பிறவா கல்...!
கழியா அறம் 
கைமேல் பலன்
வாழ்க்கை சீர்...!
பிறவிதுறவறம் 
ஈடில்லா நாட்கள் 
திரும்பா கல்...!
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
புறத்த புகழும் இல.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
தூயறம் 
இன்பத்தருணம்
வாழ்க புகழ்...!
அறத்தின் இன்பம் 
ஆழ்கடல் துன்பம் 
தூய மனது..!
அறத்தை நாடதோர்
பிறவழி இன்பதுன்பம் 
பேர் அற்றது...!
குறள் 40:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.

ஹிஷாலீ சென்ரியுக்கள் 
சிறார் திறமை 
பெரியோர் புகழ்வது 
உயர்ந்த அறம்...!
புகழ் மறந்து 
அறம் புரிந்தது 
பழியாபுகழ்...!
பழி பாவம் 
தீர்க்கும் மருந்து 
அறனே...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145