கவிச்சூரியன் - அக்டோபர் - 2017

புழுங்கிய வானம்
உப்புக்கரிக்கிறது
மழைத்துளிகள்

மொட்டை மரம்
அழகாக படர்ந்திருக்கிறது
வெற்றிலைக்கொடி

குளிரும் ஆற்றில்
மிதந்து செல்கிறது
மேகம்

நாவைப் போலவே
வறண்டு கிடக்கிறது
விவசாய பூமி

கசங்கியபடியே
நிறம் மாறுகிறது
தலையணைப் பூக்கள்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145