பிரியாத உடலை |
பிரித்துக்காட்டும் கலை |
மருத்துவம் ...! |
நிர்வாணமாய் |
நீல வண்ணப் பாடத்தில் |
உணர்ச்சியுள்ள ஆதம்ஏவாள் |
நெய் சோறு |
வேலைக்காரிக்கு |
நாயின் மிச்சம் |
ஜாதிமதம் |
ஒழிப்பு |
ரத்த தானம் |
எண்ணற்ற உயிர்கள் |
பூமியில் இளைப்பாறுகிறது |
சுமைதாங்கிகள் |
கடந்த நாட்கள் |
இன்றும் |
கவிதை... |
முகப்புகள் கிழிந்தது |
குப்பைதொட்டியில் |
புத்தகம் |
கல்லறை தொடா மானிடர்கள் |
தஞ்சம் காற்றின் சுவாசத்தில் |
கைம்மாறு கருதாதவர்கள் |
அகிம்சையின் சுதந்திரம் |
தபால்தலை வாங்கும் ரூபாய் நோட்டில் |
தியாகியின் அடையாளம் |
அடுக்குமாடி |
அழகு பொருள் |
திறவா காப்பியங்கள் |
சுடும் வெந்நீரில் |
சுவையான நினைவுகள் |
மன்னிப்பு. |
வரி வாங்க விற்க |
வாழ்க்கை வயதில் நிற்க |
ஏலம் போகிறது பணம் |
வஞ்சத்தில் பஞ்சத்தை தேடுகிறான் |
பசிக்கும் ருசிக்கும் |
திருடியவன் |
காயிச்சி வடித்தாலும் . |
வெகு தூரமில்லை ... |
மரணம் ! |
சட்டத்தில் ஓட்டை |
இருகரம் இணைகிறது |
சாக்கடையுடன் சந்தனம் |
வெட்கத்தை மறந்து |
துக்கத்தில் பசியாற்றுகிறாள் |
விலை மாது |
விலைக்கு குழந்தையானவள் |
விரும்பாத தேகத்தில் |
விதைக்கிறாள் HIV |
தமிழில் விதைத்த கல்வி |
அறுவடையாகிறது |
ஆங்கிலத்தில் |
சிகரட்டில் இதயம் இறக்கும் |
எழுதுகோலில் எண்ணம் பிறக்கும் |
இருவிரல் துணையுடன் .... |
மொழியுமில்லை |
இசையுமில்லை |
மழலையின் சிரிப்பழுகையில் |
ஹிஷாலீ ஹைக்கூ - 6
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...