கவியோடு பிறந்த தமிழமுதே -எங்கள் |
செவியோடு இனிக்கும் நின் புகழினிதே ! |
கனவோடு சிதைந்தோர் மனமதிலே -உன் |
கழைக்கூத்தியின் காதல்பேசும் நூலினிதே ! |
அமிழெது விஷமெதுவென ஏற்றப்பாட்டு -ஒன்றே |
இளைஞர் இலக்கியமென்று வாழ்தலினிதே ! |
கனமதில் காதல்கொள்ளும் மனங்களிலே -நல் |
இன்பக் கடலினில் மூழ்கிடும் தேனிதே ! |
தலைமையோடு புகழோங்கும் மலரினிலே -நாளும் |
தலைமலை கண்ட தேவரினிதே ! |
திகழொடு தாழ்ந்தோர் மணந்தனிலே -எங்கும் |
தித்திக்கும் சுடர்முத்த நல் தீர்ப்பினிதே! |
கற்கண்டு சுவைமனக்கும் காதல் நினைவினில் -நற் |
கருணை பேசும் கடல்மேற் குமிழினிதே ! |
கவிதொடுக்கும் கதராடைப் பாட்டுதனிலே -புரட்சி |
காப்பியம்பேசும் தமிழச்சின் கத்தினிதே ! |
மயிலமுது குயிலின் இருண்ட வீடுதனிலே - நல்கும் |
முல்லைக்காடு இசைக்கும் அழகின்சிரிப்பினிதே |
மானுடம் போற்று குறிஞ்சித்திட்டுதனிலே -புதுவை |
மக்கட்பேறு போற்றும் குடும்பவிளக்கினிதே ! |
பாவேந்தர் பாரதிதாசன் 125ஆவது பிறந்தநாள் விழா
Labels:
தமிழ் மொழிக் கவிதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...